All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் ......"சிங்கப்பெண்ணே"......[short -story ]...&comment thread

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் எடுத்து வைச்சாச்சுங்க ஒருக்கா சரி பார்த்துங்க ,அப்புறம் அங்கே போயிட்டு அது எடுத்து வைக்கல இது எடுத்து வைக்கலைன்னு என்ன குறை சொல்ல கூடாது இப்போவே சொல்லிட்டேன் ,என ஷிவானி கணவனை செல்லமாய் கண்டித்தபடி தன் நிறைமாத வயிற்றுடன் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் ,மனதில் இருக்கும் சோகத்தை மறைக்க முயற்ச்சி செய்கிறாள் என்று அவளது பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது இருந்தும் எங்கே சமாதானம் செய்தால் இன்னும் உடைந்து போய் விடுவாளோ என்கிற பயத்தால் இவனும் அமைதியாகி விட்டான், அவள் சொன்னது போலவே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டு அலைபேசியில் வேளை விசயமாக பேசிய படி இருந்தான் Lieutenant Colonel ஜெய் சிவம் முகத்தில் ஒருவித இறுக்கமும் தீவிரமும் குடி இருக்க ஐ அம் ரிப்போர்டிங் பய் டுமோரோ , அவன் பேசுவதை கேட்ட ஷிவானிக்கோ இனி தான் பேசுவது கேட்க போவது இல்லை என்று புரிந்தது மெல்ல எழ போக அவள் கை பிடித்து உட்காரு என பார்வையால் சொன்னவன் , ஐ வில் கால் யூ லெட்டர் என யாருடனோ சொல்லிவிட்டு அழைப்பேசியே வைத்தவன் ஒரு பெரிய கிபிட் பார்சலை எடுத்துஅவளிடம் குடுத்து ஷன்னு போய் மாத்திட்டுவா என சொல்ல
அது என்னவென்று பிரித்து பார்க்க அதில் ஒரு புடைவையும் நகை பேட்டியும் இருந்தது பதில் பேசாமல் எழ போனவளை அவனே கை பிடித்து எழுப்பிவிட்டான் ,சிறிதுநேரத்தில் அவளும் அவன் குடுத்த சேலை கட்டி அதற்க்கு ஏற்றது போல் நகையும் போட்டு கொண்டு வெளியே வந்தவள் ஜெய் எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க என நிமிர்ந்தவள் அப்பிடியே இன்ப அதிர்ச்சியில் நின்றுவிட்டாள் வீடு முழுவதும் சீரியல் லைட்டால் அலங்காரம் செய்து இருந்தான் அங்கே இருந்த ஹாலில் வளைக்காப்பு செய்வதற்க்கான எல்லா ஏற்பாடு செய்து இருந்ததது ,அதை தான் அவள் அப்பிடி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் , ஜெய் அவள் பின்னால் இருந்து அணைத்து அவள் உயரத்துக்கு குனிந்து பிடிச்சிருக்கா என கேட்க

அவன் பக்கம் திரும்பி அவன் கன்னத்தை பிடித்து ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு ,ஆனா இப்போ எதுக்கு இதெல்லாம் ,அவள் கேட்க

ஷன்னு எனக்கு லீவு இன்னையோட முடியுது ,இன்னும் கொஞ்சம் நேரத்துல நான் கிளம்பனும் ,நம்ம ரெண்டு பேரோட வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருந்தா , நீ அவங்க பாதுகாப்புல இருக்கேன்னு தைரியமா நான் போவேன் ஆனா இப்போ எனக்கு நீ ,உனக்கு -நான்னு இருக்கோம் அதான் டெலிவரிக்கு உன்கூட நான் இருக்க
முடியுமான்னு தெரியலை அதான் உன்கூட இருந்து சீமந்தம் முடிச்சுட்டு போகலாம்ன்னு இந்த முடிவு ,வா வா நேரம் ஆச்சு என அழைத்து போய் மணையில் உட்கார வைத்தான் ,பிறகு ஒவ்வரு சடங்கையும் செய்து முடிக்க வீட்டின் காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது யாரென்று அவன் அங்கே ராணுவ உடையில் சில பேர் வந்து இருந்தார்கள் அவனை அழைத்து செல்ல
அவ்வளோ நேரம் அவனுடனான நிமிடத்தை சந்தோசமாக அனுபவித்து கொண்டு இருந்தவள் வெளியே வந்தவர்களை பார்த்து முற்றிலும் தொலைந்தது போனது முகம் வெளிறி,மெல்ல எழுந்து ஜெய் என அவள் அழைக்க
வந்தவர்களை அமர செய்துவிட்டு மனைவி அருகே வந்தவன் அவளை அழைத்து சென்று அவளுக்கு தேவையான அறிவுரையை சொல்லிவிட்டு ,தன்னுடைய யூனிபோர்மயே மாற்றி விட்டு தன்னுடைய உடைமைகளையே எடுத்துக்கொண்டு அறையே வெளியே வந்தான் .

