All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உங்களோடு சில மனக்குமுறல்கள்

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெற்றோரின் சின்ன அலட்சியத்தில் சின்ன இளங்குருத்து கருகி விட்டது.

ஆழ்துளை கிணறு போட்டால் அதில் நீர் வரலைன்னா.. அதை முழுமையாக அடைக்க முடியாதா.. பணம் கொடுத்தால் அடைக்கும் வேலைகளையும் ஆழ்துளை கிணறு போடுபவர்கள் அடைத்துவிட்டு தான் போவார்கள்.. அட்லீஸ்ட்.. அந்த பகுதியை இரும்பு பலகைக் கொண்டாவது அடைத்திருக்கணும்.

அப்பறம் குழந்தை வெளியில் என்றில்லை.. வீட்டில் விளையாண்டாலும்.. தயவுசெய்து உங்க முழு கவனத்தையும் குழந்தையின் மேல் வையுங்க.. குழந்தையை விட ஃபோனோ டிவியோ, பக்கத்து வீட்டு பேச்சோ முக்கியமில்லை..

விஞ்ஞானிகளே.. உயிரை காக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கும் வரிசையில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..
விஞ்ஞானிகள் தான் கடவுள்கள்..

மீட்டெடுக்கும் வேலைகள் சரியா செய்யல, நிலாவில் ராக்கெட் விட்டவன்.. பூமிக்குள்ள போக மாட்டான்னா.. சீனாகாரன் கிட்ட பாடம் கத்துக்கோங்க.. இயற்கை வென்றுவிட்டது, விதி ..
என்ற நக்கல் கருத்துக்களை மூட்டி கட்டி வச்சுட்டு உங்க குடும்பத்தை ஒழுங்கா பார்த்துக்கோங்க.. தானே சமுதாயம் வளப்படும்.. தனி ஒருவன் இணைந்தது தான் சமுதாயம்..
 

Jeen

Well-known member
நான் srilankaவில் இருக்கின்றேன்.ஒரு அம்மாவாக என்னால் இதை தாங்கவே முடியவில்லை.
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தினம் தினம் நாம் படிக்கும் செய்தித்தாள்களில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் வராத பக்கங்கள் இல்லை.

இந்த கொடுமைகளில் இருந்து பெண்கள் பாதுகாக்க வேண்டும் எனில் சட்டங்கள் வலிமையானதாக இருக்கவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த காம பிசாசுகள் தண்டனையில் இருந்து தப்பக்கூடாது. அந்த தண்டனையை பார்த்த மற்றவருக்கு அந்த தவறான எண்ணம்மனதில் உதிக்கக்கூடாது.

அந்த அளவு சட்டங்கள் இயற்றப்பட்ட வேண்டும் . அப்பெழுது தான் பெண்கள் மதித்து போற்றப்படுவார்கள், அதுவரை பெண்களின் மீதான கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாது.

வலுவான சட்டத்தினால் தான் பெண்ணுக்கு இந்த உலகத்தில் சுதந்திரமாக இருக்க முடியாது. இதுவே நிதர்சனமான உண்மை.
 
Top