All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் … தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா…இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு… நாயகியின் தோழியே ……இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்…
நாராயணா நாராயணா எனக்கு ஏன் இந்த சோதனை என்னவா இருக்கும் யாரு அவன் என்ன எதுக்கு பார்க்கணும் சொல்லுறான் , இந்த சந்தியாக்கு எங்கே போச்சி அறிவு... லூசு.. இப்பிடியா யாரோ கேட்டா சரின்னு சொல்லிட்டு வருவா...( ஆனால் பாவம் அந்த அப்பாவிக்கு தெரியவில்லை அந்த யாரோவையும் தன் தோழி தான் ஆட்டி வைக்கிறாள் என்று ) என பல எண்ணங்களுடன்.. அவள் கோவில் பிரகாரத்தை சுற்றி.. வந்து கொண்டு இருக்கும் பொது ” தொப் என்று ஒரு நெடியவன் மீது மோதி கொள்ள ” அய்யோ” சாரி , நான் தெரியாம …..முன் பின் தெரியாத யாரோ ஒரு ஆண்மகன்.. மேல் மோதிவிட்ட.. பதட்டம்…. அவளுக்கு…
அவள் முடிக்கும் முன் கை மறைத்து, ” நீ தான் அந்த வென்மதியா ,? என கேட்ட அந்த நெடியவனை விச்சிதிரமாய் மற்றும் மிரட்சியாய் பார்த்தாள் வெண்மதி ..
நம்ம பெயரை வேற சரியா சொல்லுறான் யாரா இருக்கும்.
வார்த்தை வராமல் , தந்தி அடிக்க , ” ஆ.. ஆமா யாரு நீங்க ? என வார்த்தை அவளுக்கு தந்தி அடித்தது
அதை ஏதும் கண்டுக்காமல் அவள் முன்னால் அவன் ஒரு கவரை நீட்டி
” நான் யாருங்கிறது இருக்கட்டும்….. இது நம்ம கல்யாண பத்திரிக்கை நாளை காலைல சரியா 10 மணிக்கு….இதே கோவிலுக்கு வந்துரு…. எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு ” என சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்க
மதி அதிர்ந்து போய் நின்றுவிட்டாள் ‘ பின் சுதாரித்து வேகமாக அவன் பின்னால் ஓடி சென்று அவனை வழி மறைத்து ” ஹலோ நில்லுங்க யா…. யாரு நீங்க.. என்ன என்னமோ சொல்லுரிங்க எது பேசுறது இருந்தாலும் வீட்டுல மாமா கிட்ட வந்து பேசுங்க.. இப்பிடி வந்து பேசுற வேலை எல்லாம் வேண்டாம் ’
சூர்யா , அவளை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு..” பேசி முடிச்சாச்ச….. நீ யார்கிட்டையும் நான் வந்து பேசுறதா இல்லை.. நாளைக்கு வந்துரு, இல்லை விளைவு ரொம்ப மோசமா இருக்கும், ம் அப்புறம் பாய் என அவள் பதில் எதிர்பாராமல் விறு விறுவென… சென்றுவிட்டான்…
ஆனால் வெண்மதியின் நிலை தான் இங்கே மோசமாய் போய்விட்டது… ” யாரு இவன் ? ”
[ என்னங்கடா நடக்குது இங்க அவ கோவிலுக்கு வர , இவன் வந்து விடிஞ்சா கல்யாணம் சொல்லுறான் .. என்ன தான் நடக்குது தானே யோசிக்கிறிங்க அப்பிடி தான் எனக்கும் இருக்கு .. கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி நாயகன் நாயகி அறிமுகம் செய்துட்டு மெல்ல கதைக்குள்ள போவோம்… வாங்கோ ]
வெண்மதி , சுசிலா – வேதாசலம் தம்பதினர் ஓட செல்ல புதல்வி, பகுதி நேர வேலை பார்த்து... டாக்டர் படிப்பை படித்து முடித்து விட்டு.. தந்தை ஓட நண்பரின் மருத்துவமனையில் வேலை பார்க்கிறாள் ... ஒரு விபத்தில் தன்னோடு தாய் தந்தையே இழந்து சந்தியாவோடு சந்தியா தான் தங்கி இருக்கிறாள் , தன் தோழியின் கோரிக்கையின் பெயாரால் தன் வாழ்கையே இப்போது பணயம் முன் வந்து விட்டாள் சந்தியாவின் திட்டம் ஏதும் தெரியாமல் அவள் சொன்ன கட்டு கதைக்கு இவள் பலி ஆகா போவது தெரியாமல் உண்மை தெரியும் வரும் பொது வெண்மதியின் நிலை என்ன ஆகுமோ
இதோ சூர்யாவும் திருமண அழைப்பிதழ்ஓட வந்து விட்டான்………
ஏண்டி சூடாமணி காதல் வழிய பார்த்ததுண்டோடீ
கண்ணில் கண்ணீர் துளி எந்த நாளும் வார்த்ததுன்டோடி
பொண்ணுனா ஆன் உலகம் கவிதை என்கிறது
கவிதைதான் கை வாளா ஆள கொள்ளுறது ………..!!!
