All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே" - கதை திரி

Status
Not open for further replies.

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..

நான் அக்ஸரா தேவ்.. உங்கள் ஆதரவோடு ஒரு கதை எழுதலாம்னு வந்திருக்கேன்.. நிறையோ குறையோ வெளிப்படையா சொல்லிட்டீங்கன்னா இந்த குழந்த பிள்ளைக்கு அடுத்த லெவலுக்கு போக ரொம்ப உதவியா இருக்கும்.. கேட்ட உடனே த்ரெட் ஓபன் பண்ணி தந்த ஶ்ரீ மேம்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. 🙂

கதையின் பெயர் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

நாயகன் : சூர்யா
நாயகி : அனு மித்ரா

காதலை மட்டுமே மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் சிலரின் சூழ்ச்சியால் பிரியும் நிலை வந்தால்?? அவர்களின் காதல் அவர்களை மீண்டும் சேர்க்குமா??

வாரத்திற்கு இருமுறை அப்டேட் தரேன்.. புதன்கிழமை முதல் அத்தியாயம் தரேன்.

இப்போ சின்னதா ஒரு டீசர் :

"நீ ஏன்டா என்னை விட்டுட்டு போன? நீ இல்லாத ஒவ்வொரு நிமிடமும் நரகமா இருக்குது.. என்னை பத்தி நினைக்கல சரி நம்ம பாப்பாவை பத்தியும் நினைக்க தோணலையா? நாங்க ரெண்டு பேரும் உனக்கு வேண்டாதவங்க ஆகிட்டோம்ல.. ஏன் இப்படி பண்ணுன? உன்னை உயிருக்கு உயிரா காதலிச்சதுக்கு நீ தந்த பரிசு இதுதானா? நீ இல்லாத என் வாழ்க்கை வெறுமைன்னு தெரிஞ்சும் எப்படிடா உன்னால என்னை விட்டுட்டு போக முடிந்தது? சொல்லு" என்று அவன் நெஞ்சில் அடித்து கதறி அழுதாள் அவள் அனு மித்ரா..

அவளின் மேல் அளவுக்கடந்த காதல் இருந்தும் அதை வெளியே சொல்ல முடியாத அதுவும் தன் மகவை சுமக்கும் இந்த நேரத்தில் அவளை அழ வைத்ததற்காக தன்னையே வெறுத்தவன் கண்களில் வழியும் கண்ணீரை அவளுக்கு காட்டாமல் இருக்க திரும்பி நின்றான் அவள் கணவன் சூர்யா.. அவளின் ஸ்ரீ..

"இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு கல்யாணம்.. இந்த நேரத்தில் இப்படி பேசுறது உனக்கு சரியாக படுதா அனு?" அவன் குரலில் கடுமையை கொண்டு வர நினைத்தாலும் முடியவில்லை..

"என்ன சொன்ன? அனுவா ? உன் மீராவை உன் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டியா? நான் உயிரோடு இருக்கும் போது உனக்கு இன்னொரு கல்யாணமா? அத நான் செத்ததுக்கு அப்புறம் நடத்து"...

அவள் பேசிக் கொண்டே செல்ல எல்லாவற்றையும் கேட்டவன் கடைசி வார்த்தையில் "ஏய்" என்று அடிக்க கை ஓங்கி விட்டான்.. அவள் கண்களில் மிரட்சியை கண்டவுடன் அவளை இழுத்து அணைத்து கொண்டான்..

அவன் தேகம் நடுங்கியது.. என்ன வார்த்தை சொல்லி விட்டாள்? அவள் இல்லாத ஒரு வாழ்வா? அவள் காதலை அணு அணுவாய் ரசித்து அனுபவித்தவன் ஆயிற்றே.. கவிதாவை திருமணம் செய்தாலும் அவனால் அவளுடன் ஒன்றி வாழ முடியாது.. ஆனால் அவன் மீராவை பிரிந்தே ஆக வேண்டும்.. அவன் குழந்தையை பிரிய வேண்டும்.. அவர்களுக்கு எமனே மீராவின் தந்தை தானே.. அவரிடம் இருந்து அவர்களை காப்பாற்ற வழி பிரிவு மட்டுமே..

"இங்க பார் அனு.. உன் கஷ்டம் எனக்கு புரியாமல் இல்லை.. ஆனால் நாம பிரிஞ்சே ஆகணும்.. நீ நம்ம குழந்தையை நல்ல படியாக வளர்க்கணும். அவன் அப்பா செத்து போய்ட்டான்னு சொல்லு" என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல் நடந்தான்.. நாளை அவர்களின் விவாகரத்து.. மனம் கனக்க கண்களில் கண்ணீரோடு நடந்தான்..

அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியம் புரிந்த மீரா கத்தினாள்.. " இன்னும் அந்த ஒரே வாரத்தில் உன்னை நான் கல்யாணம் பண்ணி காட்டுறேன்.. அப்படி பண்ணலைனா நான் மிசஸ். சூர்யா இல்லை.. ஒரு வேளை நான் தோற்று போனால் அடுத்த நொடி உயிருடன் இருக்க மாட்டேன்" என்று கத்தியவள் தன் ஆறு மாத மேடிட்ட வயிற்றை தடவியவாறு நடந்து சென்றாள் ‌..

அவள் சொன்னதை கேட்ட சூர்யாவின் உதடுகள் சிரித்தன..
 
Last edited by a moderator:

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் ஒரு சின்ன முன்னோட்டம்..

"மீரா உன் கன்னம் எல்லாம் ஏன் இப்படி சிவந்து இருக்கு? உன் அப்பா ஏதாச்சும் அடிச்சிடங்களா?" என்று கேட்டவனை கொலை வெறியுடன் முறைத்து பார்த்தாள்.

"ஏண்டா இதை பாத்தா உனக்கு அடி பட்டு சிவந்த மாதிரியவா இருக்கு? கொஞ்ச முன்னாடி நீ பண்ணிட்டு போனியே அந்த செயலோட எஃபெக்ட்.. அப்பா அம்மா இருக்காங்க னு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? இப்டி பண்ணுற?"

அவள் குரலில் கோவத்தை விட வெட்கம் கொஞ்சம் தூக்கலாக இருந்ததோ?

"நான் என்ன பண்ணுனேன்?" என்று சிரித்து கொண்டே அவள் பக்கம் வந்தவன் "அத்தை மாமா முன்னாடி பன்னுனது தானே உனக்கு ப்ராப்ளம்.. இப்போ யாரும் இல்லைல" என்றவன் அவள் என்னவென்று யோசிக்கும் முன் அவள் இதழ்களை தன் வசப்படுத்தி இருந்தான்.. அவளும் அவன் செயலுக்கு வாகாக தன்னை ஒப்பு கொடுத்தாள். அவள் மூச்சு விட சிரமபடவும் அவள் இதழ்களுக்கு விடுதலை அளித்தவன் அவளோடு சேர்ந்து கட்டிலில் சரிந்தான்..

__________________________

"ஹே நீ யார கேட்டு உள்ள வந்த? அவளே உன்ன வேண்டாம் னு தானே விலகி இருக்கா. உனக்கு சுயமரியாதை வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாதா? அவ எவ்ளோ கேவலபடுத்தினாலும் ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம அவ காலடியிலேயே போய் விழுற? நீ எல்லாம் ஆம்பள தானே?" என்று அவர் காரமாக கேக்க அவரை ஒரு பார்வை பார்த்தவன், "நான் யாரோ மாதிரி குடும்பத்தை மதிகாம எவ கால்லயோ விழுந்து கிடைக்கல.. என் பொண்டாட்டி கால தான் புடிக்குறேன்.. அதுல எனக்கு எந்த கேவலமும் இல்ல.. எனக்கு அவ மட்டும் தான் .. வரட்டா மாமனாரே.." என்று வெளியேறினான்.. அவர் அதிர்ந்து நின்றார்..

__________________

"செல்லம் இன்னும் ஒண்ணே ஓன்னு டி.. அப்றம் நீ எங்கே வேணாலும் போகலாம்.." என்றவனை எதிர்பார்ப்புடன் பார்த்தாள் வருணி..

"நான் சாப்பிட மாட்டேன்.. எனக்கு வேண்டாம்.."

"என் பட்டுல.. இப்போ சமத்தா சாப்பிட்டா டிரஸ் எடுக்க கூட்டிட்டு போவேன்.."

"நிஜமா?" அவள் கண்களில் ஒரு பிரகாசம்..

அதை கண்டவன் உதட்டுல சிரிப்போடு மனதில் வலியோடு "கண்டிப்பா" என்று சிரித்தான்..

ஓடி அவன் அருகில் வந்தவள் "ஆ.." என வாயை திறந்தாள்.. அவனும் அவளுக்கு உணவை ஊட்டி தன் மடியில் படுக்க வைத்து தட்டி கொடுத்தான்.. அவனின் மடியிலே அவளும் உறங்கி போனாள்.. அவள் நெற்றியில் முத்தமிட்ட அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..
nice teaser
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே 4 ம் அத்தியாயம் பதித்து விட்டேன். கதை எப்படி போகுது ? இதுல ஏதாச்சும் குழப்புறேனா? யார் சஞ்சயை மாட்டி விட்டதுன்னு கெஸ் பண்ண முடியுதா? உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் டியர்ஸ்..

படிச்சு பாத்து சொல்லுங்க
nice epi
 
Status
Not open for further replies.
Top