அத்தியாயம் – 1
புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையில் குளிரையும் பொருட் படுத்தாமல் ஜாகிங் செய்து கொண்டிருந்தாள் சங்கீதா. கால்கள் பாட்டிற்கு பழகிய வழியை பார்த்து ஓடிக் கொண்டிருக்க, கண்களோ வழக்கம் போல, அவளின் நீண்ட நாள் ரகசிய காதலனை தேடி அலைபாய்ந்தது. அப்படித்தான் அவனை தன் மனதில் பதிய வைத்திருந்தாள்.
நீண்ட என்பது சில நாட்களில் அடங்குவதில்லை, சரியாக சொல்வது என்றால் நான்கு வருடங்களுக்கு மேலாக அவனை ரகசிய காதல் செய்துக் கொண்டிருந்தாள். அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தொலைவில் இருந்து ரசிப்பதும், அவன் கண் முன்னே நடமாடுவதுமாக தன்னை அவன் மனதில் பதிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள். இருபக்கமும் பார்வையை துழாவி பார்த்தவாறே ஓடிக் கொண்டிருந்தவளின் கண்ணில் பட்டான் யுவராஜ் தயாளன்.
நல்ல உயரத்தில் கண்ணை உறுத்தாத நிறத்தில் குறுநகை முகத்தில் மலர்ந்திருக்க முன் உச்சி தலைமுடி காற்றில் அசைத்தாட எதிர்புறத்தில் இருந்து வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்துக் கொண்டிருந்தவனை இமைக்க மறந்து பார்த்தபடி சில நொடிகள் நின்றுவிட்டாள் சங்கீதா. பின் சுற்றுப்புறம் உரைக்க அவன் மேலிருந்த மயக்கத்தில் இருந்து தெளிந்தவள், அவனை நோக்கி நிதானமாக ஓடினாள்.
வழக்கம் போல தன்னையே நினைத்தபடி ஓடி வந்தவளை கண்டுக் கொள்ளாமல் அமைதியாக கடந்து சென்றான் யுவராஜ் தயாளன். முன் முப்பதுகளில், ஃபார்மாசிட்டிகல்ஸ் உலகத்தில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு அதில் பயணித்துக் கொண்டிருப்பவனை யாருக்கு தான் பிடிக்காது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் யுவராஜின் மூன் பார்மா மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் கல்லூரி விழாவிற்கு வருகை தந்திருந்த தயாளனின் ஆளுமையில் மயங்கியவள் தான் இன்று வரை தெளியவில்லை.
இன்றும் தன்னை கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்றவனை கண்டு முகம் சுருக்கியவள்,
"பெரிய லாடு லபக்கு மயிறுனு நினைப்பு ... முன்னாடி போற உருவம் கண்ணுக்கு தெரியாதா ..." என்று கடுப்பில் வாய்விட்டு பொறுமியவள்,
'ஹேய் நாங்கள்லாம் கஜினி முகம்மது பரம்பரையாகும் ... இவரு திரும்பி பாக்காம போனா மொகத்த தொங்க போட்டுக்கிட்டு போகணுமா ... நோ விட மாட்டேண்டா நீ எப்படி என்ன பாக்காம போறேன்னு பாக்குறேன் ...' என்று அவன் முதுகை முறைத்தபடி மனதில் கருவினாள்.
எதிர்திசையில் ஓடுவதை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வேகமாக ஓடியவள் அவனை தாண்டி சில அடிகள் சென்ற பின் கால் சுளுக்கி விழுவதை போல கீழே விழுந்தாள்.
தன் முன்னே விழுந்து கிடந்தவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து ஜாகிங் செய்தபடி ஓடியவனை கண்டு ஏகத்திற்கு கோபம் வர பல்லை கடித்தவள், மீண்டும் எழுந்து அவனை முந்திக் கொண்டு ஓடி மீண்டும் அவன் கவனத்தை பெற கீழே விழுந்தாள்.
இந்த முறையும் அவளை கண்டுக் கொள்ளாமல் கழுத்தில் சுளுக்கெடுப்பதை போல தலையை இருபக்கமும் கீழும் மேலுமாய் அசைத்தும், உடலை இடமும் வலமுமாக வளைத்தபடி ஓடியவனை கண்டவளுக்கு, அவன் தலைமுடியை பிடித்து அருகில் உள்ள மரத்தில் நங்கு நங்கு என்று மோத வேண்டும் என்ற வெறி வந்தது.