சாமியும் வேண்டாம் ஏதும் வேண்டாம் முதல வீட்டுக்கு போவோம்.. என மதி வேகமாய் வீட்டுக்கு திரு ம்பினால்.. அங்கே சந்தியா தோட்டத்தில் தனது காதில் இயர்போன் போன் மாட்டிகொண்டு பாட்டு கேட்ட படி நடந்துகொண்டு இருந்தாள் அந்த நேரத்தில் இவ்வளோ வேகமாக வந்துகிட்டு இருந்தா மதியே பார்த்து ” ஹே என்னடி…
அதுக்குள்ள வந்துட்ட.. நீ கோவில் போன.. அவ்வளோ சீக்கிரம் வீடு திரும்ப மாட்டியே.. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு, ஆமா ஏன் இவ்வளோ பதட்டமா இருக்க
அவள் முன்னாள் மூச்சு இளைக்க வந்தவள் , ஐயோ சந்தியா.. இதோ பாரேன் ” என தன் கையில் வைத்து இருந்த திருமண அழைப்புதலை சந்தியா விடம் காட்டினாள்
அதை பார்த்த சந்தியா
” என்ன இது ..”என கேட்டாள்
நீயே பிரிச்சு பாரு என்ன இதுன்னு. ” என மதி பதட்டமாக சொல்ல..
சந்தியா மதி கொடுத்த கவரை பிரிச்சு பார்த்துவிட்டு. மனதுக்குள் நம்ம போட்ட திட்டம்.. இவ்வளோ சீக்கிரம் வொர்க் அவுட் ஆகும்ன்னு நினைக்கலையே.. ஹ்ம்ம். யோசித்துவிட்டு/// . தன்னோடு.. போனில் இருந்து ஒரு போட்டோ எடுத்து.. மதி இடம் காட்டி உன்ன வந்து பார்த்தது இவனா சொல்லு….
போட்டோ பார்த்த மதிக்கோ குளிர் ஜுரமே வந்துவிடும் போல் இருந்தது ” ஆமா ஆமா இவ இவர் தான்.. . ஆனா இந்த போட்டோ உன் போன்ல எப்பிடி…..
” ஹாஹா… நேத்து முழுவதும் நாம பேசினோமே… ஒருவர பத்தி .”
” ஆமா.. ”
” அந்த அவர் தான் இவரு…”
நேற்று நடந்தது..
சந்தியா நல்லா யோசிச்சிக்கோ.. எனக்கு என்னமோ இது சரியாய் வருமா தெரியல்ல. எனக்கு பயமா இருக்கு உன் அவர் இதை எப்பிடி எடுத்துப் பாரோ..
