All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த நல்ல நாளில் புது கதை தொடங்கியிருக்கேன். கதை என்று பார்த்தால்.. சாதாரணமான கதை தான்!

வழக்கமான பார்முலா கதை தான்! உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பொறுமையாக என் கதைக்காக காத்திருப்பவர்களுக்கு நன்றி ☺️

இனி இந்த கதையின் மூலம் சந்திக்கலாம்.

வாரம் இருமுறை யூடிகள் வரும்.

செவ்வாய் கிழமை மற்றும் சனிக்கிழமை யூடிகள் தருகிறேன்.

முதல் யூடி இன்று தருகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆழி உன் கையில் துளியாக!!


அத்தியாயம் 1

“யஷ்வந்த்!” என்று ராகவனும் கவிதாவும் அழைத்தவாறு பின்னே ஓடி வந்தார்‌கள்.

ஆனால் அவர்களது அழைப்பு மட்டுமில்லை.. சுற்றும் சுழலும் என்று எதுவும் கருத்தில் கொள்ளாது.. கையில் போடப்பட்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கியதால்.. வெளி வந்த இரத்தம் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருக்க.. அதைப் பற்றியும் கவலைப்படாமல் யஷ்வந்த் அந்த மருத்துவமனை வளாகத்தில் கால்கள் ஒத்துழைத்த வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.

‘நர்ஸ் ஸ்டேஷனில்’ அமர்ந்திருந்த செவிலிய பெண்.. நோயாளி ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடி வருவதைப் பார்த்து.. அவனைப் பிடிக்க ஓடி வந்தார். கூடவே அங்கு நோயாளிகளை பார்க்க வந்திருந்த மற்றவர்களும்.. திகைப்புடன் அவனைப் பார்த்தார்கள்.

தற்பொழுது தான்.. மூன்று நாட்கள் மயக்க நிலையில் இருந்து.. சுயநினைவிற்கு வந்த யஷ்வந்திற்கு.. கண்கள் சொருக.. காலில் இருந்து பூமி நழுவி விழுந்துவிடும் போன்று இருந்தது. எனவே கால்கள் தடுமாறி விழப் போனான்.

அப்பொழுது அவனை யாரோ தாங்கி பிடித்து.. அவனது உடல் கனம் தாங்காது.. அவனோடு கீழே விழுந்தது தெரிந்தது.

“ஸார் ஆர் யூ ஒகே!” என்று அவனது தோள்களை மெதுவாக உலுக்கியவாறு குரல் கேட்கவும், யஷ்வந்த்.. பசையென ஒட்டியிருந்த இமைகளை சிரமத்துடன் பிரித்து பார்த்தான்.

இளம்பெண் ஒருத்தி.. அவனோடு விழுந்து அவனை தனது மடியில் தாங்கியிருந்தாள்.

அவளைப் பார்த்த யஷ்வந்தின் கரம் ஒன்று மெல்ல உயர்ந்து.. அவளது முகத்தருகே சென்றது. அவனது உலர்ந்த உதடுகளை மெல்ல பிரித்தவன்.. “அ.. அ.. பர்ணா” என்று காற்றாய் போன குரலில் அழைத்துவிட்டு.. அவனது கரம் அவளது முகத்தை தீண்டாமலேயே சரிந்து விழுந்தது. அவனும் சுயவுணர்வு இழந்தான்.

அதற்குள் அவனுக்கு அருகில் வந்துவிட்ட செவிலியர்கள் அவனை மெல்ல தூக்கி.. கொண்டு வரப்பட்ட ஸ்டெக்ச்சரில் வைத்தனர். பின் அவனை மருத்துவப்பணியாளர்கள் தூக்கிக் கொண்டு.. அவசரப் சிகிச்சை பிரிவிற்கு.. விரைந்தார்கள். அவர்களது பின்னோடு யஷ்வந்தின் தந்தை ராகவனும் அன்னை கவிதாவும் கிட்டத்தட்ட ஓடினார்.

“ஷம்ருதா” என்று தோளைத் தொட்டு அவளது அன்னை அழைக்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“கையை கழுவிட்டு வாம்மா! அத்தையை பார்க்க போகலாம்.” என்றார்.

அதன் பின்பே தனது கரங்களைப் பார்த்தாள். சற்றுமுன் அவள் தாங்கி பிடித்தவனின் கையில் இருந்து வழிந்த இரத்தம் அவளது கரங்களிலும் அவள் அணிந்திருந்த க்ரேப் டாப்பிலும் ஆகியிருந்தது.

“மை பேவரெட் டாப்..” என்றவாறு எழவும்,

“இப்போதைக்கு கழுவி.. மஃப்லரில் மறைச்சுக்கோ! பக்கத்துல எதாவது ஷோரூம் இருந்தா.. வேற வாங்கி மாத்திக்கலாம்!” என்றார்.

உதடுகளை பிதுக்கியவாறு அங்கிருந்த செவிலியரிடம் கேட்டு.. கை கழுவும் பகுதிக்கு சென்றாள்.

அங்கு கரங்களையும் ஆடையும் சுத்தமாக கழுவிக் கொண்டிருந்த பொழுது.. இருவர் பேசிக் கொண்டிருந்தது கேட்டது‌.

மருத்துவ துப்புரவு பணியாளர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இவர் கூட ஆக்ஸிடென்ட் ஆனாவங்க தான்.. இங்கே வரும் போதே.. இறந்துட்டாங்களே! அது இவருக்கு தெரியாது போல பாவம்!”

“ஆமா! அபர்ணானு அந்த பொண்ணை கூப்பிட்டாரே.. அது அந்த பொண்ணோட பேரு தான்! பாவம் இரண்டு பேரும் லவ்வர்ஸ்.. சந்தோஷமா வாழ நினைச்சுருப்பாங்க‌‌! அதுக்குள்ள இப்படி ஆகியிருக்க கூடாது.”

“அந்த பொண்ணு.. அந்த அபர்ணா மாதிரி தான் கொஞ்சம் பார்க்கிறதுக்கு இருந்தாங்க! அதுதான் அப்படி கூப்பிட்டுருக்காங்க!”

“அப்படியா! அன்னைக்கு நான் சரியா பார்க்கலை.”

“ரூம் நம்பர் த்ரீ ஃபை‌ ஜீரோல பேசன்ட் வாமிட் செய்திருக்காங்க.. போய் கிளின் பண்ணிருங்க அக்கா!” என்கவும்.. இருவரும் கலைந்து சென்றார்கள்.

ஷம்ருதா கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை இடப்பக்கமும் வலப்பக்கமும் திருப்பிப் பார்த்தவள், பின் தோள்களை குலுக்கி விட்டு அகன்றாள்.

அதன் பின் அவள் அந்த சம்பவத்தை மறந்தே விட்டாள்.

ஆனால் ஒரு ஜீவன் அந்த சம்பவத்தை மறக்க முடியாமல் தவிக்க போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

யஷ்வந்த்!

தென்னிந்தியாவில் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரான ராகவனின் ஒரே மகன்!

செல்வங்களில் புரண்டு வளர்ந்தவனுக்கு.. அந்த திமிரும் அதிகாரமும் சிறிதும் அவனிடம் இல்லை! தனது செல்வ நிலை குறிப்பிட்டு அவன் எங்கேயும் பேசியதும் இல்லை. நடந்து கொண்டதும் இல்லை. வெளிநாட்டில் படிக்க வைக்க வாய்ப்பும்.. செல்வமும் இருந்தும்‌.. தனது ஒரே‌ பிள்ளையை பிரிந்திருக்க மனமில்லாது.. சென்னையிலேயே பள்ளிப்படிப்பையும்‌.. புகழ்பெற்ற வேலூர் ஐடி கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடிக்க வைத்தார். நண்பர்கள் பல கொண்ட யஷ்வந்த் இதுவரை.. தனக்கு இவை வேண்டும் என்று‌ எதையும் கேட்டதில்லை. அவனது பெற்றோரும் அந்த நிலை வரை கொண்டு வந்தது இல்லை. அவனுக்கு எளிமையும் கற்றுக் கொடுத்தனர். பணத்தின் அருமையும் கற்றுக் கொடுத்தனர். தொழிலையும் கற்றுக் கொடுத்தனர். யஷ்வந்தும்.. திறமையும் ஒழுக்கமும் கொண்டவனாய் வளர்ந்து முப்பதாம் அகவையில் நிற்கிறான்.

அவனிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம். நினைத்தை சாதிக்கும் இரகம் அவன்! ஒன்றை நினைத்து விட்டால்.. அவன் விரும்பியது நடக்க எதை வேண்டுமென்றாலும் செய்வான். அதற்காக அவனது குணங்கள் கூட மாறும். நினைத்தது நடக்காத வரை.. அவனை நெருங்க முடியாது. இதுவரை அந்த சூழ்நிலை வரை.. அவனது வாழ்வு சென்றது இல்லை. அவனது பெற்றோர்கள் விட்டதும் இல்லை.

எனவே மற்றபடி எவ்வித பிரச்சினைகளும் இல்லாது வாழ்த்துக் கொண்டிருந்தவன் அபர்ணாவை கைக்கடிகாரம் வாங்கும் கடையில் தான் முதலில் பார்த்தான்.

அவளது அழகில் ஈர்க்கப்பட்ட அவன்! அவள் பேசும் அழகில் மயங்கி.. வேண்டுமென்றே பேரம் பேசினான். அவன் பெரும் பணக்காரன் என்று அறியாத அந்த பேதையும்.. அவனுடன் மல்லுக்கட்டினாள்.

அந்த கடையின் முதலாளி வந்து அவன் யார் என்று கூறவும் அபர்ணா தர்மசங்கடத்துடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.

புன்னகைத்தவாறு.. அங்கிருந்து அகன்ற.. யஷ்வந்திற்கு.. அவளை நினைவுகளில் இருந்து அகல முடியவில்லை. அவள் மீது காதல் கொண்டதை கண்டு கொண்டான். அடுத்த நாளே.. அவள் முன் சென்று தனது காதலை வெளிப்படுத்தினான். ஆனால் அவனது பொருளாதார நிலை கண்டு.. அபர்ணா அஞ்சி மறுத்துவிடவும், தொடர்ந்து தினமும் அவளை சந்தித்து.. தனது காதலை உணர்த்திக் கொண்டே இருந்தான்.

