ஆழி உன் கையில் துளியாக!!
அத்தியாயம் 1
“யஷ்வந்த்!” என்று ராகவனும் கவிதாவும் அழைத்தவாறு பின்னே ஓடி வந்தார்கள்.
ஆனால் அவர்களது அழைப்பு மட்டுமில்லை.. சுற்றும் சுழலும் என்று எதுவும் கருத்தில் கொள்ளாது.. கையில் போடப்பட்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கியதால்.. வெளி வந்த இரத்தம் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருக்க.. அதைப் பற்றியும் கவலைப்படாமல் யஷ்வந்த் அந்த மருத்துவமனை வளாகத்தில் கால்கள் ஒத்துழைத்த வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.
‘நர்ஸ் ஸ்டேஷனில்’ அமர்ந்திருந்த செவிலிய பெண்.. நோயாளி ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடி வருவதைப் பார்த்து.. அவனைப் பிடிக்க ஓடி வந்தார். கூடவே அங்கு நோயாளிகளை பார்க்க வந்திருந்த மற்றவர்களும்.. திகைப்புடன் அவனைப் பார்த்தார்கள்.
தற்பொழுது தான்.. மூன்று நாட்கள் மயக்க நிலையில் இருந்து.. சுயநினைவிற்கு வந்த யஷ்வந்திற்கு.. கண்கள் சொருக.. காலில் இருந்து பூமி நழுவி விழுந்துவிடும் போன்று இருந்தது. எனவே கால்கள் தடுமாறி விழப் போனான்.
அப்பொழுது அவனை யாரோ தாங்கி பிடித்து.. அவனது உடல் கனம் தாங்காது.. அவனோடு கீழே விழுந்தது தெரிந்தது.
“ஸார் ஆர் யூ ஒகே!” என்று அவனது தோள்களை மெதுவாக உலுக்கியவாறு குரல் கேட்கவும், யஷ்வந்த்.. பசையென ஒட்டியிருந்த இமைகளை சிரமத்துடன் பிரித்து பார்த்தான்.
இளம்பெண் ஒருத்தி.. அவனோடு விழுந்து அவனை தனது மடியில் தாங்கியிருந்தாள்.
அவளைப் பார்த்த யஷ்வந்தின் கரம் ஒன்று மெல்ல உயர்ந்து.. அவளது முகத்தருகே சென்றது. அவனது உலர்ந்த உதடுகளை மெல்ல பிரித்தவன்.. “அ.. அ.. பர்ணா” என்று காற்றாய் போன குரலில் அழைத்துவிட்டு.. அவனது கரம் அவளது முகத்தை தீண்டாமலேயே சரிந்து விழுந்தது. அவனும் சுயவுணர்வு இழந்தான்.
அதற்குள் அவனுக்கு அருகில் வந்துவிட்ட செவிலியர்கள் அவனை மெல்ல தூக்கி.. கொண்டு வரப்பட்ட ஸ்டெக்ச்சரில் வைத்தனர். பின் அவனை மருத்துவப்பணியாளர்கள் தூக்கிக் கொண்டு.. அவசரப் சிகிச்சை பிரிவிற்கு.. விரைந்தார்கள். அவர்களது பின்னோடு யஷ்வந்தின் தந்தை ராகவனும் அன்னை கவிதாவும் கிட்டத்தட்ட ஓடினார்.
“ஷம்ருதா” என்று தோளைத் தொட்டு அவளது அன்னை அழைக்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“கையை கழுவிட்டு வாம்மா! அத்தையை பார்க்க போகலாம்.” என்றார்.
அதன் பின்பே தனது கரங்களைப் பார்த்தாள். சற்றுமுன் அவள் தாங்கி பிடித்தவனின் கையில் இருந்து வழிந்த இரத்தம் அவளது கரங்களிலும் அவள் அணிந்திருந்த க்ரேப் டாப்பிலும் ஆகியிருந்தது.