நான் நல்லா யோசிச்சுட்டு தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன் மதி… நீ சரின்னு மட்டும் சொல்லு.. மத்தத எல்லாம் நான் பார்த்துகிறேன் ,என சந்தியா சொல்ல
மதி, ‘ , மாமாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும் நினைச்சு பார்த்தியா, நாளைக்கு என்னோட நிலைமை என்ன ஆகும்னு, என்னன்னு டி சொல்லுறது அவருக்கு அத்தை என்ன நினைப்பாங்க அது மட்டும் இல்லாம என்ன கல்யாணம் பண்ணினா எப்படி அவர் ப்ரோப்லேம் சரி ஆகும் என்னக்கு ஏதோ தப்பா தெரியுது டி நீ இன்னும் ஒருக்கா நல்ல யோசியேன் ?? சந்தியாவிடம் மதி கெஞ்சினாள்
சந்தியா கோபத்தில்…”சும்மா சாக்கு சொல்லாத மதி.. உனக்கு இஷ்டம் இல்லேன்னா விட்டுரு நான் எப்பிடியோ போய் தொலையுறேன் உனக்கு என்ன வந்தது , நட்பு அது இதுன்னு பேசினது எல்லாம் போய் தானே அன்னைக்கி நீ யாரு இல்லாம தனியா நின்னப்போ என் பிரெண்டுன்னு எங்க அம்மா சொல்லாம உன்ன என் கூட அழைச்சுட்டு வந்தேன் ஆனா நீ எனக்கு ஒரு உதவி சொன்ன உடனே இவ்வளோ கேள்வி கேட்குற பின் வாங்குற அப்படினா என்ன அர்த்தம் உனக்கு நான் பிரெண்ட் இல்லைன்னு தானே என வரத கண்ணீரை துடைத்து படி பேசினாள் சந்தியா
மதி.. ” ஏய் ச்சீ என்ன பேசுற …”
சந்தியா, ” ஆமா நீ தான் என் உயிர் சொன்னது எல்லாம் வெறும் பொய் தானே.., என்னகாக இது கூட செய்ய மாட்டியா மதி என சந்தியா உருக்கமாக கேட்க ”
இங்கே மதி உள்ளுக்குள் நூறு சுக்காக உடைந்து விட்டால் என்ன வார்த்தை சொல்லி விட்டால் இவள் , நான் வைத்து இருந்த என் அன்பு மேலே இவள் சந்தேக படலாமா என் மேல் போய் என்னை போய் ( ” போதும் வார்த்தை தவறி விட்டாய் கண்ணமா பட்டு தான் எனக்கு தோன்றது உன் பேச்சு .. மதி மேடேர்கு வா இப்போ .. “)
பின்ன நடப்பது நடக்கட்டும்….
சரி சந்தியா நான் உனக்கு உதவி பண்ணுறேன் , உன் அவர் கிட்ட எல்லாம் சொல்லிடு , நான் வீட்டுக்கு கிளம்புறேன் , நீ பேசிட்டு வா, ஆனா நான் உன் அவர் கிட்ட பேசணும் அதுக்கு வழி இருந்தா அதையும் செய்து விடு.
சந்தியா , மனதுக்குள் , கள்ளி, எனக்கு தெரியாதா உன்ன பத்தி , அவன் கிட்ட நீ நான் சொன்னத எடுத்து சொன்ன என் பிளான் என்ன ஆகுறது அவன் வருவான், ஆனா உன் உடன் கலந்து ஆலோசிக்க இல்ல தன் முடிவை சொல்லவதற்காக … என்று தனக்குள் சிரித்து விட்டு
சரி டி மதி, அவர் உன் கிட்ட பேசுவாரு , நீ கிளம்பு ,, என்று அவளை அனுப்பிவிட்டு , அவனுக்கு அழைத்தாள்.
டார்லு , நம்ம பிளான் வொரக் அவுட் ஆகிடுச்சு என சந்தியா சந்தோசமாக அவனிடம் சொல்ல
அவனோ , சூப்பர் சந்து , நீ சூர்யா கிட்ட பேசி பெருமாள் கோவிலுக்கு வர சொல்லிடு .. அவன் பேசுறதுல மதி இங்க பேச மறந்துடன்னும் ஜாகிரத்தை , அவ அவன் கிட்ட பேசிட்டா காரியம் எல்லாம் கேட்டு போய்டும் , என அந்த அவனோ எடுத்துகொடுக்க
” நீ கவலை படாத செல்லம் அவன பத்தி உனக்கு தெரியாதா அவள பேச விட மாட்டான் … நான் பார்த்துகிறேன் .. ” சந்தியா மெஔம் சிறிது நேரம் பேசிவிட்டு சூர்யாவுக்கு போன் பண்ணினாள் .
இதோ அவன் சொல்லியது போல் இவனும் வந்து விட்டான் திருமண அழைப்பிதழ் ஓடு, .. அவளை பேச விடமால், அவனது இந்த செய்யாள் மதுவின் வாயே கட்டி போட்டு விட்டது .. இவன் இடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று பார்த்தாள் இவனோ ஒரு முடிவோடு வந்து நின்று விட்டான் இனி என்ன எல்லாம் அவன் செய்யல் என்று அந்த பெருமாள் இடம் தன மனபாரத்தை இறைக்கி வைத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.. எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை ..ஆனால் வந்து விட்டாள் மனத்துக்குள் ஏக பட்ட குழப்பங்கள் .
பொதுவாக ஒரு விஷயம் நாமளோ இல்லை நமக்கு வேற யாரோ செய்யே போகிறாகள் என்றால் நம்மோடு உளுணர்வு அதை உணர்த்தி கொண்டே இருக்கு அது போல் தான் இங்கே மதுவுக்கு அப்படி தான் தோன்றியது ஆனால் யாரிடம் போய் சொல்லுவாள்
அவளின் ஒவ்வொரு அசைவும் சந்தியா கவனித்து கொண்டு தான் இருந்தாள்..