முடிவில் அவனது காதலை அவன் அடையும் வேளையில்.. அந்த விபத்து நிகழ்ந்தது. யஷ்வந்த் தான் காரை ஓட்டிக் கொண்டு சென்றான். ஆனால் எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று வந்து இடித்ததில்.. அபர்ணாவின் உயிர் அங்கேயே பிரிந்து விட.. தற்காப்பு பலூனின் மூலம் யஷ்வந்த் உயிர் தப்பினான்‌.

ஆனால் சுயநிலை வந்த பின்.. அவன் தெரிந்துக் கொண்ட விசயம்.. அவனின் உயிரை அறுத்தது‌. அபர்ணாவுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவன் கண்ட கற்பனைகள் தவிடு பொடி ஆனதில்.. வெறும் கூடாய் சுற்றினான். அபர்ணாவின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டு.. சித்திரவதை செய்யப்பட்ட போதும்.. அவனுக்கு திருப்தியை தரவில்லை.

ஆளே மாறிப் போனான். கலகலப்பாக பேசும் அவன்.. அமைதியாக வலம் வந்தான். நண்பர்களுடன் அரட்டையில் அமளிப்படுத்தும் அவன் எதையோ இழந்துவிட்ட தோற்றத்தில் இருந்தான்.

அவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள.. அவனது நண்பர்களும் பெற்றோர்களும் செய்த முயற்சி வீணாய் போனது.

அப்படியொரு இரவில் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவனுக்கு‌.. அவனையும் மீறி.. விபத்து நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். பின் அவனுக்கு அபர்ணா இறந்துவிட்ட செய்தியை அவனது பெற்றோர் கூறியதை நினைத்து பார்த்தான். அவனும் அது கேட்டு.. என்ன செய்கிறோம் என்ற நினைவில்லாது. கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கி எறிந்துவிட்டு ஓடியதை நினைத்துப் பார்த்தான்.

அந்த நினைவுகளின் கோர்வையில் அபர்ணாவின் முகம் வந்தது.

உடனே விருக்கென்று எழுந்து அமர்ந்தான்.

இல்லை! அவள் அபர்ணா இல்லை!

ஆனால்??

அதற்கு பின் அவனால் உறக்கம் கொள்ளவில்லை.‌ எப்பொழுது விடியும்‌‌ என்று நேரத்தை ஓட்டியவன், விடிந்ததும்.. ஆறு மாதங்களுக்கு முன் அவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்தான்.

அவனை அங்கு நன்கு அடையாளம் காணப்பட்டு.. அவனுக்குரிய மரியாதையும் தரப்பட்டது.

யஷ்வந்த் அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு முன்.. அவனுக்கு விபத்து நடந்த மூன்று நாட்களுக்கு பின்.. அவன் அறையை விட்டு வெளியே ஓடி வந்த பொழுது.. பதிவான சிசிடிவி காட்சியை பார்க்க வேண்டும் என்றுக் கேட்டான்.

அவர்கள் விழித்தாலும்.. மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளை தனி நபருக்கு தருவதில்லை என்றனர்‌.

அங்கு அவன் தன் வாழ்வில் முதன்முறையாக தனது செல்வநிலையையும்.. அதிகாரத்தையும் காட்டினான்.

அதற்கு அடிப்பணிந்து அவர்கள்.. ஆறு மாதங்களுக்கு முன்.. எடுத்த பதிவுகளை தேடி அவனுக்கு காட்டினர்.

அவனுக்கு தேதி நன்றாக நினைவிருந்ததால்.. தேடி எடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை.

அந்த காட்சி ஒளிப்பரப்பானது. யஷ்வந்த் படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அறையில் இருந்து ஓடி வந்தவன்.. சிறிது தூரம் ஓடியதுமே கால்கள் தடுமாற சரிய போனான். அப்பொழுது சரிய போனவனை இரு கரங்கள் தாங்க முயன்றது. ஆனால் அவனை தாங்க முடியாது.. அவனோடு சரிந்து விழுந்தாள். உடனே சுதாரித்து எழுந்தவள், விழுந்தவனை தனது மடியில் தாங்கி அமர்ந்த பொழுது‌‌.. அவளது முகம் நன்றாக தெரிந்தது.

ஆம்‌.. அபர்ணாவின் ஒத்த சாயல் கொண்டிருந்தாள்.

அபர்ணாவின் வெள்ளை நிறம் இல்லை. அவளைப் போல் மெலிவும் இல்லை. அபர்ணாவிற்கு இருக்கும் நீண்ட கூந்தலும் இல்லை. அவளுக்கு இருப்பது போல்.. நேரான கூர்மூக்கு இல்லை. சுடிதாரும் அணிந்திருக்கவில்லை‌.

ஆனால் அந்த முகவெட்டு, கண்கள், இதழ்கள் அனைத்தும் அபர்ணாவை ஒத்திருந்தது. மேலும் எதோ ஒன்று அவளை மெருகூட்டியிருந்தது.

அந்த பதிவில் அவளை தொட முயன்றவன், மூர்ச்சையாகி சரிந்துவிட்டதை பார்த்தவன், பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான்.

பின் தொடர்ந்து காட்சிகளை பார்த்தான். அந்த பெண்.. எழுந்து சென்று கை கழுவிவிட்டு வந்து ஒரு பெண்மணியுடன் இணைந்து கொண்டாள். பின் இருவரும் ஒரு நோயாளியின் அறைக்குள் சென்றார்கள்.

உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்த யஷ்வந்த் அடுத்து கேட்ட கேள்வியில் அலுவலர்கள் ஆடிப் போனார்கள்.

இருவரும் நுழைந்த அறையில் இருந்த நோயாளியின் முகவரியை கேட்டான்.

நோயாளியின் விபரங்களை கூறுவது.. சட்டத்திற்கு புறம்பானது.. என்று அவர்கள்‌ மறுத்த பொழுது.. அங்கு பணம் விளையாடியது. அவன் கேட்ட விபரங்கள் கையில் கிடைத்தது.

பின் துப்பறியும் நிறுவனத்தை அணுகி.. அந்த நோயாளியின் முகவரியை கொடுத்தவன், அபர்ணாவின் ஒத்த சாயல் கொண்ட பெண்ணின் காணொளியையும் காட்டினான்.

“இந்த அட்ரஸில் இருப்பவரின் பெண்ணாக இருக்கலாம் அல்லது இவரது உறவினர்களில் யாரோ ஒருவராக இந்த பெண் இருக்கலாம்! யார் என்று கண்டுப்பிடித்து அவளைப் பற்றிய விபரங்கள் வேண்டும்.” என்றுக் கூறினான்.

அடுத்த நான்கு நாட்களில் அவன் கேட்ட விபரங்களுடன் அவளது படங்களும் அவனது கம்ப்யூட்டருக்கு வந்தன.

மெல்ல ஆட்காட்டி‌ விரலை உயர்த்தி அவளது முகவடிவை அளந்தான். பின் விபரங்களை பார்த்தான்.

பெயர் : ஷம்ருதா
வயது : இருபத்திநான்கு
படிப்பு : விஷுவல் கம்யூனிகேஷன்
ஸ்ட்டெட்டஸ் : சின்கிள்

அவளது முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.

புன்முறுவலுடன் பார்த்தவன், உடனே அங்கு செல்ல மனம் பரபரக்க‌.. கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். நேரம் இரவு ஒன்பதை காட்டவும், நாளை செல்ல முடிவெடுத்தான்.

பின்பே அவனுக்கு அன்று.. நண்பர்களுடன் கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பது நினைவிற்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு.. கூட அவனது நண்பன் விமல் அழைத்து நினைவுப்படுத்தினான். ஆனால் இந்த ஒரு மணி நேரம்.. அவன் வேறு உலகத்திற்குள் இருந்திருக்கிறான். புன்சிரிப்புடன் கணிணியை மூடி‌ வைத்துவிட்டு.. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த.. ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றான்.

அங்கு பதிவு செய்து வைத்திருந்த மேசையில் அவனது நண்பர்கள் விமல், விதார்த், ரஞ்சித் மற்றும் ஸ்ரீராம் அமர்ந்திருந்தார்கள். கூடவே விமல் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பெண் ப்ரீத்தி! ஸ்ரீராமின் காதலி கன்னிகா, ரஞ்சித்தின் மனைவி சாருமதியும் அமர்ந்திருந்தார்கள்.

இந்த நான்கு பேரும்.. பள்ளிப் படிப்பில் இருந்து ஒன்றாக படித்த உயிர் தோழர்கள்!

அன்று.. விபத்து நடந்த பொழுது.. தனது காதலியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தான்.. வந்துக் கொண்டிருந்தான். அதற்குள் விபத்து நிகழ்ந்து விட.. பதட்டத்துடன் ஓடி வந்தார்கள்.

நண்பன் அறிமுகம் செய்து வைக்காத அவனின் காதலியை விட.. அவர்களுக்கு.. யஷ்வந்தின் நலம் தான் முக்கியமாக பட.. முடிந்தளவு அவனை பழையபடி துறுதுறுப்பாக வைத்துக் கொள்ள தங்களால் ஆனா முயற்சிகள் செய்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

இதோ இப்பொழுது கூட.. பத்து நாட்கள் கழித்து வரும் யஷ்வந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றி திட்டம் போட தான் கூடியிருக்கிறார்கள்.

யஷ்வந்த் வருவதை பார்த்தவர்கள்‌ உற்சாகத்துடன் கையை ஆட்டி வரவேற்றார்கள். புன்னகையுடன் வந்த யஷ்வந்தை பார்த்தவர்களின் கண்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் விரிந்தது.

“ஹாய் பிரெண்ட்ஸ்..” என்று வந்த யஷ்வந்த் அவர்களின் முகத்தைப் பார்த்து சிரித்தான்.