“மை பேவரெட் டாப்..” என்றவாறு எழவும்,
“இப்போதைக்கு கழுவி.. மஃப்லரில் மறைச்சுக்கோ! பக்கத்துல எதாவது ஷோரூம் இருந்தா.. வேற வாங்கி மாத்திக்கலாம்!” என்றார்.
உதடுகளை பிதுக்கியவாறு அங்கிருந்த செவிலியரிடம் கேட்டு.. கை கழுவும் பகுதிக்கு சென்றாள்.
அங்கு கரங்களையும் ஆடையும் சுத்தமாக கழுவிக் கொண்டிருந்த பொழுது.. இருவர் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
மருத்துவ துப்புரவு பணியாளர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இவர் கூட ஆக்ஸிடென்ட் ஆனாவங்க தான்.. இங்கே வரும் போதே.. இறந்துட்டாங்களே! அது இவருக்கு தெரியாது போல பாவம்!”
“ஆமா! அபர்ணானு அந்த பொண்ணை கூப்பிட்டாரே.. அது அந்த பொண்ணோட பேரு தான்! பாவம் இரண்டு பேரும் லவ்வர்ஸ்.. சந்தோஷமா வாழ நினைச்சுருப்பாங்க! அதுக்குள்ள இப்படி ஆகியிருக்க கூடாது.”
“அந்த பொண்ணு.. அந்த அபர்ணா மாதிரி தான் கொஞ்சம் பார்க்கிறதுக்கு இருந்தாங்க! அதுதான் அப்படி கூப்பிட்டுருக்காங்க!”
“அப்படியா! அன்னைக்கு நான் சரியா பார்க்கலை.”
“ரூம் நம்பர் த்ரீ ஃபை ஜீரோல பேசன்ட் வாமிட் செய்திருக்காங்க.. போய் கிளின் பண்ணிருங்க அக்கா!” என்கவும்.. இருவரும் கலைந்து சென்றார்கள்.
ஷம்ருதா கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை இடப்பக்கமும் வலப்பக்கமும் திருப்பிப் பார்த்தவள், பின் தோள்களை குலுக்கி விட்டு அகன்றாள்.
அதன் பின் அவள் அந்த சம்பவத்தை மறந்தே விட்டாள்.
ஆனால் ஒரு ஜீவன் அந்த சம்பவத்தை மறக்க முடியாமல் தவிக்க போவதை அவள் அறிந்திருக்கவில்லை.
யஷ்வந்த்!
தென்னிந்தியாவில் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரான ராகவனின் ஒரே மகன்!
செல்வங்களில் புரண்டு வளர்ந்தவனுக்கு.. அந்த திமிரும் அதிகாரமும் சிறிதும் அவனிடம் இல்லை! தனது செல்வ நிலை குறிப்பிட்டு அவன் எங்கேயும் பேசியதும் இல்லை. நடந்து கொண்டதும் இல்லை. வெளிநாட்டில் படிக்க வைக்க வாய்ப்பும்.. செல்வமும் இருந்தும்.. தனது ஒரே பிள்ளையை பிரிந்திருக்க மனமில்லாது.. சென்னையிலேயே பள்ளிப்படிப்பையும்.. புகழ்பெற்ற வேலூர் ஐடி கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடிக்க வைத்தார். நண்பர்கள் பல கொண்ட யஷ்வந்த் இதுவரை.. தனக்கு இவை வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. அவனது பெற்றோரும் அந்த நிலை வரை கொண்டு வந்தது இல்லை. அவனுக்கு எளிமையும் கற்றுக் கொடுத்தனர். பணத்தின் அருமையும் கற்றுக் கொடுத்தனர். தொழிலையும் கற்றுக் கொடுத்தனர். யஷ்வந்தும்.. திறமையும் ஒழுக்கமும் கொண்டவனாய் வளர்ந்து முப்பதாம் அகவையில் நிற்கிறான்.
அவனிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம். நினைத்தை சாதிக்கும் இரகம் அவன்! ஒன்றை நினைத்து விட்டால்.. அவன் விரும்பியது நடக்க எதை வேண்டுமென்றாலும் செய்வான். அதற்காக அவனது குணங்கள் கூட மாறும். நினைத்தது நடக்காத வரை.. அவனை நெருங்க முடியாது. இதுவரை அந்த சூழ்நிலை வரை.. அவனது வாழ்வு சென்றது இல்லை. அவனது பெற்றோர்கள் விட்டதும் இல்லை.