இனிமேல் தான் டி இருக்கு மதி. உன்ன வச்சு அந்த சூர்யா கிட்ட நான் எவ்வளோ கறக்க வேண்டி இருக்கு தெரியுமா இனி போக போக பாரு அவன் என்ன பாடு பட போறான்னு …. ( அடி பாவி மக்கா… இருடி நானும் சொல்லுறேன் இனி போக போக யாரு என்ன பாடு பட போறாங்கனு தெரியும்… அவளா அவனா இல்லை நீயும் உன் அவனுமா… ” )
******************
hai friends unga comments sollunga padichutu , chinnathaan type pannirken pola , word la 12 page kitta varuthu inga ore sheet la mudijututhu
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
“என கோவிலில் கிருஷ்ணா காணம் பாடிக்கொண்டு இருக்க இங்க மன பெண் அலங்காரத்து உடன் தன் தோழிக்காக இந்த அக்னி பரிட்சையில் இறங்க முன் வந்து விட்டாள், அந்த கிளி பச்சை நிறத்தில் பட்டுபுடவை உடுத்தி , சிம்பிள் ஆனா மேக் அப்பில் மதிகேன்று அவளது பெற்றோர் சேர்த்து வச்ச நகைகள் மட்டும் தான் போட்டு இருந்தாள் , சூர்யாவிடம் இருந்து வாங்கி வந்த எந்த ஒரு நகையும் அவள் தொட்டு கூட பார்க்கவில்லை அவளுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை , அதை சந்தியாவிடம் முடிவாக சொல்லிவிட்டாள் இங்க பாரு சந்தியா எனக்கு அவங்க குடுக்குற நகை ஏதும் வேண்டாம், அம்மா குடுத்து போனதே இருக்கு , இதை அவர் கிட்டயே திருப்பி குடுத்துரு சொல்லிவிட்டாள் ஆனால் சந்தியா அதை தன்னிடம் எடுத்து வைத்துகொண்டாள் சந்தியா சொன்னாள் என்பதற்காக கிளம்பி வந்த மதிக்கு மனசு கேட்கவில்லை ஆனால் இதோடு முடிவு அந்த இறைவன் தான் கூற வேண்டும் என்று அந்த கண்ணை மூடி மனம் உருகி வேண்டி கொண்டாள்….ஒரு வேலை அம்மா-அப்பா இருந்து இருந்தா... இப்பிடி எல்லாம் நடந்து இருக்குமா என்னவோ , மனத்துக்குள் அம்மா – அப்பா எனக்கு ஏதோ நான் பெரியே தப்பு பண்ண போற மாதிரியே இருக்கு ஆனா அது என்னன்னு தான் புரியலை நீங்க தான் எனக்கு துணை இருக்கணும் என வேண்டினாள் , அவளால் சத்தம் போட்டு அழ கூட முடியவில்லை .
சூர்யாவோ, இறுகி போனா பாறையாய் ஹோமம் முன்னாள் அமர்ந்து இருந்தான் அதை கவனித்த இவளின் முதுகு தண்டில் மின்னல் வெட்டியது பயத்தில் அவள் உடம்பு அப்படியே சில்லேனே ஆகிவிட்டது மதி பயத்தில் சந்தியாவின் கையே பற்றிக்கொள்ள ஆனால் அவளை தேற்ற வேண்டியவளோ , மதி கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வாயேண்டி , என்னமோ உன்ன கடத்திட்டு வந்த மாதிரி முகத்த வச்சு இருக்க என சந்தியா குறை பாட ,
அதற்க்கு பயந்தே மதி , சிரிச்ச முகமாய் இருக்க முயற்ச்சித்தாள் , இல்லை நடித்தாள் என சொல்லலாம்.
மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து மதி அவன் அருகில் சென்று அமர , அவனோ பெயர்க்கு கூட நிமிர்ந்து பார்க்கவில்லை , அவனை ஓரகண்ணால் பார்த்த மதிக்கு மேலும் குழப்பம்
ஏன் இப்பிடி இருக்கான், அப்போ அப்பிடி பேசிவிட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம் , பின்ன ஏதோ யோசித்தவளாய் இவனுக்கும் கஷ்டமா தானே இருக்கும், நாம நேசிச்ச பொன்னே நம்மளுக்கு வேற பொண்ண கட்டி வச்சா உச்சி குளிர்வா முடியும் என அவளும் அவனை பற்றி தப்பு தப்பாக நினைத்து படி உட்காந்து இருந்தாள் அவன் அருகில் .