விமல் “என்னாச்சு! உன் முகத்துல பல்பு எரியுது.” என்று வழக்கம் போல ஓட்டினான்.

அதற்கு யஷ்வந்த் “ரியலி!” என்று அதற்கும் முறுவலித்தான்.

விதார்த் “நாங்க என்ன விசயம் என்றுக் கேட்காமலேயே நீயே சொல்லுவேனு நினைக்கிறேன்.” என்கவும், யஷ்வந்தின் முகம் சிறுத்தது.

பின் “சொல்வதற்கு விசயம் இருக்கணும் விதார்த்! எனக்கே இன்னும் அந்த மேட்டர்.. நிச்சயமா என்று தெரியலை. அப்படி அந்த மேட்டரில் கிளியர் ஆகிற போது.. உங்களுக்கு சொல்கிறேன்.” என்றான்.

ரஞ்சித் தனது தலையில் கையை வைத்து.. “நீ சொல்றது எனக்கு சத்தியமா புரியலை!” என்றான்.

அதற்கு விமல் சிரித்தவாறு “உனக்கு எதாவது விசயம் புரிந்தால் தான் அதிசயம்..” என்றான்.

பின் விமல் யஷ்வந்தை பார்த்து “யஷ்வந்த்! ரியலி நீ ஒகே தானே?” என்றுக் கேட்டான்.

அதற்கு யஷ்வந்த் “ஐயம் நாட் ஒகே! ப்ரீத்தியை பார்க்கிற போதெல்லாம் கில்டியா இருக்கு.. எதுக்கு உன் மேரேஜ்ஜை நிறுத்தினே?” என்றுக் கேட்டான்.

அதற்கு விமல் “உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி.. நீ ஹஸ்பெட்டல இருக்கும் போது.. எப்படி நான் மேரேஜ் செய்துக் கொள்வது?” என்றுக் கேட்டான்.

ப்ரீத்தி “யஷ்வந்த்! எங்களுக்கு பிரச்சனையே இல்லை. நாங்க மேரேஜ்ஜை நிறுத்தலையே தள்ளி தானே போட்டிருக்கோம். அப்போ தான் மேரேஜ் இன்வடேஷன் கொடுக்க ஆரம்பித்திருந்தோம். அதனால் பெருசா.. எந்த நஷ்டமும் வரலை. நீங்க ப்ளீஸ் ப்ரீயா விடுங்க..” என்றான்.

அதற்கு யஷ்வந்த் “அதுமட்டுமா.. என்னைப் பார்த்தா.. நீங்க ஜோடியா சுத்துவதைப் பார்த்து பொறாமை படர மாதிரியோ.. ஃபீல் பண்ர மாதிரியோவா இருக்கு! நீ மேரேஜ்ஜை நிறுத்தி வச்சுருக்கே! அவன் என் முன்னாடி வைஃப் கிட்ட‌ பேசரது இல்லை. அவன் லவ்வரை கண்ணுலேயே காட்டுவது இல்லை. அதனால் தான் எல்லாரையும் இன்னைக்கு கூட்டிட்டு வரச் சொன்னேன்.” என்றான்.

ஸ்ரீராம் “அப்படியில்லை டா” என்கவும், யஷ்வந்த் “அஃகோர்ஸ் அபர்ணாவை நான் இழந்திருக்க கூடாது. அவ கூட வாழர வாழ்க்கை பற்றி நிறையா கற்பனை செய்து வச்சுருந்தேன். அதெல்லாம் ஒண்ணுமே இல்லாம போனதாலே அப்செட் ஆனது உண்மை தான்! இன்னும் அதுல இருந்து என்னால் வெளியே வர முடியலை தான்! பட் எஸ்.. அதுல இருந்து வெளி வர ட்ரை செய்கிறேன் டா..” என்றவனுக்கு.. சிசிடிவியில் பார்த்த ஷம்ருதா நினைவிற்கு வந்தாள்.

பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன்.. அனைவரும் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

யஷ்வந்த் “வா.‌. வாட்!” என்கவும்.. அனைவரும் “ஹெ..” என்ற கத்தலுடன் அவனை அணைத்துக் கொண்டார்கள்.

பின் வழக்கமான கலகலப்பு இல்லை என்றாலும்.. சிரிப்பு சத்தம் அங்கே கேட்டது. விரும்பிய உணவை தருவித்து சாப்பிட ஆரம்பித்தனர்.

ஸ்ரீராம் அடுத்த பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

“ஒகே லெட்ஸ் கம் டு திஸ் மேட்டர்! இன்னும் டென் டேஸில் வருகிற உன் பர்த்டேக்கு எங்களுக்கு செம ட்ரீட் வந்தாகணும். யஷ்வந்த்! எங்கே போகலாம். கோவா, குலுமாணலி, தாய்லாந்து, இலண்டன்..” என்று அடுக்கி கொண்டே போனான்.

அதற்கு யஷ்வந்த் “யூவர்ஸ் விஷ்!” என்றுப்‌ புன்னகைத்தான்.

நண்பனின் பட்டும் படாமல் வந்த பதில்.. மற்றவர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும்.. வெகுநாட்களுக்கு பின்.. முகத்தில் சோக ரேகை இல்லாமல்.. இதற்கு சம்மதம் தெரிவித்ததே மகிழ்ச்சி கொண்டார்கள்.

ஸ்ரீராம் தாய்லாந்து என்றும் ரஞ்சித் குலுமணாலி என்றும்.. ஆளுக்கு ஒன்றை சொல்லி வாதிட்டு கொண்டிருந்தார்கள்.

அதில் விதார்த் அடிக்கடி கைக்கடிகாரத்தையும்..‌ செல்பேசியையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைக் கவனித்த யஷ்வந்த் “ஆர் யூ எக்ஸ்பெக்ட்டிங் சம்ஒன்?” என்றுக் கேட்டான்.

அதற்கு விதார்த் அசட்டு சிரிப்புடன் “ஆக்சுவலி உனக்கு சர்பரைஸ்டா! சர்பரைஸிற்கு விபரம் கேட்க கூடாது.” என்கவும், யஷ்வந்த் சத்தமாகவே சிரித்தான்.

உடனே மற்றவர்கள் “என்னது மறுபடியும் சர்பரைஸா!” என்று‌ அதிர்ச்சி போல் கேட்டு கண்ணடித்தார்கள்.

அவர்களது கிண்டல் புரிந்த விதார்த் அலறியவனாய் “மறுபடியும் ஒரு சர்பரைஸை கொண்டு வந்தால்.. எனக்கு தர்ம‌அடி கன்பார்ம்! இரண்டு நாளுக்கு முன்னாடி உங்களுக்கு சொன்ன அதே சர்பரைஸை தான் இப்போ காட்ட போறேன்.” என்று அறிவித்தான்.

மற்றவர்கள் “ஹெ சூப்பர்!” என்று‌ மேசையை தட்டி அர்ப்பரித்தார்கள்.

அப்பொழுது.. பலமாகவும் அழுத்தமாகவும் படபடவென மேசையை தட்டி.. ஆர்ப்பரிப்பை அடக்கிய யஷ்வந்த் “என்ன விசயம் என்று சொல்லுலைன்னா.. உங்களை நான் துரத்தியடிப்பது உறுதி!” என்றான்.

அப்பொழுது விதார்த்தின் செல்பேசி ஒலிக்கவும், “எஸ்! எஸ்! இங்கே தான் இருக்கோம். ஆஃப் அன்‌ ஹவுரா வெயிட் செய்றோம். டேபிள் நம்பர் சிக்ஸ்டின்ல இருக்கோம். லெல்ஃப்ட் சைட் ஆஃப் த டொர்” என்று‌ யாருக்கோ விபரம் கூறினான்.

வருவது ஒரு நபர் என்பது வரை தெரிந்த யஷ்வந்த் அசட்டையுடன் வாசல் கதவை பார்த்தான். அங்கு காதில் செல்பேசியுடன் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும்.. சில்லென்ற அவனது இதயம் உறைந்தது.

எந்த பெண்ணால்.. அவனது முகத்தில் மீண்டும்.. தெளிவு வந்ததோ! எந்த பெண்ணை நாளை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ! அந்த பெண்.. ஷம்ருதா அங்கே நின்றிருந்தாள்.

விதார்த் எழுந்து கையசைக்கவும், அவளும் முறுவலுடன் கையசைத்துவிட்டு.. அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.

யஷ்வந்த் இன்னும் உறைந்தவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் பல வண்ண எண்ணங்கள்‌ ஓடிக் கொண்டிருந்தன.

அவன் இந்த பெண்ணை சந்திக்க விரும்பியதை அறிந்து அவனது நண்பர்கள் ‘சர்பரைஸாக’ சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களோ!

அவர்கள்‌ எப்படி அறிவார்கள்?

அவனது மனதையும் அறிவார்களா?

அபர்ணாவை இவர்கள் பார்க்கவில்லையே.. பின் எதற்கு இவளை நான் சந்திக்க விரும்பினேன் என்று அறிவார்களோ?

அவனது மனதில் இத்தனை கேள்விகள்‌ ஓடிக் கொண்டிருந்தாலும்.. இமைகளை கூட அசைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதற்கு இவளை சந்திக்க விரும்பினான்.. என்றுக் கேட்டால்.. அவனிடம் பதிலில்லை. அபர்ணாவை ஒத்த சாயல் கொண்டதால்.. இவளிடம் அபர்ணாவை தேடுகிறானா.. என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை. அவனுக்கு வேண்டியது.. சிறு சந்திப்பு மட்டுமே.. அந்த சந்திப்பு எதில் கொண்டு போய் முடியும் என்று அவனுக்கு தெரியாது.

அவனுக்கு வேண்டியது என்ன!

அபர்ணாவை ஒத்த சாயலை கொண்டவளிடம் சிறு ஆறுதலா! சிறு கருத்து பரிமாற்றமா! காதலா! நிறைவேறாத விருப்பதையா!