தயாளன் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரை அவன் முன்பாக தோன்றி என்ன குறளி வித்தை காட்டியும் அவள் ஒருத்தி அங்கே இருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் ஓடுவதில் மட்டும் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.
இதற்கு மேல் அங்கிருப்பதில் ப்ரோஜனம் இல்லை என்று உணர்ந்தவள் வீட்டிற்கு செல்வதற்காக தன் ஸ்கூட்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவளிடம்,
"கொஞ்சம் நில்லும்மா ..." என்று அவள் முன்பு வந்து நின்றார் அந்த கிரௌண்டில் அவளுடன் கூட சேர்ந்து ஜாகிங் செய்தவர். இவர் எதற்கு தன்னை நிற்க சொல்கிறார் என்ற யோசனையுடன் அவரை பார்த்திருக்க,
"நானும் உன்ன ரொம்ப நாளா பாத்துகிட்டு இருக்கேன் ... ஐ திங்க் யூ ஹேவ் சம் நெர்வ் ப்ரோப்லேம் ... நல்லா ஓடிக்கிட்டு இருக்க திடீர்னு அடிக்கடி கீழ விழுந்துடுற ... இப்போவே போய் நல்ல டாக்டரா போய் பாரு பிரச்சனை சீரியஸ் ஆகுறதுக்குள்ள சரி பண்ணிடலாம் ..." என்று பிரீ அட்வைஸ் கொடுக்க, உள்ளுக்குள் நொந்து போனவள் 'யார் யாரோ என்ன நோட் பண்ணுறாங்க ... பாக்க வேண்டியவன் பாக்க மாட்டுறானே ...' என்று மனதில் புலம்பியபடி தலையை மட்டும் சரி என்று ஆட்டினாள். அதே நேரம் இவர்களை கடந்து சென்ற யுவராஜ் தயாளன் இதழ்கள் ரகசிய புன்னகையில் மலர்ந்திருந்தது.
ஸ்கூட்டியை கேட்டின் உள்ளே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை வரவேற்றார் சந்திரசேகர்.
"என்னடா முகம் டல்லடிக்குது ... காபி எடுத்துட்டு வரவா ...' என்ற தந்தையின் அருகில் உட்கார்ந்தவள் அவரின் தோள் சாய்ந்துக் கொண்டாள். மகளின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தவரிடம்,
"அம்மூ ஷூட்டிங் போயாச்சப்பா ..." என்றவளின் நெற்றி வேர்வையை தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடி,
"நாந்தாண்டா விட்டுட்டு வந்தேன் ... நீலாங்கரைல ஷூட்டிங் ... சரி நீயேன் டல்லா இருக்க ..." தந்தையின் கேள்விக்கு பதில் சொல்வதற்காக வாயை திறந்தவளை முந்திக் கொண்டு,
"ம்ம்கூம் கழுதை கெட்டா குட்டி சுவரு ... சங்கீ மங்கீ அவதாரம் எடுத்தா அதுக்கு ஒரே காரணம் தட் மொக்கராஜ் உங்க செல்ல பொண்ண பங்கமா மொக்க பண்ணிருக்கானு அர்த்தம் ..." என்று சிரித்தபடி கையில் காபி கப்புடன் தந்தையின் அருகில் வந்து உட்கார்ந்தான் செழியன்.
சந்திரசேகர் தன் இளம்வயதில் சினிமா மேக்கப் ஆர்டிஸ்டிடம் அசிஸ்டண்டாக பணியாற்றினார். அப்பொழுது சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சாந்தி மீது காதல் வர இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர். திரைத்துறையில் நிலையாக கால் பதிப்பதற்காக மனித உருவில் இருந்த ஓநாய்களின் இச்சைக்கு உடன்பட்ட சாந்தி, திருமணம் முடிந்ததும் அதிலிருந்து மெல்ல விலகிக் கொண்டார்.
