saranya R
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடலின் கலை....
கடல்…...
மழலைகளுக்கு மகிழ்வின் அங்கமாய்
சிலருக்கு கண்முன் காட்சிப்பொருளாய்
சிலருக்கு காதலின் பிறப்பிடமாய்
சிலருக்கு தாயின் மடியாய்
சிலருக்கு துன்பம் தொலைக்குமிடமாய்
இன்னும் சிலருக்கு தனிமையின் தேவலோகமாய்..
கடலின் சிவப்பு…...
இதோ அதோ என்று மறைந்து விளையாடும் கதிரவன்
கதிரவன் கரம் தீண்டி சிவந்து விட்ட வானம்
உடல் சீலிர்த்த உப்புகாற்றில் உலர்ந்து போனா இருஜோடி இதழ்கள்
காதலென்னும் பருவமழையில் முழுதாய் நனைந்துபோக
சிவந்த வானமும் சோகம் கொண்டது
தன்னை காட்டிலும் அதிகமாய் சிவந்து போன பெண்ணவளின் வெட்கம் கண்டு….
கடலின் ஏமாற்றம்…...
தன்னவனை ஆட்க்கொள்ள நித்தமும் போர் தொடுக்கும் பெண்ணவள்
எல்லை செல்கையிலே ஏமாற்றம் கொள்கிறாள்
ஒரு அடி அவள் முன் வைக்க ஈரடி அவன் பின் வைப்பதால்
அலையின் காத்திருப்பு….
ஓயாமல் ஓடி வருகிறேன்
என் கரை என்னும் காதலனை
கட்டி தழுவிட காதலனோ
கண்டும் காணமால் இருக்கிறான்
இருப்பினும் காத்திருக்கிறேன்
ஒரு முறையேனும் அவனை ஆர தழுவிட…
நீ ஓடி வருகையில் அள்ளி அணைத்திடவே நினைத்தேனடி அவ்வாறு செய்துவிட்டால்
என் மேல் நின்று என்னை போல் உன்னை ரசிப்பவர்கள்அழிந்து போவார்களடி
ஆதலாலே உன்னை தழுவிட தயங்குகிறேனடி
கடல் ஓர் அதிசயம்...
உலகின் முதல் அத்தியாயம்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
காலம் மறந்து காட்டி போடும்
பேரண்டம்
தனிமை தவத்திற்கு இன்னிசை
மீட்டும் இசையரங்கம்
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்…
ஒருவகையில் அதிசயம்
ஒருவகையில் ஆச்சிர்யம்
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடலில் என் காதலி…..
ஆழ்கடலை ரசிக்கும் ஆழியே
அதிக நேரம் கடற்கரையில்
நின்றுவிடாதே பெண்ணே..
மணற்பரப்பில் மலரென்று
முளைத்ததாய்
காண்பவரெல்லாம்
கருதநேரிடம்.
வலி தொலைக்கும் இடம்...
மனம் முழுதும் மாயவள் இருக்க
விழி முழுதும் அவள் தந்த வலியால் நயணநதியில் நிரம்பி இருக்க
வலி தொலைக்கும் இடமாய்
உவர்நீரின் கரையில் கால் நோக நின்றேன்
அவ்வுவர் நீரும் நுரை அலையும்
என் மன வலியை மட்டுப்பட
செய்திடாதா என்று
அலைபெண்ணின் கேலி...
அந்திசாயும் வேலை ஆதவனை காண
அவன் பிறப்பிடம் வந்தேன்
பூங்காற்றுடன் தனிமையில் பேச
பூங்காற்றும் என்னை வருடி சென்றது
ஆனால் மெளனம் கொண்டது
பூந்தென்றலின் மெளனம் என்னை கொல்ல.
சோகம் முகத்தில் சூடிக்கொள்ள
இதமாக பூந்தென்றல் என்னை வந்து அணைத்து செல்ல..
ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி
என் கால்களை முத்தமிட்டு சென்றாள்.
சில்லென்ற ஈர முத்தத்தில் என்னை நான் மறக்க
அவள் தன் முத்தத்தால் என் கால்களை நனைக்க..
என் மனம் தடுமாறி பூந்தென்றலை மறந்தது
கோபம் கொண்ட தென்றலவள் வேகம் கொண்டு வீச மொத்தமாய் தடுமாறி விழ்ந்தேன்
என் காலில் முத்தமிட்டவள் மெல்ல நகைத்த வண்ணம் அழைப்பு விடுத்து செல்ல.
மழலையென நானும் அவளுடன் துள்ளி சென்றேன்
அவளுக்குள் மூழ்கும் ஆதவனை
கண்டு என் விழி சிவக்க.
முத்தமிட்டு சென்றவள் மேனியும் செங்காந்தலாய் சிவக்க.