எதை எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் தற்பொழுது அவன் இருக்கும் இடத்திற்கு அவளே வருவாள்‌ என்று எதிர்பார்க்கவில்லை. அவனது மனதில் தானாக தோன்றிய படபடப்பையும் அவனால் அடக்க முடியவில்லை.

அதற்குள் அருகில் வந்துவிட்டவளை எழுந்து நின்று விதார்த் ஒரு கட்டியணைப்புடன் வரவேற்கவும், யஷ்வந்தின் புருவம் யோசனையில் சுருங்கியது.

மற்றவர்களும் எழுந்து நின்று.. அவளிடம் கரத்தை குலுக்கி வாழ்த்தினர்.

யஷ்வந்தின் உள்மனது ஏதோ சரியில்லை என்றுக் கூறியது.

புன்னகையுடன் யஷ்வந்தின் புறம் திரும்பிய விதார்த் “யஷ்வந்த்! இவ ஷம்ருதா! என்னோட வுட் பீ!” என்று‌ அறிமுகம் செய்தான்.

யஷ்வந்தின் புருவம் மேலும் சுருங்கியது.

அவனும் புன்னகையுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவிப்பான் என்று ஷம்ருதா காத்திருக்க.. யஷ்வந்தோ “டேக் யுவர் சீட்!” என்று இன்டர்வீயூக்கு வந்தவர்களை அமர கூறுவது போல் கூறினான்.

அதைக் கேட்டு ஷம்ருதாவின் முகம் சுருங்கியது.

மற்றவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை போல!

அவர்கள் விதார்த்திடம் ஜோடி பொருத்தத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரஞ்சித் ஷம்ருதாவிடம் “இவன் சரியான ஆளு! உங்களைப்‌ பற்றி ரிவால்வ் செய்ய.. பந்தா காட்டினான் தெரியுமா! புது படம் ரீலிஸ் ஆகிறதுக்கு முன்னாடி.. முதல்ல போஸ்டர் ரீலிஸ் செய்வாங்க.. அடுத்தது கிளிம்ப்ஸ்.. அடுத்து லீரிக்ஸ் வீடியோ.. அடுத்து ஆடியோ லன்ச்.. அப்பறமா படம் ரீலிஸ் மாதிரி செய்தான். முதல்ல வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்னான். அப்பறம் மீட் செய்தோம் என்று சொன்னான். அப்பறம் மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சுனு சொன்னான். அப்பறம் பேரை சொன்னான். இன்னைக்கு தான் ஆளையே காட்டியிருக்கிறான்.” என்றான்.

உடனே ஷம்ருதா “ஹெ.. சும்மா விதார்த்தை ஓட்டாதீங்க.. அவன் வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்ன போதும் சரி.. பிக்ஸ் ஆகிடுச்சுனு சொன்ன போதும் சரி.. நீங்க யாரும் நம்பலை தானே!” என்றாள்.

விமல் “பின்னே இவனை மாதிரி ஒரு ஆளு வீட்டுல பார்த்த பொண்ணை மேரேஜ் செய்துக்க போகிறான் என்றுச் சொன்னா எப்படி நம்புவது!” என்றுச் சிரித்தான்.

விதார்த் “ஹெ.. என் அப்பாவும் இவ அப்பாவும் பிரெண்ட்ஸ்! நாங்க எப்போதாவது எதாவது பார்ட்டியில பார்த்துப்போம் அவ்வளவு தான் ஷம்ருதா கூட பழக்கம்! அவங்க தான் பேசி.. இந்த சம்பந்ததை முடிச்சாங்க.. எங்களுக்கு ஒகே! அவ்வளவு தான்!” என்றவன், பின் தொடர்ந்து “அப்பறம்.. இவ லேசுப்பட்ட ஆளில்லை. இவ இன்டர்நேஷனல் ஸ்விம்மிங் சேம்பியன்! சிங்கப்பூர்ல நடந்த போட்டியில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கா‌‌!” என்றதும்.. அனைவரும் கைத்தட்டி வாழ்த்தினர்.

“தேங்க்யூ! தேங்க்யூ! தேங்க்யூ!” என்று தலையை ஆட்டி வாழ்த்தை ஏற்றவள்.. அப்பொழுதே இவர்களின் எந்த பேச்சிலும் கலந்து கொள்ளாது.. யஷ்வந்த் அவளையே‌ பார்த்துக் கொண்டிருப்பதைக் பார்த்தாள்.

அதைப் பார்த்த ஷம்ருதாவிற்கு கடுப்பானாது.

விமல் “சரி பேசியதை கன்டினியூ செய்யலாமா! இந்த வேகேஷன் ப்ளஸ் யஷ்வந்த் பர்த்டே செலபேரேஷனுக்கு எங்கே போகலாம்?” என்றுக் கேட்டான்.

அதற்கு ரஞ்சித் “இன்றைய ஸ்பெஷல் மூமென்ட்டுக்கு காரணமான நம்ம விதார்த் பியான்ஸியை டிசைட் செய்ய சொல்லலாமா?” என்றுச் கேட்டான்.

மற்றவர்கள் எஸ் என்று ஆமோதித்தவாறு கை தட்டினார்கள்.

அப்பொழுது யஷ்வந்த் அழுத்தமான குரலில் “வெகேஷன் வராதவங்க கிட்ட எதுக்கு ஒப்பீனியன் கேட்கணும். நீங்க டிசைட் செய்யுங்க!” என்றுக் கூறினான்.

ஏனோ யஷ்வந்திற்கு உள்ளே எரிவது போன்று இருந்தது.

அவன் ஷம்ருதாவை சந்தித்த பின்.. அவளைப் பொருத்தவரை அவனது நிலை என்ன என்றுத் தெரிந்த பின்.. இன்னொருவருக்கு சொந்தமாக போகிறாள்.. என்று தெரிந்திருந்தால்.. ஒன்றும் தோன்றியிருக்காது. ஆனால் திடுமென இன்னொருவனுக்கு சொந்தமானவள் என்று நிற்கவும்.. யஷ்வந்திற்கு ஏனோ அவனது விசயத்தை அவனது அனுமதியின்றி.. மற்றவர்கள் தீர்மானம் செய்து விட்டது போன்று இருந்தது. கூடவே நினைத்தது நடக்க வேண்டும்.. என்ற குணம் கொண்டவனுக்கு.. அபர்ணாவுடனான அவனது வாழ்வு என்றும் நிறைவேறாத விசயமாக ஆகிவிட்டதால் வந்த இறுக்கம் கொண்டிருந்தான். தற்பொழுது‌‌.. இதுவும் அவன் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக போய்விடுமோ.. என்று மேலும் கல் என இறுகி நின்றான். எனவே வார்த்தைகளும் கடினமாக வந்தது.

மற்றவர்கள் நண்பனுக்கு மனைவியாக போகிறவளை யஷ்வந்த் சீண்டி விளையாடுகிறான் என்று நினைத்தார்கள்.

ஆனால் முதலிலேயே யஷ்வந்த் தன்னை அவமரியாதை செய்துவிட்டது போன்ற எண்ணத்தில் இருந்த ஷம்ருதாவிற்கு..‌‌ யஷ்வந்த் அவளை ஒதுக்கி பேசியது மேலும் கடுப்பை ஏற்றியது.

“இனி விதார்த் நானில்லாமல் எங்கேயும் போக மாட்டான். ஆனா விதார்த் உங்களோட பெஸ்ட் பிரெண்ட்.. உங்க கூட வெகேஷனுக்கு கண்டிப்பா வருவான். இப்போ நான் பேசியதின் அர்த்தம் புரியுதா!” என்றுக் கேட்டாள்.

விதார்த் முகம் பிரகாசம் ஆக‌‌.. “ஹெ ஷம்ருதா! நிஜமா சொல்றீயா! எங்க கூட வரீயா! வீட்டுல ஒத்துக்குவாங்களா?” என்று‌ ஆசையும் மகிழச்சியுமாக கேட்டான்.

அதற்கு ஷம்ருதா “உன் கூட தானே வரப் போறேன். இதுல அவங்க எதுக்கு நோ சொல்ல போறாங்க..” என்று வாயில் கையை வைத்துச் சிரித்து கண்ணடிக்கவும், புரிந்த விட்ட நண்பர்கள் “ஹெ!” கத்தினார்கள்.

ஷம்ருதா சிரித்தவாறு “அவரோட பிரெண்ட்ஸ் குரூப் நீங்களெல்லாம் கூட வரீங்க என்கிற போது.. என் பெரெண்ட்ஸ் ஒகே தான் சொல்வாங்க..” என்றாள்.

அப்பொழுது யஷ்வந்த் “உங்களுக்கு கொடுத்த டைம் ஓவர்! பிளஸை நானே டிசைன் செய்கிறேன். நாம வெகேஷனுக்கு மாலத்தீவு போகிறோம். என்னோட ஷீப்ல தான் போகப் போகிறோம் டாட்” என்று முடித்து வைத்தான்.

மற்றவர்கள் “வாவ் சூப்பர்! செம பிளன்! ஹவர் யஷ்வந்த் இஸ் பேக்!” என்று மேசையில் தட்டி தங்களது சந்தோஷத்தை தெரிவித்தார்கள்‌.

பின் ஒருத்தரை ஒருத்தர் காலை வாரியவாறும் புதிதாக அவர்களது குழுவில் இணைந்திருக்கும்.. ஷம்ருதாவை பற்றி விசாரித்தவாறு சாப்பிட்டு முடித்தார்கள்.

இந்த பேச்சில் யஷ்வந்த் கலந்து கொள்ளவில்லை என்றாலும்.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும்.. அவனது சிறு சொகுசு கப்பல்.. அரபி கடலில் பயணம் செய்ய அரசிடம் அனுமதி வாங்கியதும்.. இரு நாட்களில் கிளம்பலாம். அனைவரையும் தயாராக இருக்கமாறு யஷ்வந்த் கூறினான். பின் அனைவரும் கலைந்தார்கள்.

கார் பார்க்கிங்கில் லாக் கீயை அழுத்தியவாறு.. யஷ்வந்த் சென்றுக் கொண்டிருந்த பொழுது “எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற குரலில் திரும்பிப் பார்த்தான்.