மறந்தும் திருமணம் செய்யே போகும் இருவர் முகத்தில் சிரிப்பு ஒன்றே இல்லை கடும் கோபத்தில் அவன் இருக்க, கவலையில் இவள் இருந்தாள் ,
தாலி எடுத்து கட்டுங்கோ ….அதே முக பாவத்துடன் மாங்கலியம் எடுத்து அந்த மங்கையின் கழுத்தில் கட்டி விட்டான்.
மதி தன் கண்ணீரை மறைத்து படி தலை நிமிரவே இல்லை
சூர்யா அருகில் நின்று இருந்த ஜோர்ஜ் , வாழ்த்துக்கள் பாஸ் ‘.சொல்ல
அதை கேட்டு மறந்தும் கூட சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை என அவன் முகம் காட்டி கொடுத்தது .
இந்த நேரத்தில் அதிக சந்தோஷத்தில் ஒருவர் இருக்கிறாள் என்றால் அது சந்தியா தான் , அதே சந்தோஷத்தில் மதியே அவள் மெல்ல அனைத்து , ஹே தேங்க்ஸ் டி மதி , சரி நான் வீட்டுக்கு முன்னாடி போறேன் நீ சூர்யா கூட அங்க என்ன வந்துரு அப்பா அம்மாவை சமாதனம் படுத்தனும்ல சமாதனம் ஆகா மாட்டாங்க தான் இருந்தாலும்..” என்னவோ பெரியே தியாகி போல் சந்தியா வார்த்தையே அள்ளி வீச கொண்டு இருந்தாள்
அப்பா அம்மா என்று சந்தியா சொன்ன உடன் வெண்மதிக்கு குளிர் காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது… இதை தானே நானும் சொன்னேன் அப்போ எல்லாம் பார்த்துக்கலாம் சொல்லிவிட்டு இப்போ இவள் இப்படி சொல்லுகிறாளே என பயம் அவளை தோற்றி கொள்ள ( இன்னும் காய்ச்சல் இல்லையா …ஹி ஹிஹி, உன் நால இப்போ என்னக்கு காய்ச்சல் வந்துவிடும் போல் இருகிறதே அம்மா என்ன செய்வது ” ).
சந்தியா சொல்லி முடிபதற்குள் ..சூர்யா முந்தி கொண்டான்
” வேண்டாம் சந்தியா, நான் நேரா என் வீட்டுக்கே கிளம்புறேன் , யாரும் எங்கையும் வர போறது இல்லை நீ உன் வீட்டுக்கு கிளம்பி போ… உன் அம்மாவை சமாதனம் பண்ணிக்கோ .. வெண்மதி என் கூட தான் வர போறா நீ கிளம்பு
” ஜார்ஜ் , நீ இவள அழைச்சுட்டு போய் அவங்கள விட்டுட்டு வந்துரு நான் கிளம்புறேன்… என்று சந்தியாவின் பதில் எதிர்பாரமல் நகர்ந்து விட மதி அவன் போகிறானே, இப்போ நான் அவன் கூட போறதா இல்லை யோசித்த படி நிற்க கொஞ்சம் தூரம் வரை போனவன் மதி அவனுடன் வராமல் அதே இடத்தில நிற்பதை திரும்பி பார்த்தவனின் ரத்த அழுத்தம் உச்சிக்கு ஏறியது , வாய் திறந்து ஏதும் சொல்லாமல் மதியே அவன் முறைத்து பார்க்க , அதுலயே மதி நான் வரேன் சந்தியா என சந்தியாவிடம் சொல்லிவிட்டு.. அவன் பின்னால் சென்றால்.. இல்லை இல்லை ஓடினாள் .
இங்க சந்தியா சற்று குழம்பித்தான் போய் விட்டால் , என்ன தான் ஆச்சு இவனுக்கு இவ்வளோ நாள் நல்ல தானே இருந்தான் இந்த ரெண்டு நாள தான் இப்படி இவன் பேசுறான், நாம நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போய் மதியே வசவு வாங்க வைக்கலாம் என்று பார்த்தால் இவன் அவள வீட்டுக்கே அழச்சுட்டு வர மாட்டான் போல் இருக்கே ஒரு வேலை நம்ம திட்டம் ஏதும் தெரிஞ்சு போய் இருக்குமோ என அவள் யோசித்த படி சிறிது நேரம் நின்றாள் பிறகு வேகமாய் அவன் அருகில் சென்று , என்ன சூர்யா இப்பிடி பேசுறிங்க , மதிக்கு என்ன விட்டா யாரு இருக்கா , நீங்க இப்படி சொல்லுரிங்க
என்ன விட்டா யாரு இருக்கிறா என்கிற வார்த்தையே சூர்யா கவனித்து இருந்தால் பின்னால் வர போகும் பிரச்சனையே தவிர்த்து இருக்கலாம் ஆனால் . ??
