மௌனம்-2
கடைசியாக கிடைத்த தகவலின் படி , சக்தியை ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் சுற்றியுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தேட அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தேட சொல்லி மோகனிடம் சொல்ல ,
"டேய் இந்தியா என்ன சின்ன ஊரு நினைச்சியா?, எத்தனை மாநிலங்கள் , மாவட்டங்கள் , கிராமம் ... அடேங்கப்பா .. இப்போவே கண்ணை கட்டுதே.. ஒரு மாவட்டத்தில் குறைந்தது 20 மருத்துவமனைன்னு போட்டாலும் .. சான்ஸே இல்லை. . இது ரொம்ப நாள் எடுக்கும்.."
"அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குறியா? அவ ஆக்சிடென்ட் ஆகி, அவளை அங்க இருந்த மக்கள் ஹாஸ்பிடலில் சேர்த்துஇருந்தால், அவள் அதே ஊரில் தான் இருக்கனும். அவள் அங்க இருக்கலானு உன்னோட ஆளுங்களை விட்டு தேடு.. அவள் இல்லைனா, கண்டிப்பா அவளை எங்கேயோ மறைச்சு வச்சு தான் டிரீட்மென்ட் குடுத்துட்டு இருக்கனும்.. அதுவும் பெரிய ஹாஸ்பிடலில் வச்சு தான் டிரீட்மென்ட் குடுத்துஇருப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் அவளை இடம் மாத்தியிருக்கணும். அதுக்கேத்த மாறி நீ தேடு.. எனக்கு அவ வேணும்.."
"நீ இவ்வளோ துடிச்சு நான் பார்த்ததில்லை. உனக்காக என்னோட சிஸ்டர் சக்தியை சீக்கிரமே கண்டுபிடித்து தருகிறேன். " என்று கூறிவிட்டு வெளியேறினான்.
ரிஷி மீண்டும் சக்தியை நினைக்க, அவனது காதில் ,'ரிஷி..' என்று சக்தி அழைக்கும் குரல் கேட்டு, அருகில் இருந்த எல்லாவற்றையும் போட்டு உடைக்க தொடங்கினான்.
காரை எடுத்துக்கொண்டு வேகமாக அவள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அங்கேயே நின்று சக்தியை நினைத்துகொண்டு இருந்தான்.
அந்தநேரம் மழை பொழிய, அவன் எதையும் கண்டுகொள்ளாமல் , சக்தியின் நினைத்து கொண்டு இருந்தான்.
வாழ்க்கையில் பிடித்தம் இல்லாதபோது , வாழ்வை வசந்தமாக்கியவளின் நினைவில் தனது கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு இருந்தான் ரிஷி .
************************************************************************************************
கல்லூரியில் கலை நிகழ்ச்சி விழாக்கள் நடக்க , பாட்டு ,நடனம் என மாணவ மாணவியர்கள் பங்குகொள்ள அந்த வளாகமே கொண்டாட்டத்தில் மகிழ்ந்து இருந்தது .
ஆண்கள் நடனம் ஆட, அவர்களுடன் சேர்ந்து கீழே மாணவர்களும் குழுக்களாக பிரிந்து நடனமாடிக்கொண்டு இருந்தனர். அங்கே மகிழ்ச்சியின் உட்சத்தில் அனைவரும் இருக்க, பெண்களின் நடனம் அரங்கேறதொடங்கியது .
ஒரு பெண்நடுவில் தனது முகத்தை மறைத்தபடி , பாடலுக்கு ஏற்றவாறு மயில் போலநடனம் ஆட , முதலில் ஆர்வமில்லாமல் இருந்தவன் ,
Dwaraganae Irulum Oliyum Iruvizhi Arugae Thurathiduthae Irudhayathin Thunaiyaga Nee Irukka Maataya
Iruvaligal Santhikikum Idathil Kaalgal Irandum Kulambiduthae En Paathai Solvaya
Dhevagaiyin Nandalala Thisai Ethu Solvaya
Brindhavana Nandakumara Sahiyin Venduthal Arivaya
Neengamal Varuvaya Nagam Polae Pirivaya
Navaneetha Muralimanohara Nangaiyin Manathai Purivaya Purakanithae Selvaya
En Sogangal Theerpaya En Thaagangal Theerpaya
பாட்டின் வரிகளில் பாடியவளின் குரல் இனிமையில் தன்னை தொலைத்தவன் , மேடையை நோக்கி கண்களை திருப்ப, அதே நேரம் தனது முகத்தில் உள்ள திரையை விலக்கி, அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
Mann Mohana…. Mann Mohana….