அங்கு ஷம்ருதா நின்றிருந்தாள்.

யஷ்வந்த் திரும்பி பார்த்ததும்.‌. அவனை நோக்கி வந்தவள் எடுத்த எடுப்பில் “என்னை உங்களுக்கு தெரியுமா!” என்றுக் கேட்டாள்.

யஷ்வந்த் அமைதியாக புருவத்தை சுருக்கவும், “முதலிலேயே நாம் மீட் செய்திருக்கோமா?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

ஷம்ருதா தொடர்ந்து “இப்படி சைலன்டா இருந்தால் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதீங்க! உங்களுக்கு நான் இங்கே வந்தது பிடிக்கலைனு கிளியரா தெரியுது.” என்றாள்.

அப்பொழுதும் யஷ்வந்த் அமைதியாக இருக்கவும்.. ஷம்ருதா “உங்களுக்கு பிடிக்காத ஏதோ விசயத்தை.. நான் செய்துட்டேன் போல..” என்கையில் யஷ்வந்த் குறுக்கிட்டான்‌.

“எஸ்”

உடனே ஷம்ருதா மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு “அப்படியா! அப்படி நான் என்ன செய்தேன்?” என்று கேட்ட மறுகணம் யஷ்வந்திடம் இருந்து பதில் வந்தது.

“விதார்த்துடன் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்க கூடாது. என் கூட உன் லைஃப் இணைந்திருக்கணும்.”















 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

“ஹவ் டேமிட்! என்ன பார்த்ததும் லவ்வா!” என்ற ஷம்ருதா நக்கல் சிரிப்புடன் “இந்த மாதிரி கதையெல்லாம் ஓல்டு ஃபேஷன்! படத்துல வந்தா கூட ட்ரோல் செய்வாங்க! சோ டொன்ட் தின்க் ஃபுலீஷ்!” என்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்தாள்.

யஷ்வந்தின் விழிகள் இடுக்கியது.

அவளிடம் நெருங்கியவன் “உன்னை லவ் செய்கிறேன்னு எப்போதாவது சொன்னேனா..” என்றுக் கேட்டான்.

“அப்போ நீ சொன்னதிற்கு என்ன அர்த்தம்!” என்றுக் காட்டத்துடன் கேட்டாள்.

“யூ ஆர் மைன்!”

“வாட்!”

யஷ்வந்த் தோள்களை குலுக்கினான்.

ஷம்ருதா கோபத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு “வாட் யூ மீன்!” என்றாள்.

“நான் என்ன ஃபீல் செய்கிறேனோ அதைத் தான் சொன்னேன். நீ விதார்த்திற்கு பதிலாக என்னை லவ் செய்திருக்கலாம்.” என்றான்.

ஷம்ருதா “ஆர் யூ மேட்! நோ யூ ஆர் டெஃப்னல்டி எ‌ மேட்! உன்கிட்ட வந்து பேசினது என் தப்பு! நீ தனியா புலம்பிட்டே போ! நான் என் வழியை ஐ மீன் என் லைஃப்பை பார்க்கிறேன். நான் இந்த வெகேஷனுக்கு வரலை. உன்னை வெறுப்பேத்த தான் வருவதா சொன்னேன். குட்பை!” என்று சின்னதாக ஒரு சல்யூட் வைத்துவிட்டு அகல முயன்றாள்.

யஷ்வந்த் “உன்னை வரவழைச்சுட்டா!” என்றுக் கேட்டான்.

அதற்கு வாயை ஒரு பக்கமாக இழுத்து நக்கலாக சிரித்தவாறு அவனைப் பார்த்த ஷம்ருதா “என் டிஷிசன்.. என் கையில தான் இருக்கும். காட் இட்!” என்றுவிட்டு திரும்பியும் கூடப் பார்க்காமல் செல்ல முயன்றாள்.

அப்பொழுது விதார்த் “ஹெ‌! ஹெ! என்னாச்சு!” என்றவாறு ஷம்ருதாவிடம் வந்தான்.

சற்று தொலைவில் அவர்களைப் பார்த்தவாறு வந்த விதார்த்திற்கு.. இருவரும்.. பேசியது கேட்கவில்லை என்றாலும்.. குறிப்பாக ஷம்ருதா யஷ்வந்திடம் ஏதோ விவாதம் செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். எனவே என்னவாகிற்று என்று விபரம் கேட்டான்.

ஷம்ருதா “உன் பிரெண்ட் லிமிட்டை க்ராஸ் செய்து பேசறேன். எப்படி இவனை பிரெண்ட்டா வச்சுகிட்ட! மை காட்!” என்றாள்.

விதார்த் மீண்டும் புரியாது “என்னாச்சு?” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.

ஷம்ருதா கோபத்துடன் கூறப் போகையில் குறுக்கிட்ட யஷ்வந்த் “விதார்த்! செமையா மாட்டிக்கிட்டே! வாழ்த்துக்கள்” என்றுச் சிரித்தான்.

ஷம்ருதா குழப்பமும் கோபமுமாக பார்க்கையில் யஷ்வந்த் தொடர்ந்து “சின்னதா சீண்டி விளையாடியதிற்கே எண்ணெய்ல போட்ட கடுகு மாதிரி வெடிக்கிறாங்க..” என்று மீண்டும் சிரித்தான்.

தற்பொழுது ஷம்ருதா “வாட்!” என்றுவிட்டு “நோ விதார்த்! டொன்ட் ட்ரஸ்ட் ஹிம்! யு ஆர் மைன், விதார்த்திற்கு பதிலாக என்னை லவ் செய்திருக்கணும் என்றுச் சொன்னான். அது பொய் இல்லை!” என்றாள்.

விதார்த் குழப்பத்துடன் யஷ்வந்தை பார்க்கவும், சட்டென்று.. விதார்த்தின் கழுத்தை தனது கரத்தால் வளைத்து தன் பக்கம் குனிய வைத்து யஷ்வந்த் “மற்றவங்களுக்கு முதலிலேயே விசயத்தை சொல்லியிருக்க.. என்கிட்ட இப்போ தான் இந்த நீயூஸ் சொல்றீயா! ஏன் முதலிலேயே சொல்லுலை!” என்று இருக்கவும், “ஸாரிடா! ஸாரிடா! எனக்கு சங்கடமா இருந்துச்சு!” என்று யஷ்வந்தின் கை வளையத்துக்குள் இருந்து தனது தலையை விடுவிக்க போராடியபடி மன்னிப்பு கேட்டான்.

அவனுக்கு விடுதலை அளித்த யஷ்வந்த் “என்னடா சங்கடம் வேண்டி கிடக்கு! என்னைப் பார்த்த உங்களைப் பார்த்து பொறாமைப்படர ஆள்‌ மாதிரி இருக்கா.. இல்லை உன் லவ்வரை நான் ரூட் போட்டு வளைச்சு போடுகிற ஆள் மாதிரி இருக்கா! அதுதான் அவ கிட்ட அப்படி விளையாடினேன். பாவம் செம டென்ஷன் ஆகிட்டா..” என்றுச் சிரித்தான்.

தற்பொழுது ஷம்ருதாவிற்கு விசயம் புரிய பட “வாட் விளையாடினீங்களா! எதோ உங்கள் நல்ல காலம்.. நான் நல்ல மூடில் இருந்தேன். வேற மாதிரி மூடில் இருந்திருந்த‌‌.. பளார்னு ஒண்ணு விட்டிருப்பேன்.” என்றான்.

யஷ்வந்த் புருவத்தை உயர்த்தி பார்க்க.. விதார்த் அவசரமாக அவளுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டான்.

“ஸாரி யஷ்வந்த்! அவளும் விளையாட்டாய் தான் சொல்றா..” என்றான்.

ஷம்ருதா “இல்லை விதார்த் நான் உண்மையை தான் சொல்றேன்.” என்றாள்.

விதார்த் “ப்ச் பேசாம வா ஷம்ரு!” என்று‌ அடிக்குரலில் அவளிடம் கெஞ்சியவன், “நாளைக்கு பார்க்கலாம் யஷ்வந்த்!” என்று தலையை ஆட்டி விடைப்பெற்றுக் கொண்டு.. கிட்டத்தட்ட ஷம்ருதாவை இழுத்துக் கொண்டு சென்றான்.

அவள் செல்வதையே முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்த யஷ்வந்தின் முகத்தில் முறுவல் மறைந்து கடினம் தோன்றியது.

காரில் ஏறி அமர்ந்தும் ஷம்ருதா “ஏ எதுக்கு என்னை இழுத்துட்டு வந்தே.. இதெல்லாம் எனக்கு பிடிக்காது.” என்றாள்.

விதார்த் “ப்ச்! அவனைப் பற்றி தெரியாம பேசிட்டு இருக்கியேனு தான் இழுத்துட்டு வந்தேன்.” என்றான்.

“என்ன விசயம்! எல்லாரும் ஏன் அவனை அப்படி தாங்கறீங்க?” என்றுக் கேட்டாள்.

விதார்த் யஷ்வந்தின் காதலை பற்றியும்.. ஆறு மாதத்திற்கு முன்.. நடந்த விபத்தில் தனது காதலியை இழந்ததைப் பற்றியும் கூறினான்.

“அதுக்கு பிறகு.. ரொம்ப சைலண்ட் ஆகிட்டான். எதிலுமே பிடிப்பே இல்லாம இருந்தான். இன்னைக்கு தான் பழைய மாதிரி கொஞ்சம் கலகலப்பாக பேசினான்.”

“ஸாரி! இப்போ புரியுது. முதல்ல ஒரு மாதிரி ஏன் சைலன்ட்டா இருந்தார். நீங்களும்‌‌.. அதைக் கண்டுக்காத மாதிரி உட்கார்ந்திருந்தீங்க! நான் திமிர்னு நினைச்சுட்டேன். எல்லாரும்.. உங்களோட காதல் விசயம் அவருக்கு சங்கடம் வரக் கூடாதுனு மறைச்சு கடுப்பை கிளப்பியிருக்கீங்க..” என்றாள்.

