Vaishanika
Bronze Winner
நான்கூட உங்களை ஈரோ ஆர்மின்னு நினச்சேன் டாலிம்மா. ஆனா என்ற நிது தூங்கிமுழிச்சு எழுந்ததை வர்ணிச்சிங்க பாருங்க. அங்க நிக்கறீங்க. அழகு பேரழகுன்னும், சுருள்கூந்தலிடை முகம் வும், நிது அழகைப் பாத்து காற்றுகூட நின்னு வீசியதுன்னும் ,மத்த வர்ணனைகள் எல்லாம் நிதுவை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பிரம்மையை தந்தது டாலிம்மா. ஏட்டு சுரை கறிக்குதவாதுன்னு தெளிவா படிப்பை இரண்டாவதாகவும், விவசாயத்தை எதிர்காலத்திற்கு முக்கியமாவும் சொல்லியிருக்கீங்க டாலி. அதையே என்ற நிதூ பாலோ பண்ணறா. நானு அந்த பனைமரத்தை (மிதி) ன்னு சொன்னமாதிரியே என்ற நிதுவும் சொல்றா . இந்த நெட்டைக் கொக்கன் எதுக்கு ஆடு மாடு மேய்க்கறவங்களுக்கு படிப்புன்னு கேக்கறான். எம்பூட்டு எகத்தாளம் இருக்கோனும் அவுனுக்கு. இந்தியாவோட கடைக்கோடில பிறந்து மீனவத்தொழில் செய்யற குடும்பத்துல இருந்து வந்த கலாம் அய்யா உலகமே திரும்பிப் பாத்து வியந்த விஞ்ஞானியாவும் இந்தியாவின் குடியரசு மகனாவும் ஆனார். என்ற நிதுவும் எதிர்காலத்துல சிறப்பா வருவா. அதனால கூரையத் தொடறவனை யாரையும் கீழா நினச்சி பேசக்கூடாதுன்னு கண்டிக்கிறேன்..இதுல ஒட்டகச்சிவிங்கி மெத்தப்படிச்சு இருக்கானாம். லேட்டா கிளாஸூக்கு வந்தா கண்டிக்கோனும். மறுபடியும் இதே நடந்தா தண்டிக்கலாம்.அதைவுட்டுபோட்டு இப்புடி எல்லாமா வையப்புடாது.