ஆமா சந்தியா, இப்போ இது எதுக்கு வரணும் வந்தா வீண் பிரச்சனை… அதுக்கு நீயே சமாளி அப்பிடியே உன் அம்மா மதி பற்றி கேட்டா வேலை விஷயமா பெங்களூர் வரைக்கும் இவ போய் இருக்கான்னு சொல்லிட்டு ” பிறகு மதியே பார்த்து
மதி சீக்கிரம் வந்து கார்ல ஏறு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகணும் .
அவன் பேச்சு மறு பேச்சு இன்றி அவள் காரில் ஏறி கொள்ள, ஜார்ஜ் நீ இவங்கள வீட்டுல விட்டுட்டு வந்துரு ஓகே
ஜார்ஜ், ” ஓகே பாஸ் , நான் வந்துறேன் நீங்க கிளம்புங்க …
ஜார்ஜ், சூர்யாவின் நல்ல தோழன்………!!!
சூர்யா மதுவை அழைத்து கொண்டு சென்று விட.
ஜார்ஜ் ,” சந்தியா இடம் என்ன போலாமா.. சந்தியா , எனக்கும் லேட் ஆகுது, பாஸ் ஆபீஸ் போறதுக்குள்ள நான் அங்கே இருக்கணும் ’
“ ஹ்ம்ம் போலாம் ஜோர்ஜ் , என அவள் காரில் ஏற , ஜோர்ஜ் காரை கிளப்பின்னான் ,”
காரில் அமர்ந்து இருந்த சந்தியாவுக்கு எண்ணம் எல்லாம் சூர்யாவை சுற்றி தான் இருந்தது, மனதுக்குள் ” என்ன ஆச்சு இவனுக்கு இப்பிடி பேசிட்டு போறான்.. மதியே வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம் பார்த்தா இப்பிடி பண்ணிட்டானே இந்த சூர்யா… என போகும் வழியில் யோசித்த படி வந்தாள் அவளுக்கு மதியிடம் சில விஷையங்கள் சொல்ல வேண்டி இருந்தது அதை ஏதும் செய்யே விடாமல் சூர்யா தடுத்து விட்டான் என்கிற ஆதங்கம் ”
ஜார்ஜ் , சார் ஓட்டிக்கொண்டே அவளை ஒரு முறை திரும்பி பார்த்து மனதுக்குள் சூரியாவை நினைத்து பெருமை பட்டான் ” இப்போ தான் டா சரியா முடிவு எடுத்துக்கிற.. இவளுக்கு இது மட்டும்….. பத்தாது இன்னும் இன்னும் இருக்கு என நண்பனை பாராட்டினான் , கொஞ்சம் நேரத்தில் அவள் வீடு வந்துவிட அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினான்..
“ என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்று பார்த்து சந்தியா வீட்டில் அவள் பெற்றோர் இருக்க.. இப்போது என்ன செய்வது என யோசித்த படி.. வீட்டில்.. உள்ளே சென்றாள் .”
அவளது அம்மா…சாந்தி….. ” என்னடி.. சந்தியா நீ மட்டும் வர எங்கே.. வெண்மதி ரெண்டு பெரும் சேர்ந்து தானே கோவில் போனிங்க இப்போ நீ மட்டும் வர எங்கே அவளை ”
‘ அம்மா அது… வந்து… “சந்தியா எப்படி விஷயத்தை சொல்லாலாம் என்று யோசித்தாள்
” என்ன வந்து போயின்னு. சொல்லிக்கிட்டு நிக்கறவ எங்க அவ “என அவர் சற்று குரல் உயர்த்தி கேட்க
அதில் சந்தியா கடுப்பு ஆனவள் , அதே தோரணையில் தன் தாய் இடம்
அவ இனி வர மாட்டா அம்மா, போதுமா சும்மா சும்மா என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே என சொல்லிவிட்டு நகர போக
அவளை போகவிடாமல் அவர்,
ஏன் என்ன அச்சு அவளுக்கு [ எங்கே அவள் வராமல் போய் விட்டாள் இங்க இருக்கும் அனைத்து வேலையும் செய்யே வேற ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே அதற்கும் காசு செலவு ஆகுமே என்கிற கவலை ]
அவ இனி வர மாட்டா அம்மா, நீ போய் உன் வேலையே பாரு , என சந்தியா பாடின பாட்டையே பாட..