எனவே மற்றபடி எவ்வித பிரச்சினைகளும் இல்லாது வாழ்த்துக் கொண்டிருந்தவன் அபர்ணாவை கைக்கடிகாரம் வாங்கும் கடையில் தான் முதலில் பார்த்தான்.
அவளது அழகில் ஈர்க்கப்பட்ட அவன்! அவள் பேசும் அழகில் மயங்கி.. வேண்டுமென்றே பேரம் பேசினான். அவன் பெரும் பணக்காரன் என்று அறியாத அந்த பேதையும்.. அவனுடன் மல்லுக்கட்டினாள்.
அந்த கடையின் முதலாளி வந்து அவன் யார் என்று கூறவும் அபர்ணா தர்மசங்கடத்துடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.
புன்னகைத்தவாறு.. அங்கிருந்து அகன்ற.. யஷ்வந்திற்கு.. அவளை நினைவுகளில் இருந்து அகல முடியவில்லை. அவள் மீது காதல் கொண்டதை கண்டு கொண்டான். அடுத்த நாளே.. அவள் முன் சென்று தனது காதலை வெளிப்படுத்தினான். ஆனால் அவனது பொருளாதார நிலை கண்டு.. அபர்ணா அஞ்சி மறுத்துவிடவும், தொடர்ந்து தினமும் அவளை சந்தித்து.. தனது காதலை உணர்த்திக் கொண்டே இருந்தான்.
முடிவில் அவனது காதலை அவன் அடையும் வேளையில்.. அந்த விபத்து நிகழ்ந்தது. யஷ்வந்த் தான் காரை ஓட்டிக் கொண்டு சென்றான். ஆனால் எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று வந்து இடித்ததில்.. அபர்ணாவின் உயிர் அங்கேயே பிரிந்து விட.. தற்காப்பு பலூனின் மூலம் யஷ்வந்த் உயிர் தப்பினான்.
ஆனால் சுயநிலை வந்த பின்.. அவன் தெரிந்துக் கொண்ட விசயம்.. அவனின் உயிரை அறுத்தது. அபர்ணாவுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவன் கண்ட கற்பனைகள் தவிடு பொடி ஆனதில்.. வெறும் கூடாய் சுற்றினான். அபர்ணாவின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டு.. சித்திரவதை செய்யப்பட்ட போதும்.. அவனுக்கு திருப்தியை தரவில்லை.
ஆளே மாறிப் போனான். கலகலப்பாக பேசும் அவன்.. அமைதியாக வலம் வந்தான். நண்பர்களுடன் அரட்டையில் அமளிப்படுத்தும் அவன் எதையோ இழந்துவிட்ட தோற்றத்தில் இருந்தான்.
அவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள.. அவனது நண்பர்களும் பெற்றோர்களும் செய்த முயற்சி வீணாய் போனது.
அப்படியொரு இரவில் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவனுக்கு.. அவனையும் மீறி.. விபத்து நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். பின் அவனுக்கு அபர்ணா இறந்துவிட்ட செய்தியை அவனது பெற்றோர் கூறியதை நினைத்து பார்த்தான். அவனும் அது கேட்டு.. என்ன செய்கிறோம் என்ற நினைவில்லாது. கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கி எறிந்துவிட்டு ஓடியதை நினைத்துப் பார்த்தான்.
அந்த நினைவுகளின் கோர்வையில் அபர்ணாவின் முகம் வந்தது.
உடனே விருக்கென்று எழுந்து அமர்ந்தான்.
இல்லை! அவள் அபர்ணா இல்லை!
ஆனால்??
அதற்கு பின் அவனால் உறக்கம் கொள்ளவில்லை. எப்பொழுது விடியும் என்று நேரத்தை ஓட்டியவன், விடிந்ததும்.. ஆறு மாதங்களுக்கு முன் அவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்தான்.
