All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

வேடவர் வேந்தனவன்
தேவர்கள் தலைவனவன்
வள்ளி மணாளனாம்
சம்ஹாரம் சூரனவன்...
அபிராமவல்லியின்
அந்திரனரசனவன்!

வைராக்கியம் விஞ்சிய வஞ்சியே - உன்
அன்பின் அஞ்சனத்தில்
சகலமும் உயிர்த்திட....
உயிர்ப்பில்லா உன் வாழ்வில்
வைரமாய் காதல் மிளிரும் நாள் பொன்னாளோ!

மாயவனின் மத்திரமும்
வித்தகனின் தந்திரமும்
வித்தகியில் அடங்காதென்றால்...
சித்தினியவள் ஸ்ருங்காரம்
சிந்தனைக்கு அப்பாற்பட்டதோ...?

அரசனின் ஆரணங்கே!
அபிராமவல்லியே! - உன்
வைராக்கிய அந்தாதியில்...
அந்திரனரசன் இலக்கணமோ...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

வேடனின் அம்பில்
இலக்கான அன்றிலவள்...
வைராக்கிய வேங்கையாய்
வைரமாய் ஒளிர...

தேவனவன் வம்பில்
வசமான வஞ்சியவள்...
ஆசுவாச கங்கையாய்
அன்னையாய் மிளிர...

வேந்தனவன் தேவியவள்
அரசரனவன் ஆளுமையில்
அதிகார தோரணையில்
அசராமல் நின்றாலும்...

தேவனவன் தேவியவள்
மன்னனவன் ராணியவள்
அரிதார ஆராதணையில்
உரசாமல் நின்றாலும்...

அந்திரனின் அழகியே - நீ
அவதார புருஷனின்
சோதர சக்தியெனில்
அபிராமவல்லியவள் ஆரோகணம் கண்டால்...
அகிலம் உயிர்க்கும் பாரினிலே!
உன் ஆரோகணம் கண்டு
அந்திரனும் உயிர்ப்பானோ வாழ்வினிலே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

வில்லால் வளைத்தாலும்
சொல்லால் வளைத்தாலும்
வளையாத மூங்கிலாய் காதல் - அது
நிலையான பாங்கிலே நீ!
பெண்ணே! நீ மாயவனின் நாயகியே!

காதலில் கட்டி இழுக்கும் அந்திரனே! - உன்
காவலில் முட்டி நிற்கும் அழகியவள்....
காதலில் தொய்ந்தாலும்
காரியக்காரியவள் காரியத்தில் கண்ணாக...
காரண காரியங்கள் என்றும்
காதலுக்குத் தடைதானே! - அதன்
கூடலுக்கு பகைதானே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

தன்மானம் பெரிதென்று
தன்னிச்சையாய் அவள்...!
தன்னகங்காரம் பெரிதென்று
தன்னிச்சையாய் அவன்...!

நம்பிக்கை கொன்ற துரோகத்தில்
காதலும் வாடுமோ ரோகத்தில்...!

துரோகமும் ரோகமும் வழக்காட
காதலும் கூதலும் சதிராட...
தேடலின் ஊடலில்
ஆடிடும் வேளையில்
அந்திரன் மிடுக்கில்
அபிராமி துடுக்கில்
அலையாடும் கடலில்
அலைபாயும் படகாய்...
மனம் போடும் ஆட்டம் - இது
தினம் ஓடும் ஓட்டம்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 

Vaishanika

Bronze Winner
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

தன்மானம் பெரிதென்று
தன்னிச்சையாய் அவள்...!
தன்னகங்காரம் பெரிதென்று
தன்னிச்சையாய் அவன்...!

நம்பிக்கை கொன்ற துரோகத்தில்
காதலும் வாடுமோ ரோகத்தில்...!

துரோகமும் ரோகமும் வழக்காட
காதலும் கூதலும் சதிராட...
தேடலின் ஊடலில்
ஆடிடும் வேளையில்
அந்திரன் மிடுக்கில்
அபிராமி துடுக்கில்
அலையாடும் கடலில்
அலைபாயும் படகாய்...
மனம் போடும் ஆட்டம் - இது
தினம் ஓடும் ஓட்டம்!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
3352733528
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

5....

உணர்வின் குவியலாய்
உரிமையின் மீறலாய்...
உன்மத்தமாய் ஒரு காதல் - அது
ஊமையாய் சொல்லும் மோதல்!

கண்ணின் மணியாய்
கருவின் உயிராய்
கலங்கரை விளக்கமாய் ஒரு காதல் - அது
களங்கமாய் சொல்லும் மோதல்!

பெண்ணின் பெருமையாய்
ஆணின் அருமையாய்
ஆலய தீபமாய் ஒரு காதல் - அது
கலங்கலாய் சொல்லும் மோதல்!

காதல் காதல் என்றும்
மோதல் மோதல் என்றும்
கூதலடிக்கும் ஒரு காதல் - அது
துரோகமாய் கொல்லும் மோதல்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

கனவு காணும் கண்களுக்கு
வண்ணங்கள் விலக்கல்ல...!
கனவு காணும் பெண்களுக்கு
எண்ணங்கள் விலங்காகும்!

எண்ணத்தின் ஓட்டம் - அது
வாழ்வின் வேரோட்டம்!

வேரோட்டம் போட
நீரோட்டம் போல
போராட்டம் ஆட
மாறாட்டம் ஒன்றே
மாறாத வாழ்வில்
மாற்றாட்டம் ஆட
முடங்கிடுமோ மனமே!

பாவம் பார்க்கா காதல் - இது
பழிபாவம் நோக்கா மோதல்!

கூதல் தேடும் காதலுக்கு...
கூடல் இல்லா பாடல்... - இது
கூட்டில் அடங்கா தேடல்!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

priyanila

Well-known member
துக்கமும் ஏக்கமும் போட்டியிட தன்மானமும் சுயகௌரவமும் தோல்வியுற
அந்திரனின் அம்புக்கு இரையாக
அரசனின் அகத்தினில் சிறையாக
அணங்கிவள் முப்பொழுதும் தயார் தான்....!

மனம் கொய்து மணம் கொண்ட மன்னவன் மனமோ உருகா பாறையாய்..... உடையா இரும்பாய் தயங்குவதென்ன விதியா......?

பூவையின் ரணத்தை பார்க்க மறுத்து
திரையிட்டு மனம் மறைத்து
மனதிலே உருகி மருகி
நனவிலே வாட்டி வதைப்பதென்ன காலத்தால் அமைந்த சதியா.......?
 
Top