சங்கீதாவும் செழியனும் பிறந்து அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்ததும், சின்ன திரையில் தன் கால் தடத்தை பதித்தார் சாந்தி. இன்று அவர் பிரபலமான குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக சீரியல்களில் வலம் வந்துக் கொண்டிருக்கார்.
காலப்போக்கில் சந்திரசேகர் ஆண்களுக்கான பியூட்டி சலூன் ஒன்றை சொந்தமாக தொடங்கியிருந்தார். தந்தையை பார்த்து வளர்ந்ததால் சங்கீதாவிற்கும் பியூட்டீஷியன் படிப்பில் நாட்டம் வர, இதோ இன்று அவளும் ஒரு சிறிய பியூட்டி பார்லருக்கு உரிமையாளர்.
என்னதான் கணவனும் மனைவியும் திரையுலகில் இருந்தாலும், இருவருக்கும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் பல அனுபவங்களை தந்திருக்க, தன் பிள்ளைகளை கேமரா வெளிச்சத்தில் இருந்து வெற்றிகரமாக மறைத்திருந்தனர். நன்கு தெரிந்தவர்களை தவிர இருவரும் சாந்தியின் பிள்ளைகள் என்ற உண்மை ஒருவருக்கும் தெரியாது.
தன்னை கிண்டலடித்து தம்பியை முறைத்து பார்த்தவள்,
"யாருடா மொக்க , முன்னபின்ன கண்ணாடில உன் மூஞ்ச பாத்துருக்கியா ... தொடப்ப குச்சுக்கு ஷார்ட்ஸ் மாட்டிகிட்டு அலையிறவன்லாம் தயாவ பத்தி பேச தகுதி இருக்கா ... மொதல்ல போட்டுருக்க ஷார்ட்ஸ் டிக்கிய விட்டு நழுவாம பாத்துக்கடா ... டிக்கியில்லாதவனே ... வந்துட்டான் அடுத்தவங்க முதுக சொரிய ... " என்று எகிறிய மகளை கண்டு சத்தம் போட்டு சிரித்தார் சந்திரசேகர். தன் மகனை ரசனையாக பார்த்தபடி,
"நல்லாத்தான் சாப்புடுற, அப்புறம் ஏண்டா கொஞ்சம் கூட சத வைக்க மாட்டுது ..." என்ற தந்தையை கண்டு முறைத்தவன்,
"இப்போ இது ரொம்ப முக்கியம் பாருங்க ... ஒருத்தி நாலு வருசமா பைத்தியக்காரி போல அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எவனையோ ஒருத்தனை பாக்க போறா அத பத்தி கவல படமா என் டிக்கிய ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க ..." என்று சிடுசிடுத்தான்.
"நீ எக்ஸாம் டைம்ல கூட அலாரம் வச்சு எழுந்தது இல்லையடி ... உனக்கே இது ஓவரா இல்ல ... ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னா கூட பரவால்ல நாலு வருசமா அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கியே ... ஒன்ன ஒருதடவையாவது திரும்பி பார்த்துருக்கானா ... நீ சைட் அடிக்கிறது கூடவா தெரியமா இருக்கும் ..." என்று ஆதங்கப்பட்ட தம்பியை பாவமாக பார்த்தவளின் சோர்ந்த முகத்தை கண்ட சந்திரசேகர்,
"ஏன்டா நா வேணா அவங்க வீட்டுல போய் பேசி பாக்கவா ..." என்ற தந்தையை நக்கலாக பார்த்த செழியன்,
"அய்யய்யய்யோ ... என்ன மகளதிகாரம் படம் ஓட்டுறீங்களா ... அவன யாருனு நினைசீங்க ... எப்படி அஜித் விஜய் கிட்ட கல்யாணம் சம்பந்தம் பண்ண முடியாதோ அப்படித்தான் அவன்கிட்டயும் ... உங்க பொண்ணு சைட் அடிச்சா அவன் நமக்கு ஈக்வல் ஆகிடுவான ... இவ்வளவு நாள் அவன் பின்னாடி தான் இவ சுத்திகிட்டு இருக்கா, ஒரு தடவையாவது திரும்பி பார்த்துருப்பானா ... இல்ல சைடு பார்வையாவது பார்த்துருப்பானா ..." என்று மகன் பேசிய உண்மையில் தந்தையின் முகம் சுருங்கி போனது. அதை கண்டு கோபம் கொண்ட சங்கீதா,