அவனை அங்கு நன்கு அடையாளம் காணப்பட்டு.. அவனுக்குரிய மரியாதையும் தரப்பட்டது.
யஷ்வந்த் அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு முன்.. அவனுக்கு விபத்து நடந்த மூன்று நாட்களுக்கு பின்.. அவன் அறையை விட்டு வெளியே ஓடி வந்த பொழுது.. பதிவான சிசிடிவி காட்சியை பார்க்க வேண்டும் என்றுக் கேட்டான்.
அவர்கள் விழித்தாலும்.. மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளை தனி நபருக்கு தருவதில்லை என்றனர்.
அங்கு அவன் தன் வாழ்வில் முதன்முறையாக தனது செல்வநிலையையும்.. அதிகாரத்தையும் காட்டினான்.
அதற்கு அடிப்பணிந்து அவர்கள்.. ஆறு மாதங்களுக்கு முன்.. எடுத்த பதிவுகளை தேடி அவனுக்கு காட்டினர்.
அவனுக்கு தேதி நன்றாக நினைவிருந்ததால்.. தேடி எடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை.
அந்த காட்சி ஒளிப்பரப்பானது. யஷ்வந்த் படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது அறையில் இருந்து ஓடி வந்தவன்.. சிறிது தூரம் ஓடியதுமே கால்கள் தடுமாற சரிய போனான். அப்பொழுது சரிய போனவனை இரு கரங்கள் தாங்க முயன்றது. ஆனால் அவனை தாங்க முடியாது.. அவனோடு சரிந்து விழுந்தாள். உடனே சுதாரித்து எழுந்தவள், விழுந்தவனை தனது மடியில் தாங்கி அமர்ந்த பொழுது.. அவளது முகம் நன்றாக தெரிந்தது.
ஆம்.. அபர்ணாவின் ஒத்த சாயல் கொண்டிருந்தாள்.
அபர்ணாவின் வெள்ளை நிறம் இல்லை. அவளைப் போல் மெலிவும் இல்லை. அபர்ணாவிற்கு இருக்கும் நீண்ட கூந்தலும் இல்லை. அவளுக்கு இருப்பது போல்.. நேரான கூர்மூக்கு இல்லை. சுடிதாரும் அணிந்திருக்கவில்லை.
ஆனால் அந்த முகவெட்டு, கண்கள், இதழ்கள் அனைத்தும் அபர்ணாவை ஒத்திருந்தது. மேலும் எதோ ஒன்று அவளை மெருகூட்டியிருந்தது.
அந்த பதிவில் அவளை தொட முயன்றவன், மூர்ச்சையாகி சரிந்துவிட்டதை பார்த்தவன், பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான்.
பின் தொடர்ந்து காட்சிகளை பார்த்தான். அந்த பெண்.. எழுந்து சென்று கை கழுவிவிட்டு வந்து ஒரு பெண்மணியுடன் இணைந்து கொண்டாள். பின் இருவரும் ஒரு நோயாளியின் அறைக்குள் சென்றார்கள்.
உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்த யஷ்வந்த் அடுத்து கேட்ட கேள்வியில் அலுவலர்கள் ஆடிப் போனார்கள்.
இருவரும் நுழைந்த அறையில் இருந்த நோயாளியின் முகவரியை கேட்டான்.
நோயாளியின் விபரங்களை கூறுவது.. சட்டத்திற்கு புறம்பானது.. என்று அவர்கள் மறுத்த பொழுது.. அங்கு பணம் விளையாடியது. அவன் கேட்ட விபரங்கள் கையில் கிடைத்தது.
பின் துப்பறியும் நிறுவனத்தை அணுகி.. அந்த நோயாளியின் முகவரியை கொடுத்தவன், அபர்ணாவின் ஒத்த சாயல் கொண்ட பெண்ணின் காணொளியையும் காட்டினான்.