விதார்த் “அப்படித்தான் போல..” என்று என்று அசட்டுச்சிரிப்பு சிரித்தான்.

உடனே ஷம்ருதா “அதுக்கு நான்தான் கிடைச்சேனா.. அவருக்கு உங்க மேலே தானே கடுப்பு.. உங்களை பளார்னு ரெண்டு அறை கூட விட்டுருக்களாமே.. எதுக்கு என்னை கலாய்த்தார்!” என்கவும், விதார்த் சிரித்தவாறு “யஷ்வந்த் சரியாக தான் சொல்லியிருக்கான். சரியான ஆன்கரி பேர்ட் கிட்ட மாட்டிட்டேன் போல..” என்றான்.

பின் அவனது முகத்தில் சிரிப்பு மறைந்தது.

“ஷம்ரு! உனக்கு சில விசயங்கள் எல்லாம் பிடிக்காதுனு சொன்னே தானே! எனக்கும் சில விசயங்கள் பிடிக்காது. எனக்கு மனைவியா வரப் போகிறவ.. சாஃப்ட் டைப்பா இருக்கணும் என்று எதிர்பார்க்கிறேன். இப்படி ஆட்டிட்யூடு காட்ட கூடாது.” என்று உணர்ச்சிகளற்ற குரலில் கூறினான்.

அவனுக்கு பதில் வாயை திறந்த பொழுது.. அவளது செல்பேசிக்கு அழைப்பு வரவும், அதை ஏற்று பேசினாள்.

அதனால் அங்கு அவர்களிடையே முதல் விவாதம் தடைப்பட்டது.

விதார்த் அவன் கூறியதும்.. ஷம்ருதா அமைதியாகி விட்டதாக நினைத்தான்.

வீட்டிற்கு சென்ற யஷ்வந்த்.. ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தந்தையும் தாயையும் கவனியாது நேராக தனது அறைக்கு சென்றான். இழுத்து கதவை சாத்தியவன், அருகில் கைக்கு அகப்பட்ட பூச்சாடியை எடுத்து ஓங்கி தரையில் அடித்தான். அவனுக்கு அவனை நினைத்தே கோபமாக இருந்தது‌.

அவனது தோழனை திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணிடம் பேசும் முறை அல்ல.. என்று அவனுக்கு தெரியும். ஆனாலும்.. அவனால் தன்னைக் கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை.

விதார்த் வந்ததும்.. தான் பேசியதிற்கு வேறு கூறி சமாளித்தவன், மன்னிப்பு கேட்கலாம் என்று நினைக்கையில்.. விதார்த் உரிமையுடன் அவளது கரத்தை பற்றி இழுத்து சென்றதை கண்டு மீண்டும்.. இதயம் கடினமுற்றது.

ஏனோ அவனுக்கு சொந்தமானவளை எப்படி அவன் உரிமையுடன் கரம் பற்றி இழுத்து செல்லலாம் என்ற ஆத்திரம் தான் தோன்றியது. அது தவறு என்றும் புரிந்தது.

இவை அவனது மனதை பொருத்தவரை.. அவனது நிலை! ஆனால் நிதர்சனமும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது‌.

ஷம்ருதா அவனது காதலி அல்ல! விதார்த்திற்கு மணம் முடிக்க பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட பெண்! அன்று மருத்துவமனையில் பார்த்த பின் இன்று தான் அவளைக் காணுகிறான். அவளுக்கும் அவனுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை!

ஆனால்?!

ஆம் ஆனால் தான்.. அவளை சந்திக்க நினைத்திருந்தவன், அவளைச் சந்தித்த பின்.. இந்த சூழ்நிலை தெரிந்திருந்தால் அவளுடன் எந்த தொடர்பும் வேண்டாம் என்பது அவனது முடிவாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விதியின் விளையாட்டை வெறுத்தான்.

அப்பொழுது அவனது செல்பேசி அழைக்கவும், எடுத்து பார்த்தான்.. அவனது தந்தை அழைத்திருந்தார்.

“சொல்லுங்கப்பா!”

“என்னாச்சு யஷ்வந்த்! எத்தனை நாட்கள் இப்படி இருக்க போறே! நீ ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லைடா!”

“ஐயம் ஒகேப்பா! கொஞ்சம் அப்செட் ஆச்சு! பட் நான் சரியாகிருவேன். நீங்க வெர்ரி பண்ணிக்காதீங்க! இன்னும் டென் மினிட்ஸில் வரேன்.” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

பின் பெருமூச்சுடன் குளியலறைக்குள் புகுந்தான், அங்கு இருந்த சின்கில் இரு கரங்களையும் ஊன்றி.. எதிரே இருந்த கண்ணாடியில் தனது பிம்பத்தை வெறித்து பார்த்தான்.

அன்று நடந்தவை அப்படியே மனதிற்குள் படமாக ஓடியது.

அபர்ணா கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதவாறு நின்றிருந்தாள்.

“அபர்ணா ப்ளீஸ் அழாதே! ஏன்.. அபர்ணா என் காதலை ஏத்துக்கிறதில் உனக்கு என்ன தடை?” என்றுக் கேட்டான்.

“ப்ளீஸ் என்னை விட்டுருங்க! எனக்கு இந்த காதல் எல்லாம் வேண்டாம். என் அக்கா.. காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப் போனதே போதும்.‌ என் பெரெண்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்க! உங்களுக்கு ஒகே சொல்லி.. என் பெரெண்ட்ஸிற்கு கஷ்டத்தை நான் கொடுக்க மாட்டேன். நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் முடியாது.” என்று விசும்பல்களிடையே கூறினாள்.

யஷ்வந்த் “ஓ.. மை காட்! இதுதான் விசயமா! இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே! நான் டைரக்ட்டா உன் பெரெண்ட்ஸ் கிட்டவே போயிருப்பேன். என் பெரெண்ட்ஸை கூட்டிட்டு நாளைக்கே உன் வீட்டுக்கு வரேன். உன் பெரெண்ட்ஸ் ஒகே சொன்னா.. உனக்கு ஒகே தானே! அதை மட்டும் சொல்லு!”

மெதுவாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் ஆச்சரியம் மிகுந்து இருந்தது.

அதைப் பார்த்து சிரித்த யஷ்வந்த் “ஏ.. என்னைப் பற்றி என்ன நினைத்தே.. காதல் என்கிற பெயரில் பழகி.. விட்டுட்டு போகிற ஆளுனு நினைச்சுட்டியா!”

அவளது விழிகளில் தெரிந்த சிறு குன்றலே.. அப்படித்தான் நினைத்திருக்கிறாள்.. என்பதை பறைச்சாற்றியது.

அதைப் பார்த்து அவனுக்கு கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது.

“இப்போதாவது நம்பறீயா?”

அவள் தலைகுனிந்து மௌனம் காத்தாள்.

மெல்ல ஒரு எட்டு அவளை நோக்கி எடுத்து வைக்கவும், அவள் அவசரமாக நான்கு எட்டுக்கள் பின்னே நகர்ந்தாள்.

“ஒகே ஒகே.. ஈஸி ஈஸி! பக்கத்துல வரலை. ஆனா என் மேலே நம்பிக்கை இருக்கில்ல!”

அதற்கும் அமைதி காத்தாள்.

சிறு பெருமூச்சை இழுத்து விட்டு யஷ்வந்த் “சோ உன்னோட சாவி என் பெரெண்ட்ஸ் கிட்ட தான் இருக்கு! ஆல்ரைட் அவங்க கிட்டவே வாங்கிக்கிறேன்.”

குனிந்திருந்தவளின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.

யஷ்வந்த் “என் பிரெண்ட்ஸ் கிட்ட இன்னைக்கு தான் என் லவ்வை பற்றிச் சொன்னேன். அவங்க உன்னைப் பார்க்கணும் என்றுச் சொன்னாங்க! போய் பார்த்துட்டு வந்தரலாமா!” என்றுக் கேட்டான்.

அவள் மிரட்சியுடன் நிமிரவும்.. யஷ்வந்த் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

அப்பொழுது அவளது குரல் கேட்டது.

“வரேன்! உங்க மேலே நம்பிக்கை இருக்கு!”

தனது நண்பர்களிடம் தனது காதலியை அறிமுகப்படுத்த குதுகலத்துடன் சென்ற போது தான் அந்த அந்த கோர விபத்து நடந்தது. அபர்ணாவை அவன் இழந்தான்.

அவளுடன் வாழும் வாழ்வை பற்றி அவன் கட்டிய கற்பனை கோட்டை தவிடு பொடியாகியது. அவன் நினைத்த வாழ்வு வாழ முடியவில்லை.

வேகமாக நீரை அள்ளி முகத்தில் அடித்து.. அந்த நினைவுகளை கலைய முயன்றான்.

நிமிர்ந்து கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தவன், “அவள் யாரோ நீ யாரோ.. அவள் அபர்ணா ஆக முடியாது என்று உனக்கு நன்றாக தெரியும். ஜஸ்ட் லீவ் இட் யஷ்வந்த்!” என்றான்.

பின் தாங்கியில் மாட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தவன், மீண்டும் தனது முகத்தை பார்த்து “அப்பவும் உன்னால் கன்ட்ரோல் செய்ய முடியலைன்னா.. ஜஸ்ட் டு இட்!” என்றுவிட்டு சிரித்தான்.

நான்கு நாட்கள் கழித்து கொல்லம் கடற்கரையில் யஷ்வந்திற்கு சொந்தமான இரு அடுக்குகள் கொண்ட சிறு சொகுசு கப்பல் அவர்களுக்காக காத்திருந்தது.

நண்பர்களிடம் கூறியபடி.. அன்றே அரசிடம் அனுமதிக்காக விண்ணப்பித்து.. அவர்கள் வந்து.. சோதனை செய்து சரிப்பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தார்கள்.