Mann Mohana…. Mann Mohana….
En Uyir Kanna…..
Kaarmugil Vanna Vaarayo Kodhaiyin Kuralai Kelayo
Purushotamanae Un Uthatil Pullangulalai Thavalvaena Un Swasakatralae Uyirpetru Vaalvaena
Paarthibanae Un Paarvayilae Paargadal Amutham Peruvaena Pasithagam Marapaena
Un Gokula Thotathilae Gobiyar Avena
Vaalkaiyenum Kadalil Thinamum Alaiyin Melae Alai Adikka
Idhayam Enum Padagu Athil Thadumaari Modhiduthae
Thooyavanae Thudupugal Pottu Karaiyinil Etri Viduvaya
Nadukadalil Viduvaya Vasigara Vanumaali
En Vedhanai Theerainee
பாட்டிற்கு அவள் நடனம் ஆட , அவளை பார்த்தபடியே அமர்ந்து இருந்தான். அவளை பார்த்ததும் , அவளது விழிகள் பேசும் மொழிகளை அறிந்து அதில் முத்தமிட எண்ணியமனதை அடக்கிக்கொண்டான் ரிஷி.
அந்த கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்து இருந்த ரிஷி, ஆர்வமில்லாமல் இருக்க , அவனை தனது நடனத்தை ரசித்து பார்க்கவைத்தாள்.
நடனம் முடிந்து அவள் மேடையை விட்டு இறங்கி , தனது தோழிகளுடன் சேர்ந்துகொள்ள , அவனது விழிகள் அவளை சுற்றியே வலம் வந்தது. அதை கண்டுகொள்ளாமல் அவள் மகிழ்ச்சியாக வலம் வந்தாள். அவளின் தளிர் நிற மேனியில் சுதந்திரமாகஉலா வந்தது.
தனது உதவியாளர்க்கு(முரளி) அழைத்து ,விவரத்தை கூறி, அவளின் மொத்த ஜாதகத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அரைமணி நேரத்தில் வரவழைத்தான்.
வழக்கமான புன்னகையை முரளியை நோக்கி வீச , அதன் பார்வை புரிந்தவனோ, அந்த சிறு பெண்ணை நினைத்து மனதிற்குள் கதறியழுதது. முரளியால் எதுவும் செய்ய முடியாதபடி அவனது விசுவாசம் அவனை தடுத்து நிறுத்தியது. அடுத்த வேளைக்கு தேவையான உணவைக்கூட உழைத்து சம்பாதிக்கும் வர்க்கத்தில் பிறந்தவன் , தன் கண் முன்னால் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்கமுடியாமல் தலை குனிந்து நின்றான்.
ரிஷி, அவளது தகவல்களை பார்த்து பிரமித்து , அவளது பலவீனத்தில் அவளை அடிக்க தயாராகினான். அவனுக்கு தெரியவில்லை , அவளது பலவீனமே அவனை உயிரோடு கொல்லபோகிறதென்று.. தெரிந்து இருந்தால் . ஒருவேளை அவளை தவிர்த்து இருப்பானோ ..
‘இன்று இரவு என்னுடைய அடியில் ... நீயாக என்னை தேடி வருவாய் கண்மணி ....நான் உனக்காக எனது மஞ்சத்தில் காத்து இருப்பேனடி என் கண்மணியே..’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
பெண்ணவளை மஞ்சத்திற்கு மட்டுமே பார்க்கும் சில ஆண்கள், பலநேரங்களில் தனது தாயும் சகோதரியும் மனைவியும் குழந்தையும் பெண்கள் தானே என்பதை மறந்து விடுகின்றனர்.
ஒருவேளை நினைத்து இருந்தால் , அன்று டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை நேராமல் இருந்து இருக்கலாம். இன்னும் ஏராளமான பாலியியல் கொடுமைகள் குறைந்து இருக்கலாம்.
குழந்தை என்று கூட பார்க்காமல் , அவர்களிடமும் தனது தேவைகளை தீர்த்துக்கொள்ளும் ஆண்களை வீறுகொண்டு எழுந்து காளியை போல வதம் செய்து கொன்றால், இந்த தவறுகள் குறையுமோ.. வீறுகொண்டு எழும் தைரியத்தை ,அதற்கான வழிமுறைகளை பெண்குழந்தைகளுக்கு கற்று தருவது பெற்றோரின் கடமையாகிறது.
இப்படிபட்ட ஆண்களின் மத்தியில் , பெண்ணவளை மலரினும் மென்மையாக , அவளை நேர்கொண்ட பார்வையுடன் சந்திக்கும் ஒவ்வொரு ஆண்களுமே , இந்த உலகத்தில் இருக்கும் வரை பெண்மை மடியாது.