“இந்த அட்ரஸில் இருப்பவரின் பெண்ணாக இருக்கலாம் அல்லது இவரது உறவினர்களில் யாரோ ஒருவராக இந்த பெண் இருக்கலாம்! யார் என்று கண்டுப்பிடித்து அவளைப் பற்றிய விபரங்கள் வேண்டும்.” என்றுக் கூறினான்.
அடுத்த நான்கு நாட்களில் அவன் கேட்ட விபரங்களுடன் அவளது படங்களும் அவனது கம்ப்யூட்டருக்கு வந்தன.
மெல்ல ஆட்காட்டி விரலை உயர்த்தி அவளது முகவடிவை அளந்தான். பின் விபரங்களை பார்த்தான்.
பெயர் : ஷம்ருதா
வயது : இருபத்திநான்கு
படிப்பு : விஷுவல் கம்யூனிகேஷன்
ஸ்ட்டெட்டஸ் : சின்கிள்
அவளது முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.
புன்முறுவலுடன் பார்த்தவன், உடனே அங்கு செல்ல மனம் பரபரக்க.. கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். நேரம் இரவு ஒன்பதை காட்டவும், நாளை செல்ல முடிவெடுத்தான்.
பின்பே அவனுக்கு அன்று.. நண்பர்களுடன் கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பது நினைவிற்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு.. கூட அவனது நண்பன் விமல் அழைத்து நினைவுப்படுத்தினான். ஆனால் இந்த ஒரு மணி நேரம்.. அவன் வேறு உலகத்திற்குள் இருந்திருக்கிறான். புன்சிரிப்புடன் கணிணியை மூடி வைத்துவிட்டு.. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த.. ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றான்.
அங்கு பதிவு செய்து வைத்திருந்த மேசையில் அவனது நண்பர்கள் விமல், விதார்த், ரஞ்சித் மற்றும் ஸ்ரீராம் அமர்ந்திருந்தார்கள். கூடவே விமல் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பெண் ப்ரீத்தி! ஸ்ரீராமின் காதலி கன்னிகா, ரஞ்சித்தின் மனைவி சாருமதியும் அமர்ந்திருந்தார்கள்.
இந்த நான்கு பேரும்.. பள்ளிப் படிப்பில் இருந்து ஒன்றாக படித்த உயிர் தோழர்கள்!
அன்று.. விபத்து நடந்த பொழுது.. தனது காதலியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தான்.. வந்துக் கொண்டிருந்தான். அதற்குள் விபத்து நிகழ்ந்து விட.. பதட்டத்துடன் ஓடி வந்தார்கள்.
நண்பன் அறிமுகம் செய்து வைக்காத அவனின் காதலியை விட.. அவர்களுக்கு.. யஷ்வந்தின் நலம் தான் முக்கியமாக பட.. முடிந்தளவு அவனை பழையபடி துறுதுறுப்பாக வைத்துக் கொள்ள தங்களால் ஆனா முயற்சிகள் செய்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
இதோ இப்பொழுது கூட.. பத்து நாட்கள் கழித்து வரும் யஷ்வந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றி திட்டம் போட தான் கூடியிருக்கிறார்கள்.
யஷ்வந்த் வருவதை பார்த்தவர்கள் உற்சாகத்துடன் கையை ஆட்டி வரவேற்றார்கள். புன்னகையுடன் வந்த யஷ்வந்தை பார்த்தவர்களின் கண்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் விரிந்தது.
“ஹாய் பிரெண்ட்ஸ்..” என்று வந்த யஷ்வந்த் அவர்களின் முகத்தைப் பார்த்து சிரித்தான்.
விமல் “என்னாச்சு! உன் முகத்துல பல்பு எரியுது.” என்று வழக்கம் போல ஓட்டினான்.
அதற்கு யஷ்வந்த் “ரியலி!” என்று அதற்கும் முறுவலித்தான்.
விதார்த் “நாங்க என்ன விசயம் என்றுக் கேட்காமலேயே நீயே சொல்லுவேனு நினைக்கிறேன்.” என்கவும், யஷ்வந்தின் முகம் சிறுத்தது.