மீண்டும் என்னிடம் வருவாள் என்று எண்ணியிருந்தேன்
அவளோ மாற்றான் பாதம் தேடி சென்றாள்
அதை கண்டு விழி விரித்து நின்றேன் நான்
தென்றலவள் என்னை பார்த்து நகைக்க
வானமும் என்னை கண்டு கேலி புன்னகை உதிக்க
முகம் கும்பி நின்ற என்னை நகையுடனே வந்து
அணைத்து கொண்டாள் தென்றல் மகள்
சீல்லென மேனி பதுணையாய் தொடர்ந்து வந்தாள்…..
கடலின் கோபம்…..
அமைதியின் சொருபம் நான்
என் அமைதியை அழிக்க
நினைக்கிறான்
மனிதம் அற்ற மனிதன்
என்னில் எத்தனை அசுத்தங்கள
என்னில் எத்தனை பிணங்கள்
நானும் பெண்ணே என்னில்
எத்தனை சிதைந்த பெண்ணின்
சடலங்கள்
மழலை சிரிப்பில் மகிழும்
நான் என் மழலைகள் மரித்து
என் மடியில் கிடப்பதை கண்டு
துடிக்கிறேன்
என் பொறுமைக்கும் எல்லை உண்டு
எல்லை தாண்டும் நொடி அழிவின் ஆரம்புள்ளியின் முதலடி
ஆழியலை…..
அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆளும் அகண்ட ஆழியண்டம்
அடங்கும் அனைத்தின் எதிர்வினையாய்
ஆழிபேரலையாய் ஓர் நாள் பொங்கும்
உலகை மறந்து உலமார்ந்து தன்னை ரசிப்பவர்களை உருகுலைத்து வாரிச்செல்லும்
அதன் வலிபெருகும் போது….
ஹாய் அக்காஸ் என்டு ஃபரேன்ஸ் மறுபடியும் நான் தான் ரொம்ப நாள் சென்று ஒரு கவிதை ....
கடலின் கலை
அம்மான யாருக்கு தான் பிடிக்காது அந்த dialogue மாதிரி தான்
கடல் னா யாருக்கு தான் பிடிக்காது அந்த கடலை மையமாக வைத்து எழுதிய என் கிறுக்கல் எப்படி இருக்குனு சொல்லிடு போங்க pls....
பிடித்தாலும் சொல்லுங்க பிடிக்கல நாலும் சொல்லுங்க...
கடல்…...
மழலைகளுக்கு மகிழ்வின் அங்கமாய்
சிலருக்கு கண்முன் காட்சிப்பொருளாய்
சிலருக்கு காதலின் பிறப்பிடமாய்
சிலருக்கு தாயின் மடியாய்
சிலருக்கு துன்பம் தொலைக்குமிடமாய்
இன்னும் சிலருக்கு தனிமையின் தேவலோகமாய்..
கடலின் சிவப்பு…...
இதோ அதோ என்று மறைந்து விளையாடும் கதிரவன்
கதிரவன் கரம் தீண்டி சிவந்து விட்ட வானம்
உடல் சீலிர்த்த உப்புகாற்றில் உலர்ந்து போனா இருஜோடி இதழ்கள்
காதலென்னும் பருவமழையில் முழுதாய் நனைந்துபோக
சிவந்த வானமும் சோகம் கொண்டது
தன்னை காட்டிலும் அதிகமாய் சிவந்து போன பெண்ணவளின் வெட்கம் கண்டு….
கடலின் ஏமாற்றம்…...
தன்னவனை ஆட்க்கொள்ள நித்தமும் போர் தொடுக்கும் பெண்ணவள்
எல்லை செல்கையிலே ஏமாற்றம் கொள்கிறாள்
ஒரு அடி அவள் முன் வைக்க ஈரடி அவன் பின் வைப்பதால்
அலையின் காத்திருப்பு….
ஓயாமல் ஓடி வருகிறேன்
என் கரை என்னும் காதலனை
கட்டி தழுவிட காதலனோ
கண்டும் காணமால் இருக்கிறான்
இருப்பினும் காத்திருக்கிறேன்
ஒரு முறையேனும் அவனை ஆர தழுவிட…
நீ ஓடி வருகையில் அள்ளி அணைத்திடவே நினைத்தேனடி அவ்வாறு செய்துவிட்டால்
என் மேல் நின்று என்னை போல் உன்னை ரசிப்பவர்கள்அழிந்து போவார்களடி
ஆதலாலே உன்னை தழுவிட தயங்குகிறேனடி
கடல் ஓர் அதிசயம்...
உலகின் முதல் அத்தியாயம்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
காலம் மறந்து காட்டி போடும்
பேரண்டம்
தனிமை தவத்திற்கு இன்னிசை
மீட்டும் இசையரங்கம்
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்…
ஒருவகையில் அதிசயம்
ஒருவகையில் ஆச்சிர்யம்
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடலில் என் காதலி…..