அந்த பெண் , பெண்மையை காப்பாற்ற வீறுகொண்டு எழுவாளா ?
*******************************************************************************************************************************
மும்பையின் பிரபலமான மருத்துவமனையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் இதயம்வேகமாக துடிக்க தொடங்கியது.
"டாக்டர் , பல்ஸ் ரொம்ப குறைவா இருக்கு .. சீக்கிரம் வாங்க .." என்று நர்ஸ் தீபா அழைக்க , டாக்டர் ரஞ்சன் வேகமாக சென்று அவளுக்கு தேவையான சிகிச்சைகள் செய்ய , அவளது பல்ஸ் நார்மலானது.
"யாரு டாக்டர் இவங்க .., நாம ஏன் இங்க வச்சு இவங்களுக்கு டிரீட்மென்ட் பார்க்கணும்.."
"ஷ் ஷ் ..... எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா தீபா.. இவங்கள யாரோ கடத்திவச்சு இவங்களுக்கு டிரீட்மென்ட் குடுக்குறாங்க .. ஒன்னு இவங்க VIP -யா இருக்கனும் .. இல்லைனா இவங்களையும் கடத்தி வச்சுஇருக்கணும். அவங்களுக்கு துணையா நம்மளையும் கடத்திட்டாங்க.."
"டாக்டர் .. என்ன சொல்லறீங்க.. நம்மளையும் கடத்திட்டங்களா?"
“தீபா, நீங்க டியூட்டிக்கு வந்து 3 நாள் ஆச்சு. இப்போவரை உங்களை இந்த அறையைவிட்டு வெளியே விடவில்லை..”
“சுமதிக்கு உடம்பு சரி இல்லை .. அதுனால நான் இருக்கேன். “
“அப்போ நான் ஏன் இங்கேயே இருக்கேன். யோசித்து பார்த்தீங்களா?” என்று ஒரு புருவத்தை தூக்கியபடி அவளிடம் பேச்சுக்குடுக்க , அவளது அதிர்ச்சியான முகத்தை பார்த்து ,
"ரொம்ப அதிர்ச்சியா இருக்கா . எனக்கும் இப்படி தான் இருந்துச்சு.. " என்று பெருமூச்சுவிட்டபடி தான் எவ்வாறு கட்டாயத்தின் பெயரில் இங்கே அடைத்துவைக்கபட்டு இருப்பதை எடுத்துக்கூறினார்..
தீபாவின் விரிந்த விழிகள் , அவளது கலக்கத்தைவெளிப்படுத்த , ரஞ்சன் அவளை சமாதானம் செய்தான்.
********************************************************************************************************
பழைய நிகழ்வுகளில் மூழ்கி சக்தியின் நினைவுகளால் தாக்கபட்டு இருந்தவன் , “ ஐயா” என்ற குரல் அழைப்பில் , நிஜ உலகத்திற்கு வந்தவன் , தன்னை அழைத்தவனின் தோற்றத்தை மேலிருந்து கீழாக அளவிட ,” ஐயா , இங்க நிற்காதீங்க.. இங்கே நிறைய விபத்து நடக்கும்.. கொஞ்சம் தள்ளிபோய் நில்லுங்க .. போனவாரம் கூட , ஒரு பொண்ணு இங்க அநியாயமா அடிபட்டுடுச்சு” என்று கூறிக்கொண்டு செல்ல , அவனது மூளையில் மின்னல் வெட்டியது.
தனது அலைபேசியில் இருந்த சக்தியின் புகைபடைத்தை அவனிடம் காண்பிக்க , அந்த புதியவனிடம் இருந்து விவரத்தை பெற்றுக்கொண்டான்.
தனது காரை கிளப்பியவன் , புயல் வேகத்தில் சென்று கொண்டே ,மோகனை அழைத்து , “ மோகன் .. சக்திக்குவிபத்து நடந்து இருந்த நேரத்தில் அவளை XXX மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
சக்தி கிடைத்துவிடுவாள் என்ற மகிழ்ச்சியில் செல்லும் அவன் , மீண்டும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கத்தை அனுபவிக்க போகிறான்.
அவன் செய்த பாவங்கள் அவனை பழிவாங்க தயாராகிக்கொண்டு இருந்தது..
செய்த பாவங்களின் வினை அவனை வெல்லுமா ? அல்லது அவனின் காதல் பாவங்களை விலக்கி அவனது காதல் வெல்லுமா?
அதற்கு மௌனமே விதியின் பதிலாய் ...