பின் “சொல்வதற்கு விசயம் இருக்கணும் விதார்த்! எனக்கே இன்னும் அந்த மேட்டர்.. நிச்சயமா என்று தெரியலை. அப்படி அந்த மேட்டரில் கிளியர் ஆகிற போது.. உங்களுக்கு சொல்கிறேன்.” என்றான்.
ரஞ்சித் தனது தலையில் கையை வைத்து.. “நீ சொல்றது எனக்கு சத்தியமா புரியலை!” என்றான்.
அதற்கு விமல் சிரித்தவாறு “உனக்கு எதாவது விசயம் புரிந்தால் தான் அதிசயம்..” என்றான்.
பின் விமல் யஷ்வந்தை பார்த்து “யஷ்வந்த்! ரியலி நீ ஒகே தானே?” என்றுக் கேட்டான்.
அதற்கு யஷ்வந்த் “ஐயம் நாட் ஒகே! ப்ரீத்தியை பார்க்கிற போதெல்லாம் கில்டியா இருக்கு.. எதுக்கு உன் மேரேஜ்ஜை நிறுத்தினே?” என்றுக் கேட்டான்.
அதற்கு விமல் “உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி.. நீ ஹஸ்பெட்டல இருக்கும் போது.. எப்படி நான் மேரேஜ் செய்துக் கொள்வது?” என்றுக் கேட்டான்.
ப்ரீத்தி “யஷ்வந்த்! எங்களுக்கு பிரச்சனையே இல்லை. நாங்க மேரேஜ்ஜை நிறுத்தலையே தள்ளி தானே போட்டிருக்கோம். அப்போ தான் மேரேஜ் இன்வடேஷன் கொடுக்க ஆரம்பித்திருந்தோம். அதனால் பெருசா.. எந்த நஷ்டமும் வரலை. நீங்க ப்ளீஸ் ப்ரீயா விடுங்க..” என்றான்.
அதற்கு யஷ்வந்த் “அதுமட்டுமா.. என்னைப் பார்த்தா.. நீங்க ஜோடியா சுத்துவதைப் பார்த்து பொறாமை படர மாதிரியோ.. ஃபீல் பண்ர மாதிரியோவா இருக்கு! நீ மேரேஜ்ஜை நிறுத்தி வச்சுருக்கே! அவன் என் முன்னாடி வைஃப் கிட்ட பேசரது இல்லை. அவன் லவ்வரை கண்ணுலேயே காட்டுவது இல்லை. அதனால் தான் எல்லாரையும் இன்னைக்கு கூட்டிட்டு வரச் சொன்னேன்.” என்றான்.
ஸ்ரீராம் “அப்படியில்லை டா” என்கவும், யஷ்வந்த் “அஃகோர்ஸ் அபர்ணாவை நான் இழந்திருக்க கூடாது. அவ கூட வாழர வாழ்க்கை பற்றி நிறையா கற்பனை செய்து வச்சுருந்தேன். அதெல்லாம் ஒண்ணுமே இல்லாம போனதாலே அப்செட் ஆனது உண்மை தான்! இன்னும் அதுல இருந்து என்னால் வெளியே வர முடியலை தான்! பட் எஸ்.. அதுல இருந்து வெளி வர ட்ரை செய்கிறேன் டா..” என்றவனுக்கு.. சிசிடிவியில் பார்த்த ஷம்ருதா நினைவிற்கு வந்தாள்.
பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன்.. அனைவரும் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.
யஷ்வந்த் “வா.. வாட்!” என்கவும்.. அனைவரும் “ஹெ..” என்ற கத்தலுடன் அவனை அணைத்துக் கொண்டார்கள்.
பின் வழக்கமான கலகலப்பு இல்லை என்றாலும்.. சிரிப்பு சத்தம் அங்கே கேட்டது. விரும்பிய உணவை தருவித்து சாப்பிட ஆரம்பித்தனர்.
ஸ்ரீராம் அடுத்த பேச்சை ஆரம்பித்து வைத்தான்.