ஆழ்கடலை ரசிக்கும் ஆழியே
அதிக நேரம் கடற்கரையில்
நின்றுவிடாதே பெண்ணே..
மணற்பரப்பில் மலரென்று
முளைத்ததாய்
காண்பவரெல்லாம்
கருதநேரிடம்.
வலி தொலைக்கும் இடம்...
மனம் முழுதும் மாயவள் இருக்க
விழி முழுதும் அவள் தந்த வலியால் நயணநதியில் நிரம்பி இருக்க
வலி தொலைக்கும் இடமாய்
உவர்நீரின் கரையில் கால் நோக நின்றேன்
அவ்வுவர் நீரும் நுரை அலையும்
என் மன வலியை மட்டுப்பட
செய்திடாதா என்று
அலைபெண்ணின் கேலி...
அந்திசாயும் வேலை ஆதவனை காண
அவன் பிறப்பிடம் வந்தேன்
பூங்காற்றுடன் தனிமையில் பேச
பூங்காற்றும் என்னை வருடி சென்றது
ஆனால் மெளனம் கொண்டது
பூந்தென்றலின் மெளனம் என்னை கொல்ல.
சோகம் முகத்தில் சூடிக்கொள்ள
இதமாக பூந்தென்றல் என்னை வந்து அணைத்து செல்ல..
ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி
என் கால்களை முத்தமிட்டு சென்றாள்.
சில்லென்ற ஈர முத்தத்தில் என்னை நான் மறக்க
அவள் தன் முத்தத்தால் என் கால்களை நனைக்க..
என் மனம் தடுமாறி பூந்தென்றலை மறந்தது
கோபம் கொண்ட தென்றலவள் வேகம் கொண்டு வீச மொத்தமாய் தடுமாறி விழ்ந்தேன்
என் காலில் முத்தமிட்டவள் மெல்ல நகைத்த வண்ணம் அழைப்பு விடுத்து செல்ல.
மழலையென நானும் அவளுடன் துள்ளி சென்றேன்
அவளுக்குள் மூழ்கும் ஆதவனை
கண்டு என் விழி சிவக்க.
முத்தமிட்டு சென்றவள் மேனியும் செங்காந்தலாய் சிவக்க.
மீண்டும் என்னிடம் வருவாள் என்று எண்ணியிருந்தேன்
அவளோ மாற்றான் பாதம் தேடி சென்றாள்
அதை கண்டு விழி விரித்து நின்றேன் நான்
தென்றலவள் என்னை பார்த்து நகைக்க
வானமும் என்னை கண்டு கேலி புன்னகை உதிக்க
முகம் கும்பி நின்ற என்னை நகையுடனே வந்து
அணைத்து கொண்டாள் தென்றல் மகள்
சீல்லென மேனி பதுணையாய் தொடர்ந்து வந்தாள்…..
கடலின் கோபம்…..
அமைதியின் சொருபம் நான்
என் அமைதியை அழிக்க
நினைக்கிறான்
மனிதம் அற்ற மனிதன்
என்னில் எத்தனை அசுத்தங்கள
என்னில் எத்தனை பிணங்கள்
நானும் பெண்ணே என்னில்
எத்தனை சிதைந்த பெண்ணின்
சடலங்கள்
மழலை சிரிப்பில் மகிழும்
நான் என் மழலைகள் மரித்து
என் மடியில் கிடப்பதை கண்டு
துடிக்கிறேன்
என் பொறுமைக்கும் எல்லை உண்டு
எல்லை தாண்டும் நொடி அழிவின் ஆரம்புள்ளியின் முதலடி
ஆழியலை…..
அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆளும் அகண்ட ஆழியண்டம்
அடங்கும் அனைத்தின் எதிர்வினையாய்
ஆழிபேரலையாய் ஓர் நாள் பொங்கும்
உலகை மறந்து உலமார்ந்து தன்னை ரசிப்பவர்களை உருகுலைத்து வாரிச்செல்லும்
அதன் வலிபெருகும் போது….
ஹாய் அக்காஸ் என்டு ஃபரேன்ஸ் மறுபடியும் நான் தான் ரொம்ப நாள் சென்று ஒரு கவிதை ....
கடலின் கலை
அம்மான யாருக்கு தான் பிடிக்காது அந்த dialogue மாதிரி தான்
கடல் னா யாருக்கு தான் பிடிக்காது அந்த கடலை மையமாக வைத்து எழுதிய என் கிறுக்கல் எப்படி இருக்குனு சொல்லிடு போங்க pls....
பிடித்தாலும் சொல்லுங்க பிடிக்கல நாலும் சொல்லுங்க...