All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் முடிவிலி-1

Nanthu Sara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு அழகான நடுத்தர குடும்பம்.ஒரு பௌர்ணமி நாளன்று அவன் பிறந்தான்.ஜோதிடர் அவனது ஜாதகத்தைக் கணித்துவிட்டு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்...

செல்வம் இல்லை என்றாலும் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டான்.

அக்கம்பக்கம் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனை தனது 6-ம் வயதில் 1-ம் வகுப்பில் சேர்த்தனர்.
அதுவரை பசங்களுடன் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த அவனுக்கு அங்கு உள்ள பொண்ணுங்க புதிதாக தெரிய வாய்ப்பில்லை.ஏனெனில் அதற்கான வயது அது இல்லை.இருப்பினும் அவன் பொண்ணுங்களோடு அவ்வளவு பேசவில்லை காரணம் அவனது நண்பர்களுடன் விளையாடவும் படிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

முதல் மதிப்பெண் எடுப்பதுதான் அவனது முதல் கடமையாக இருந்தது.அதற்கு காரணம் இருக்கிறது.

முதல் மதிப்பெண் என்றால் பாராட்டுகள் கிடைக்கும்.நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்பதெல்லாம் அந்த வயதில் புரிய வாய்ப்பில்லை.முதல் மதிப்பெண்ணை மட்டும் வைத்து சாதிக்க முடியாது என்றும் அப்போது தெரிய வாய்ப்பில்லை.
காரணம் ஒன்று தான்...

அவனுக்கு பொம்மைக் கார்கள்,வண்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.வீட்டிற்குள்ளே சாக்பீஸ் வைத்து சாலைகளைப் போல வரைந்து அதன் மீது பொம்மைக் கார்களை ஓட்டி விளையாடுவான்.

அவனது 1-ம் வகுப்பில் முதல் முறையாக தேர்வு வைத்தார்கள்.அப்போது எல்லாம் சிலேட்டில் தான் எழுதுவார்கள்.அவனது சிலேட்டில் அவனது மதிப்பெண் 85 என்று இருந்தது.அது தான் மதிப்பெண் என்று எல்லாம் அவனுக்கு தெரியாது.அவனது நண்பன் சிலேட்டில் 90 என்று இருந்தது..அவனுக்கு மதிப்பெண் என்று தெரியவில்லை என்றாலும் 123... தெரியும்..அவர்கள் அந்த சிலேட்டை வைத்து கார் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்.

“டேய் நான் தான் முன்னாடிப் போவேன் என்று முந்தி சென்ற நண்பனை நான் தான் முதலில்” என்று தடுத்தான் கிருஷ்ணன்.

“நான் 90-வது நம்பர் வண்டி டா நீ 85-வது தான் நான்தான் முதலில் போவேன்” என்றான் அவனது நண்பன்.

“எனக்கு மட்டும் எதுக்கு மிஸ் 85 எனக்கும் அதிகமா நம்பர் வேணும்னு” அடம் பிடித்தான் கிருஷ்ணன்.

“நீ நல்லா படிச்சு தேர்வு எழுதுனா நீயும் பெரிய நம்பர் வாங்கலாம்னு” ஆசிரியர் சொன்னார்.

அவ்வளவு தான் அடுத்த தேர்வில் கிருஷ்ணன் தான் முதல் மதிப்பெண்.”இப்போது நான்தான் டா முதல போற வண்டினு” சந்தோஷமா விளையாடினான்.

காலம் இப்படியே மகிழ்ச்சியாக சென்றது...

5-ம் வகுப்பை எட்டினான் கிருஷ்ணன்.அவன் அதுவரை முதல் மதிப்பெண் என்ற நிலையை விட்டுக்கொடுக்கவில்லை.யாரு முதல் மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்கள் தான் வகுப்புக்குத் தலைவர் என்று ஆசிரியர் கூறினார்.

முதல் மதிப்பெண் என்று அதற்காகவே பிறந்த கிருஷ்ணண் வகுப்புத்தலைவனாக நியமிக்கப்பட்டான்.
அதுவரைப் பெண்களிடம் பேசாமல் இருந்த அவனுக்கு அதற்கான கட்டாயம் ஏற்பட்டது..வகுப்பில் பேசிய ஒரு பெண்ணின் பெயரை கரும்பலகையில் எழுதினான்.

“எதற்காக என் பெயரை எழுதுன” என்று அந்த முதல் பேச்சே மோதலில் தான் தொடங்கியது..

இந்த கதையும் தொடங்குகிறது.......சந்திப்போம்
 
Top