"என்னடா ரொம்ப ஓவரா பேசுற ... விஜய் அஜித்தும் இவனும் ஒண்ணா ... ரொம்ப ஓவரா பில்ட்டப் தராதா ஓகேவா ... இன்னும் த்ரீ மந்தல அவனே வந்து அப்பாகிட்ட பொண்ணு கேட்பான் அப்படி கேட்கல ... என் பேரு சங்கீ இல்ல ..." என்ற தமைக்கையை கண்டு நக்கலாக சிரித்தவன்,
"சங்கீ இல்ல மங்கீ ..." என்று சத்தமாக சிரித்தவன்,
"அப்புறம் மூணு மாசத்துக்கு அப்புறம் பீல் பண்ணி பாட ஏற்கனவே உனக்காகவே ஒரு பாட்ட வடிவேலு பாடியிருக்கார் ... என்னனு தெரியுமா ... நீ சங்கீ மங்கீ அடங்கோனு ... பாட அப்பா உனக்காக பீல் பண்ணி கண்ணீர் விட்டுகிட்டு இருப்பார் ..." என்று கிண்டலடித்தவன் கூறியதை கற்பனை பண்ணி பார்த்த அப்பா மகள் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட ஆளுக்கு ஒரு பக்கமாக செழியனை மொத்தி எடுத்தனர். அந்த இடமே கலகல என்று மாறவும், அங்கிருந்து எழுந்த சந்திரசேகர்
"நா போய் காபி எடுத்துட்டு வரேண்டா ..." என்று சமையலறை நோக்கி செல்லவும், அக்காவின் நாடியை பற்றிய செழியன்,
"மை அக்கா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும் ... யாருக்கவும் சோகமா இருக்க கூடாது … நீ கோப பட்டாலும் அவன் மொக்கராஜ் தான் ... அதுவுமில்லாம உனக்கு பிடிச்ச டிக்கியும் சொல்லிக்கிற சைஸ்ல இல்ல ... ஜீன் போட்டா ஐயன் பண்ணியது போல பிளாட்டா தான் இருக்கும் ... வெய்ட் பண்ணுவோம் உனக்குன்னு பொறந்த பெரிய டிக்கிகாரன் நம்ம முன்னாடி வராமலா போய்டுவான் ..." என்ற தம்பியின் கையை பின்னாடி வளைத்து முறுக்கி, முதுகில் கை முட்டியால் ஓங்கி வலிக்க குத்தினாள் சங்கீதா.
"ம்ம்மாஆஆ ..." என்று வலியில் அலறியப்படி படுக்கையில் புரண்டு படுத்தான் கமலேஷ் குணாளன். தன்னை கவனிக்காமல் குப்புற படுத்தபடி போனில் மூழ்கியிருந்தவனின் கவனத்தை கவரவே காமம் மிகுதியில் அவனின் எடுப்பான பின்னழகில் நறுக்கென்று கடித்திருந்தாள் நிவேதிதா. அவனின் தற்போதைய காதலி.
தன்னை பார்த்து வசீகரமாக சிரித்தவளின் வெற்றிடையை வலிய கரம் கொண்டு வளைத்து இழுத்து படுக்கையில் தள்ளியவன், அவள் மேல் படர்ந்தவாறே,
"சிக்ஸ் பீட் பாடில உனக்கு கடிக்க வேற இடமே கிடைக்கலையா ஹனி ..." என்று அவள் காது மடலை கடிக்க, குலுங்கி சிரித்தவள்,
"ரொம்ப நாளா அந்த ப்ளேஸ் என்ன டெம்ப்ட் பண்ணிட்டு இருந்துச்சு டார்லு ... யூ ஹேவ் நைஸ் ..." என்று அவன் பின்னழகை வர்ணிக்க, அதில் கிளர்ந்து போனவன்,
"ம்ம்ம் ... இது கூட கிக்க்கா இருக்குத்தான் ..." என்று சிரித்தபடி அவள் இதழை வன்மையாக கவ்விக் கொண்டவன், ஏற்கனவே பல முறை அறிந்த அவளின் இளமையின் வனப்பை மீண்டுமொரு முறை ஆர்வத்துடன் அறிய தொடங்கினான்.