இரண்டு மாதம் தன்னுடைய இருக்க போவதாக விடுமுறையில் வந்த கணவன் இதோ இன்னும் சில நிமிடங்களில் தாய் நாட்டிற்க்காக இந்திய எல்லைக்கு கிளப்பிவிடுவான் என்று நினைக்கையில் அவளுக்கு இருட்டி கொண்டு வந்தது இருந்தும் தன்னை சமாளித்த படி அவன் அருகில் சென்று அவன் முகம் பார்க்க ,அவளை பார்த்து நேரத்துக்கு சாப்பிடணும் ஷன்னு ,உடம்ப பார்த்துக்கோ நான் எப்போ வேணும்னாலும் கால் பண்ணுவேன் சரியா போன் சுவிட்ச் ஆப் ஆக கூடாது ,என்ன தவிர யார் வந்தாலும் கதவு திறக்க கூடாது சரியா ,அப்போ நான் கிளம்பட்டா டா என கேட்டவனை பார்த்து நீங்களும் நாங்க இங்க உங்களுக்காக இருக்கோம்னு உங்கள கவனமா பார்த்துக்கோங்க ,பாத்திரமா போயிட்டு வாங்க என அழுகையே அடக்கியே படி பேச ,அவன் கடைசியா ஒருமுறை அவள் கரத்தை அழுத்தி விட்டு நகர்ந்தான் தன்னை அழைக்க வந்தவர்கள் உடன் அவன் சென்றுவிட தன் கண்ணை விட்டு அவன் சென்ற வாகனம் மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்று இருந்தாள் . எப்போது இது போல் நடப்பது தான் ஆனால் இன்று ஏனோ அவளது இதயம் தவறு நடப்பதற்கு அறிகுறியாய் வேகமாக துடித்தது எவ்வளோ இனிமையாய் கழிந்த நிமிடங்கள் , இப்போது எவ்வளோ வெறுமையாய் தெரிய வாசல்படியில் அமர்ந்து
அழுது தீர்த்துவிட்டாள் பெண் அவள் ., அன்று சென்றவன் தான் அதற்கு பிறகு ஒரு தகவலும் இல்லை ,அவன் வருவான் என்கிற நம்பிக்கை மட்டும் தான் அவளை உயிருடன் நடமாட வைத்தது , வாழ்க்கையில் தனிமை கொடியது என்று அன்று தான் உணர்ந்தாள்


இருபது நாட்களுக்கு பிறகு

வீட்டில் அழைப்பு மணி அடிக்க மெல்ல சென்று யார் என்று பார்த்தவளுக்கு பயத்தால் முகம் வெளிறி விட்டது அன்று வந்தவர்களே அவசரமாய் கதவை திறந்தவள் கணவன் எங்கே என்று ஜீவன் அற்ற பார்வையால் தேடியும் அகப்படாமல் போக அவன் எங்கே என்று அங்கே நின்றவர்களையே கேட்டாள்

உங்கள அவசரமா வர சொன்னாங்க வாங்க மேம் , வீட்டை அவசரமாக பூட்டி விட்டு அவர்களுடன் ஆயிரம் கேள்விகள் கேட்ட படி சென்றாள் யாரும் பதில் தான் சொல்லவில்லை அவளுக்கு

இறங்க வேண்டியே இடம் வந்துவிட , அவர்களுடன் சேர்ந்து இறங்கினாள் சுற்றிலும் ஒரே கூட்டம் ,அழுகை சத்தம், பெரிய பெரிய வண்டிகள் ,பலத்த பாதுக்காப்பு அவளுக்கு பின்னால் இரண்டு ராணுவ வீரர்கள் ,, எல்லாவற்றையும் ஒருவித மிரட்சியுடன் பார்த்து நடக்க , இப்போது அவளுக்கு மேலும் பயம் கவ்வி கொண்டது என்னவானது என் ஜெய்க்கு அந்த கூட்டத்தில் இருக்கிறானா என தேடியே படியே நடந்தாள் மனத்துக்குள் ஜெய் இருக்கீங்க ப்ளீஸ் ஜெய் கண்ணு முன்ன வந்துருங்க ,உங்க ஆஃபீஸ்ர்ஸ் என்னை பயம் காட்டுறாங்க உங்களுக்கு ஒன்னும் ஆகலைத்தானே என கடவுள் இடம் வேண்டி கொண்டே முன்னேற ஒரு கட்டத்தில் அவளை நிறுத்தி மலர்வளையம் கொண்டு சகல மரியாதை உடன் அவளை அழைத்து அவன் முகம் பார்க்க செய்யே ஒரு மரப்பெட்டியில் தேசிய கோடி போர்த்தி கொண்டு இனி எப்போழுதும் எழ போவது இல்லை என்று உறங்கி கொண்டு இருந்தான் இதோ வந்து விடுகிறேன் என்று சென்றவன் ..
கண்ணீர் உரையே பார்த்துக்கொண்டே இருந்தாள் ஷிவானி
*********

அம்மா , நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று அவள் அருகில் வந்து நின்றான் Lieutenant Colonel அபிமன்யு ஜெய் சிவம் ,அப்டியே தந்தையின் மறுபிரதிபளிப்பு .,

போயிட்டு வா கண்ணா , என்று சொல்லி வழி அனுப்பிவைத்தாள் அந்த அன்பு தாய்.


Hai friends 1st time short ah oru story and this one is dedicated to all defence family

 
Top