இப்போது
ஏன் என்ன ஆச்சு அவளுக்கு ஏன் வர மாட்டா என அவர் பதற
அவரை ஒரு நிமிடம் பார்த்த சந்தியா சும்மா பதறாத ம்மா நீ எதுக்கு கேட்குற எனக்கு தெரியும் , இப்போ என்ன அவ எங்கே உனக்கு தெரியனும் , அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு போதுமா என கடுப்பில் உண்மையே உளறிவிட
என்னது கல்யானம என்ன டி சொல்லுற என சாந்தி அலற..
தான் என்ன சொன்னோம்… என்று அப்போது உரைத்தது , ’ ஹான் இல்லை அம்மா.. அது அவ என்ன கல்யானம பண்ணிட்டு போய்டா…வேலை விஷையமா பங்களூர்.. வரைக்கும் தான் ம்மா போயிர்க்கா….
இப்போ தான் அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு… வரேன்..
எங்க கிட்ட கூட சொல்லாம போயிர்கிங்க அவளோ துரத்துக்கு போயாச்ச இது வீடா.. இல்ல சத்திரமா நேரம் காலம் தெரியாம வந்து போறதுக்கு..
சந்தியா அங்கே சூர்யா மதி என்ன செய்து , கொண்டு இருப்பார்கள்.., சூர்யாவிடம் மதி ஏதும் சொல்லி இருப்பாளோ , இல்லை சூர்யா தான் மதி இடம் ஏதும் சொல்லி இருந்தால் என்று நினைக்க அத்தோடு அவள் அம்மாவின் பேச்சு அவளை மேலும் எரிச்சல் அடையே செய்தது
இப்போ என்ன தான் ம்மா.. உனக்கு.. பிரச்சனை அவளுக்கு…திடிர்ன்னு.. … வர சொல்லிடாங்க…அதான் கிளம்பிட்டா…. உன் கிட்ட சொல்லிட்டு தான் போகணும் இருந்தா நான் தான் நேரம் ஆகிடும்ன்னு.. கிளம்ப சொல்லிட்டேன்……போதுமா.. சும்மா தொண தொணன்னு கிட்டு, இப்போ எனக்கு.. வழி விடு….நான் உள்ளே போகணும் என அம்மாவிடம்…கத்திவிட்டு.. நகர்ந்து விட்டாள்..
சாந்தி.. என்ன இவ இப்பிடி கத்திவிட்டு போறா இப்போ என்ன கேட்டேன்… . சொல்லாம ஏன் போனான்னு கேடத்து.. ஒரு தப்பா… இந்த காலத்து பிள்ளைங்கள.. ஏதும் சொல்லிட கூடாது என்ன சொல்ல இப்போ வேலைக்கு வேற ஆள் தேடன்னுமே என பொலம்பிவிட்டு..அவரும் அவர் வேலை பார்க்க சென்றார்..
இங்கே சூர்யா மதியே அழைத்து கொண்டு… தனது வீட்டுக்கு வந்து சேர .. அப்போவும் அவன் முகம் இறுகி போய் தான்.. இருந்தது…
மதி வரும் வழியில்… ஒர கண்ணால் அவன் முகத்தில் ஏதும் மாற்றம் தெரியுதா என்று பார்த்து கொண்டே வந்தாள் , அவளுக்கு அவனிடம் பேச கேட்க நிறையா விசையங்கள் இருந்தது , அனால் அவனோ ’ ஹ்ஹ்ம்ஹும்… ஒன்றும்…தெரியவில்லை .. மதி தான் கதி . கலங்கி போய் அமர்ந்து இருந்தால் .. விட்டால் காரில் இருந்து குதித்து விடுபவள் போல் .. அவள் நிலை இருந்தது
ஆள் ஆவாராம் இல்லாத காட்டில்… கார் போக.. மதி.. ” என்ன ஏரியா இது புதுசா இப்பிடி காடு மாதிரி இருக்கே… .. ஒரு வேலை சினிமா ல வர மாதிரி… என்னமோ தெரிஞ்சு.. என்ன கொலை பண்ண போறனோ ஐயையோ கடவுளே இப்போ எப்பிடி தப்பிக்கிறது தப்பிகிறது எல்லாம் இந்த சந்தியாவால வந்தது… நான் அப்போவே சொன்னேன் இது சரி பட்டு வாராதுன்னு கேட்டாளா என் பேச்சை… கடவுளே.. இன்னை ஓட என் ஆயுசுக்கு ஒரு முடிவு வர போகுது. என சம்பந்தமே இல்லாம மனதுக்குள் புழம்பி கொண்டு வந்தாள் எதையுமே வாய் விட்டு சொல்லும் நிலையில் அவள் இல்லை..