குறிப்பிட்ட நாளில் நண்பர்கள் சிறு துறைமுகத்தில் கூடியிருந்தார்கள். அங்கு நான்கைந்து சொகுசு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

ரஞ்சித் தனது மனைவியுடனும்.. ஸ்ரீராம் மற்றும் விமல் தங்களது காதலிகளுடனும் வந்திருந்தார்கள். இன்னும் விதார்த்தும் ஷம்ருதாவும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

விமல் “அனேகமாக விதார்த் தனியாக தான் வருவான்னு நினைக்கிறேன்.”

ரஞ்சித் “எஸ் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.” என்றான்.

ப்ரீத்தி “ஏன்.. என்னாச்சு! ஷம்ருதா வீட்டுல பர்மிஷன் வரலையா?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஸ்ரீராம் “ப்ரீத்தி போன தரம் நாங்க மீட் செய்த போது.. நீங்க வந்திருந்தா தெரிந்திருக்கும்.” என்றான்.

ப்ரீத்தி “ஏன் அப்படி என்ன நடந்தது?” என்றுக் கேட்டாள்.

விமல் “விதார்த்துக்கும் ஷம்ருதாவிற்கும் பயங்கர சண்டை! ஷம்ருதா கோவிச்சுட்டு எழுந்து போயிட்டாங்க!” என்றான்.

ப்ரீத்தி “அச்சோ! அப்படி என்ன சண்டை? நீங்க சமாதானப்படுத்தி இருக்க வேண்டியது தானே!” என்றாள்.

ரஞ்சித் “என்ன விசயமினு தெரியலை. நேத்து வரும் போதே.. ஒருத்தர் ஒருத்தர் முகத்தை திருப்பிட்டு தான் வந்தாங்க! எதோ பேசிட்டு இருக்கும் போது.. விதார்த் ஆரம்பித்தான். உனக்கு பொறுமை என்பதே கிடையாதா.. அவன் தான் பேசிட்டு இருக்கானே.. நடுவுல எதுக்கு பேசறேன்னு.. திட்டிட்டான். உடனே ஷம்ருதா நான் நடுவுல பேசறேனோ.. கடைசில பேசறேனோ.. அது என்னோட பழக்கம் என்னோட உரிமை! அதை அப்படி செய்.. இப்படி செய்.. மாத்திக்கோ என்று நீ சொல்லாதே! என்றாள். அப்பறமென்ன விதார்த்திற்கு கோபம் வந்துருச்சு. அவளோட கேரக்டரை தப்புன்னு சொல்லி.. மறுபடியும் திட்டினான். அவ விசுக்குனு எழுந்து திரும்பியும் கூடப் பார்க்காம போயிட்டா! பாவம் விதார்த்தோட முகத்தை பார்க்க முடியலை. இந்த இரண்டு நாள்ல என்னாச்சுனு விசாரிக்க கூட கஷ்டமா இருந்துச்சு!” என்றான்.

அப்பொழுது ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதில் இருந்து விதார்த் இறங்கினான். பரிதாபமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்த பக்கம் இருந்த கதவை திறந்து கொண்டு ஷம்ருதா இறங்கினாள்.

நண்பர்கள் அவசரமாக தங்களது பரிதாபப் பார்வையை மாற்றிக் கொண்டார்கள். அனைவரையும் பார்த்து ப்ரீத்தி முறைக்க.. அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள்.

ப்ரீத்தி “லவ்வர்ஸிற்கு நடுவில் வரும் சண்டையும் புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி தான் என்றுத் தெரியாதா!” என்று விமலை பார்த்து சிறு கோபத்துடன் திட்டினாள்.

பின் அனைவரும் அவர்களை நோக்கி சென்றார்கள். விதார்த்திடம் மெல்ல கண்ணடித்து ஜாடை காட்டவும், அவன் மெல்லிய குரலில் “இப்போதைக்கு சமாதானம் ஆகியிருக்கோம்.” என்று தலையை சொறிந்தவாறு கூறினான்.

உடனே ரஞ்சித் “இனி இதைப் பழக்கப்படுத்திக்கோடா.. இந்த மாதிரி சண்டை இனி அடிக்கடி வரும்.. நீதான் போய் சமாதானம் செய்யணும்.” என்றுத் தன் மனைவி சாருமதியை பார்த்து சிரித்தான்.

அதற்கு விதார்த் “நான் எதுக்கு சமாதானம் செய்யணும். அவளோட அப்பா தான் வந்து பேசினார். இப்படித்தான் வெடுக்கென்று பேசி விடுவா.. ஆனா.. ஒருத்தர் மேலே அன்பு வச்சுட்டா‌‌.. கையில கூட தாங்குவா.. போக போக சரியாகிருன்னு சொன்னார். சரின்னு நானும் அவளை மன்னிச்சுட்டேன்.” என்றான்.

ஸ்ரீராம் மெல்ல ஷம்ருதாவை திரும்பிப் பார்த்தான். நல்லவேளை அவள் இவன் பேசியது கேட்காத தூரத்தில் நின்றுக் கொண்டு.. கன்னிகாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

விதார்த் “யஷ்வந்த் எங்கே?” என்றுக் கேட்டான்.

“அவன் கப்பலில் நமக்காக வெயிட் செய்கிறான். அங்கே கடைசி கட்ட சோதனை நடந்துட்டு இருக்கு! அதனால் ஆபிஸர்ஸ் கூட இருக்கான்.”

“கடைசி கட்ட சோதனையா?”

“ம்ம்! ஸ்மங்லிங் கரெப்ஷன் ஆபிஸர்ஸ் கிளம்ப போறதுக்கு முன்.. ஒருதரம் செக் செய்வாங்க..” என்றான்.

“ஒகே! ஒகே!”

அப்பொழுது யஷ்வந்தின் உதவியாளர் சர்வேஷ் வந்து.. அவர்களை அருகில் இருந்த சோதனைச்சாவடிக்கு அழைத்து சென்றான்.

ஒவ்வொருவராய் தனியாக அழைத்து சோதனை செய்து.‌. அப்படியே கப்பலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

முதலில் ரஞ்சித் பின் அவனது மனைவி சாருமதி, அடுத்து ஸ்ரீராம், பின் விமல், அடுத்து ஷம்ருதா, ப்ரீத்தி, விதார்த், அடுத்து ஸ்ரீராமின் காதலி கன்னிகா என்று வரிசையாக சென்றார்கள்.

ஒருவருடைய உடைமைகளை சோதித்து.. அவரையும் சோதிக்க என்று ஒருவருக்கு சோதனை முடிய கால் மணி நேரம் ஆனது. தனியாருக்கு சொந்தமான கப்பல் மற்றும் தனிப்பட்ட முறையில் அவர்கள் பயணம் செய்வதால் இத்தனை கெடுபிடிகளை விதித்தனர்.

ஒருவருக்கு கால்மணி நேரம் ஆனதால்.. அடுத்து வருபவர்களுக்காக காத்திராமல் அவர் கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வாறு சோதனை முடிந்ததும்.. தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்ற.. ஷம்ருதா.. கோபத்தில் முணுமுணுத்தவாறே சென்றாள்.

தன்னை சமாதானப்படுத்தி.. விதார்த்துடன் அனுப்பி வைத்த தனது பெற்றோர்களை திட்டியவாறு கப்பலுக்குள் செல்ல.. வைத்திருந்த தற்காலிக பாலத்தில் ஏறி.. கப்பலுக்குள் நுழைந்தாள். அங்கு இரு பணியாளர்கள் மட்டும் அவளை வரவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

“அவனை‌ மாதிரியே அவனோட பிரெண்ட்ஸையும் பிடிச்சுருக்கான். வெயிட் பண்ண வேண்டியது தானே!” என்று முணுமுணுத்தாள்.

பணியாளர்கள் இருவரும் அவளைப் பார்த்து இடுப்பு வரை குனிந்து வரவேற்றார்கள். பின் ஒருவர் அவள் தள்ளிக் கொண்டு வந்த சக்கர சூட்கேஸையும் முதுகில் போட்டிருந்த இன்னொரு பையையும் வாங்கி கொண்டான். இன்னொருவன் “ப்ளீஸ் கம் மேம்..!” என்று அவளை வழி நடத்தி சென்றான்.

முன்னே ஒருவர் பின்னே ஒருவர் என்று அவளுடன் வர.. தோளில் சிறு கை பையுடன் ஒய்யாரமாக நடந்த ஷம்ருதாவிற்கு நன்றாக தான் இருந்தது.

அவளை லிப்டிற்கு அழைத்து சென்றனர். அது கீழ் தளத்திற்கு அழைத்து சென்றது‌.

கப்பலில் பொதுவாக அறைகள் கீழே தான் இருக்கும் என்றுத் தெரிந்தாலும்.. முதன் முறையாக கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஷம்ருதாவிற்கு அடிவயிற்றில் தோன்றிய குறுகுறுப்பை அடக்க முடியவில்லை.

கீழ் தளத்தில் வந்ததும் அங்கு வரிசையாக அறைகள் இருப்பதை பார்த்தாள்.

அவரவர்கள் அறைக்கு சென்றுவிட்டார்கள்‌ போல.. அவர்கள்‌ வெளியே வருவதற்குள்.. தனது அறைக்குள் முடங்கி விட நினைத்தாள்.

அன்று விதார்த்தின் நண்பர்களின் முன் அவன் சண்டையிட்டு திட்டியது.. அவளுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது.

முன்னே சென்ற பணியாளன்.. ஒரு அறையின் கதவை திறந்துவிட்டான்.

உள்ளே நுழைந்த ஷம்ருதா ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள்.

இந்த இடத்தில் பை ஸ்டார் ஹோட்டல் அறையின் தரத்தில் அறையை எதிர்பார்க்கவில்லை.

பார்வையால் மெச்சிய படி சுற்றிலும் பார்த்தவளிடம் அவளுடன் வந்த பணியாள் “மேம்! உங்களுக்கு இந்த மிடில் ரூம் அலர்ட் செய்திருக்கிறோம். இது உங்களோட பர்ஸ்ட் ஷிப் ட்ரவல் என்கிறதாலே இந்த ரூம்! எதாவது வேண்டும் என்றால் ஃகால் செய்யுங்க! இந்த ஷிப் இன்னும் பை மினிட்ஸில் கிளம்பிரும். ஸ்டே இன் ஒன் பிளெஸ் அட்லீஸ்ட் பை மினிட்ஸ் ஃபார் யுவர் ஷெக்! ஃபீல் ப்ரீ! அன்ட் என்சாய் த ஜெர்னி மேம்!” என்றுவிட்டு சென்றார்கள்.

அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது.. கப்பல் நகருவதை உணரவும், படார் என்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு அவ்வளவு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

‘டிரெயினில் போவது போல தான் இருந்தது. இதற்கு எதற்கு இத்தனை அட்வைஸ் செய்து அனுப்பினாங்க!’ என்று அசால்ட்டாக நினைத்தாலும்.. அமைதியாக அமர்ந்தவள், அவளது அறையில் இருந்த ஜன்னலின் வழியாக கரையை விட்டு கப்பல் நகர்ந்து கொண்டிருப்பதை பார்த்தாள்.

விடியற்காலையில் விமானம் ஏறி.. அங்கிந்து கொல்லம் வந்து.. பின் துறைமுகம் வரை.‌ கார் பயணம் என்று.. பயணங்களால் சோர்வுற்றிருந்த ஷம்ருதா அப்படியே படுக்கையில் சாய்ந்து உறங்கி விட்டாள்‌.

பத்தே நிமிடத்தில் அவளது செல்பேசி ஒலிக்கவும், திடுக்கிட்டு எழுந்தவள்.. அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

விதார்த்தின் குரல் கேட்டது.

“ஷம்ரு! இட்ஸ் நாட் ஃபேர்! எல்லாரும்.. ஒண்ணா ட்ரவல் செய்ய வந்திருக்கோம். நீ மட்டும் ரூமில் இருப்பது சரியில்லை ஷம்ரு! வெளியே வா! டென் மினிட்ஸ் பேசிட்டு அப்பறம் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ! யாருக்காக எல்லாரும் இங்கே வந்தோமோ.. அந்த யஷ்வந்த் அர்ஜென்ட் வொர்க் வந்ததுனு.. போயிட்டான். பிளைட்டில் மாலத்தீவில் வந்து ஜாயின்ட் ஆகிக்கிறேன்னு சொன்னான். சோ இங்கே நாம் மட்டும் தான் இருக்கோம். வா!” என்று அழைத்தான்.

அதற்கு ஷம்ருதா “இப்படி மெதுவா.. அனுசரணையா பேசினா.. நீ சொல்ற‌ பேச்சை கேட்பேன். அதிகாரம் செய்தால் தான் எனக்கு பிடிக்காது. ஒகே கிவ் மீ டு‌ மினிட்ஸ்!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள், குளியலறைக்கு சென்று தன்னை ஃபிரஷ் செய்துவிட்டு அறையில் இருந்து செல்பேசியுடன் வெளியே வந்தாள்.

அங்கு யாருமில்லாது அமைதியாக இருக்கவும் தனது செல்பேசியை எடுத்தவள் விதார்த்தை அழைத்து “எந்த ரூமில் இருக்கீங்க?” என்றுக் கேட்டாள்.

“உனக்கு ஃபோன் போட்டதும் வெளியே வந்துட்டேனே! இப்போ எல்லாரும் வெளியே தான் இருக்கோம். நீயும் வா.. கப்பலை சுத்தி பார்த்துட்டு வரலாம். எல்லாரும் உனக்காக தான் வெயிட் செய்யறாங்க..”

“வெயிட்! வெயிட்! எல்லாரும் ரூமுக்கு வெளியே நிற்கறீங்களா! இங்கே யாரும் இல்லையே நானும் ரூமுக்கு வெளியே தான் நிற்கிறேன்.”

“வாட்!” என்று விதார்த் அதிரவும், விதார்த் விளையாடுகிறானோ.. என்று ஷம்ருதா “டொன்ட் பிளே விதார்த்! நான் ரொம்ப டையர்ட்டா இருக்கேன்.” என்று சலித்து கொண்டாள்.

விதார்த் “இதை நான் சொல்லலாம் என்று நினைச்சேன். அப்போ நீ விளையாடுலையா! ரூமுக்கு வெளியே தான் நிற்கறீயா.‌.” என்று மீண்டும் வரிசையாக இருந்த அறைகளை பார்த்தான்.

மற்றவர்கள் என்னவாயிற்று என்றுக் கேட்கவும், விதார்த் “ஷம்ருதா! இந்த கப்பலோட வேற ப்ளோரில் இருக்கும் ரூமுக்கு போயிட்டா போல! பார்த்துட்டு வரேன்.” என்று காதில் செல்பேசியுடன் நகர்ந்தான்.

அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்த ஷம்ருதா “நான் கீழ் ஃபோளோரில் இருக்கேன். நீ எங்கே இருக்கே.. நானே வரேன்.” என்றாள்.

நடந்துக் கொண்டிருந்த விதார்த் அவள் கூறியதைக் கேட்டு நின்றுவிட்டான்.

“நாங்களும் கீழே தான் இருக்கோம்.”

“வாட்! ஒருவேளை உங்க ரூம்ஸ் வேற லைன்னில் இருக்கோ! அப்போ எனக்கு மட்டும் ஏன் தனியா ரூம் போட்டுருக்கு! ஒருவேளை எனக்கு ட்ரவல் சிக்னஸ் இருக்கிறதாலா” என்று எரிச்சலுடன் கூறியவாறு அந்த பகுதியில் இருந்து வெளியே வந்தாள்.

“இருக்கலாம்!” என்று அவனும் அந்த பகுதியை விட்டு வெளியே வந்தான்.

வரிசையாக அறைகள் இருக்கும் பகுதியை தேடி‌.. அடுத்த பகுதிக்கு ஷம்ருதா சென்றாள். கப்பலை இயக்கும் இயந்திரங்கள் கொண்ட பகுதியாக இருந்தது. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு.. மீண்டும் அவளது அறையை தாண்டி கப்பலின் மறுபகுதிக்கு சென்றாள். அங்கு சமையல் பகுதி தான் இருந்தது.

குழப்பமுற்ற ஷம்ருதா அவர்களிடம் இங்கு தங்குவதற்கு வேறு அறைகள் எங்கு இருக்கிறது என்றுக் கேட்டாள்.

அதற்கு அவர்கள் இந்த கீழ்பகுதியில் மட்டும் தான் தங்குவதற்கு அறைகள் இருக்கிறது என்றும்.. இதற்கு மேல் தளத்தில் கடல் அழகை இரசிக்க லாபியும்.. அமர்ந்து சாப்பிடும் பகுதியும்.. தியேட்டர் பகுதியும் உள்ளது என்றும்.. அதற்கு மேல் டான்ஸ் பார் மற்றும் கிளப்பும்.. அதற்கு மேல் இருக்கும் திறந்தவெளி மேல் தளத்தில் சிறு நீச்சல் குளமும்.. இன்டோர் கேம் விளையாடும் இடங்களும் இருப்பதாக இந்த கப்பல்களின் பகுதிகளைப் பற்றி விவரித்தார்.

அவர்கள் கூறியதைக் கேட்டு அயர்ந்து நின்ற.. ஷம்ருதாவிற்கு சற்று நேரம் மூளை வேலை நிறுத்தம் செய்தது.

அதற்குள் அவளது கையில் இருந்த செல்பேசியில் விதார்த் கத்தினான்.

“ஷம்ருதா! நீ எங்கே இருக்கே! இங்கே வேற ரூம்ஸே இல்லை.” என்று திகைப்பு நிறைந்த குரலில் கேட்டான்.

அதிர்ந்து நின்றிருந்த ஷம்ருதா அவனுக்கு பதில் அளிக்காது. அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக மேல் தளத்திற்கு செல்லும் படியில் ஏறினாள்.

பரந்த வெளியில் இருந்து வந்த வெளிச்சம் கண்களை கூச செய்ய.. கண்களுக்கு மேலே கையை வைத்துக் கொண்டு பார்த்தாள்.

பரந்த வானமும் கடலும் நீல வண்ணத்தில் ஒன்றானது போல்.. அவளுக்கு காட்சியளித்தது. மெல்ல சுற்றிலும் பார்த்தாள். அந்த பெரிய லாபியில் அவள் மட்டும் நின்றிருந்தாள்.

விதார்த்தும் உண்மையை தான் கூறுகிறான். ஆனால் இந்த கப்பலில்.. இன்னொரு அறைகள் கொண்ட பகுதி இல்லை. அவனும் கப்பலில் தான் இருக்கிறான். ஆனால் இங்கே இல்லை. இங்கே என்ன நடக்கிறது. நான் எங்கே இருக்கிறேன். ஒருவேளை இது கனவா!

“ரொம்ப குழம்ப வேண்டாம்! அது உடம்புக்கு நல்லதில்லை.” என்ற குரலில் வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்‌.

அங்கு விதார்த்தின் நண்பன் யஷ்வந்த் நின்றிருந்தான்.

“இந்த கப்பலில் விதார்த் இல்லை. அவன் இருப்பது வேற கப்பல்! அதோ அங்கே போயிட்டு இருக்கு..” என்று‌ ஒரு திசையை சுட்டிக்காட்டினான்.

அவன் சுட்டிக்காட்டிய திசையில் திரும்பி பார்த்த ஷம்ருதா திகைத்தாள்.

ஏனெனில் சற்று தூரத்தில் புள்ளியாக ஒரு கப்பல் சென்றுக் கொண்டிருந்தது.

அதிர்ச்சியும் குழப்பமுமாக யஷ்வந்தை திரும்பிப் பார்த்தாள்.

“டொன்ட் வெர்ரி அந்த கப்பலும் மாலத்தீவிற்கு தான் போகுது. இந்த கப்பலும் மாலத்தீவிற்கு தான் போகுது. ஆனா தனித்தனியாக!”

ஷம்ருதா கேள்வியும் திகைப்புமுமாக அவனைப் பார்க்கவும்.. யஷ்வந்த் “அதுவரை நாம கொஞ்சம் பழகலாமா?” என்றுக் கேட்டான்.





 
Status
Not open for further replies.
Top