நீண்ட நேரம் பயணத்துக்கு பின் கார் அந்த பெரியே வீட்டின் முன் நின்றது
சூர்யா வேகமாய் காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டான் , மதி அவன் பின்னால் இறங்கி நிற்க..
இவள் ஒருத்தி நிற்பத்தை கூட கவனிக்காமல் அவன் போய்விட
இப்போது மதிக்கு குழப்பம்… உள்ளே போவாதா இல்லை இப்பிடியே… நிற்பதா , இல்ல இங்கயே நிற்ப்போம் உள்ள போய் அதுக்கும் அவன் கிட்ட யாரு வாங்கி கட்டிக்கிறது என அங்கயே நின்று.. கொண்டு அங்கே இருந்த தோட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்
சூர்யா வீட்டினுள் வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்து தனது பாட்டி அறைக்கு.. சென்றான்…
அங்கே மரகதம் அம்மா.. மகாபாரதம் புத்தகம் படித்து கொண்டு இருந்தார்…
அவன் வந்ததை கவனித்து அவர் படித்து கொண்டு இருந்த.. பக்கத்தை.. புக் மார்க்.. செய்துவிட்டு.. அவன் இடம்..” என்ன பா சூர்யா இந்த நேரத்துல… வந்து இருக்க.. ஏதும் மறந்து வச்சத எடுக்க வந்தியா என்ன... .
” ஹ்ம்ம் பாட்டி அது இல்ல [ தன் நெற்றியே தேய்த்து விட்டபடி ] உங்களுக்கு.. ஹான்.. உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…
” என்ன. பா…. “
” அது நான் கல்யாணம் பண்ணிகிட்டேன் பாட்டி ..”
” ஹ்ம்ம் சரி ப்பா. “
” என்ன சரி. பாட்டிம்மா.. இதுவே வேற யாராவுது இருந்தா...பொண்ணு யாரு.. ஏன் இப்பிடி யாருக்கும் சொல்லாம.. கல்யாணம் பண்ணிகிட்ட என் கிட்ட சண்டை போட்டு இருப்பாங்க நீங்க ஒரு வார்த்தை கூட .. பொண்ணு யாரு என்ன எதுன்னு கேட்க மாடிங்களா..’
” அப்பிடி இல்லடா கண்ணா.. என் பேர புள்ள.. எது செய்தலும் அது சரியா தான் இருக்கும் ஆமா எங்க டா என் மருமக.. “
” அப்போது தான்.. அவளை உள்ள வர சொல்லாமல் விட்டது நினைவுக்கு வந்தது…..[ ஏன் நான் சொன்னா தான் உள்ளே வருவாளா .. இல்லைனா உள்ள வர மாட்டாளோ மகாராணி.. என நினைத்த படி.. தன் பாட்டி.. இடம்… வெளியே நிக்கிறா.. போல பாட்டி…”
நல்ல பிள்ளை.. டா நீ இப்பிடி தான் வெளியே நிக்க வைப்பியா கையோடு. அழைச்சுட்டு வர கூடாதா வா போய் பாப்போம்… என்று மரகதம் அம்மா மெல்ல சூரியாவின் கையே பிடித்து எழுந்து அவனுடன் மதியே பார்க்க சென்றார்….
வெளியே… மதி.. சூரியாவின்.. வருக்காக.. விரல்களை.. எண்ணியே படி.. நின்று கொண்டு இருந்தாள் அவளுக்கு அந்த இடமே பயத்தை கிளப்பியது ,மேலும் அவன் வீட்டில் இருபர்வகள் அவளை என்ன சொல்லுவாங்களோ என்கிற கவலை வேறு அவளை ஆட்டிப் படைத்தைதது
வேலையே வந்த
மரகதம் பாட்டி… .. இந்த தேவதை தானா டா நம்ம வீடு மருமக என சொல்ல
அவர் குரல் கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பார்த்தாள் ..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.