“ஒகே லெட்ஸ் கம் டு திஸ் மேட்டர்! இன்னும் டென் டேஸில் வருகிற உன் பர்த்டேக்கு எங்களுக்கு செம ட்ரீட் வந்தாகணும். யஷ்வந்த்! எங்கே போகலாம். கோவா, குலுமாணலி, தாய்லாந்து, இலண்டன்..” என்று அடுக்கி கொண்டே போனான்.
அதற்கு யஷ்வந்த் “யூவர்ஸ் விஷ்!” என்றுப் புன்னகைத்தான்.
நண்பனின் பட்டும் படாமல் வந்த பதில்.. மற்றவர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும்.. வெகுநாட்களுக்கு பின்.. முகத்தில் சோக ரேகை இல்லாமல்.. இதற்கு சம்மதம் தெரிவித்ததே மகிழ்ச்சி கொண்டார்கள்.
ஸ்ரீராம் தாய்லாந்து என்றும் ரஞ்சித் குலுமணாலி என்றும்.. ஆளுக்கு ஒன்றை சொல்லி வாதிட்டு கொண்டிருந்தார்கள்.
அதில் விதார்த் அடிக்கடி கைக்கடிகாரத்தையும்.. செல்பேசியையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைக் கவனித்த யஷ்வந்த் “ஆர் யூ எக்ஸ்பெக்ட்டிங் சம்ஒன்?” என்றுக் கேட்டான்.
அதற்கு விதார்த் அசட்டு சிரிப்புடன் “ஆக்சுவலி உனக்கு சர்பரைஸ்டா! சர்பரைஸிற்கு விபரம் கேட்க கூடாது.” என்கவும், யஷ்வந்த் சத்தமாகவே சிரித்தான்.
உடனே மற்றவர்கள் “என்னது மறுபடியும் சர்பரைஸா!” என்று அதிர்ச்சி போல் கேட்டு கண்ணடித்தார்கள்.
அவர்களது கிண்டல் புரிந்த விதார்த் அலறியவனாய் “மறுபடியும் ஒரு சர்பரைஸை கொண்டு வந்தால்.. எனக்கு தர்மஅடி கன்பார்ம்! இரண்டு நாளுக்கு முன்னாடி உங்களுக்கு சொன்ன அதே சர்பரைஸை தான் இப்போ காட்ட போறேன்.” என்று அறிவித்தான்.
மற்றவர்கள் “ஹெ சூப்பர்!” என்று மேசையை தட்டி அர்ப்பரித்தார்கள்.
அப்பொழுது.. பலமாகவும் அழுத்தமாகவும் படபடவென மேசையை தட்டி.. ஆர்ப்பரிப்பை அடக்கிய யஷ்வந்த் “என்ன விசயம் என்று சொல்லுலைன்னா.. உங்களை நான் துரத்தியடிப்பது உறுதி!” என்றான்.
அப்பொழுது விதார்த்தின் செல்பேசி ஒலிக்கவும், “எஸ்! எஸ்! இங்கே தான் இருக்கோம். ஆஃப் அன் ஹவுரா வெயிட் செய்றோம். டேபிள் நம்பர் சிக்ஸ்டின்ல இருக்கோம். லெல்ஃப்ட் சைட் ஆஃப் த டொர்” என்று யாருக்கோ விபரம் கூறினான்.
வருவது ஒரு நபர் என்பது வரை தெரிந்த யஷ்வந்த் அசட்டையுடன் வாசல் கதவை பார்த்தான். அங்கு காதில் செல்பேசியுடன் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும்.. சில்லென்ற அவனது இதயம் உறைந்தது.
எந்த பெண்ணால்.. அவனது முகத்தில் மீண்டும்.. தெளிவு வந்ததோ! எந்த பெண்ணை நாளை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ! அந்த பெண்.. ஷம்ருதா அங்கே நின்றிருந்தாள்.
விதார்த் எழுந்து கையசைக்கவும், அவளும் முறுவலுடன் கையசைத்துவிட்டு.. அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.
யஷ்வந்த் இன்னும் உறைந்தவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் பல வண்ண எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
அவன் இந்த பெண்ணை சந்திக்க விரும்பியதை அறிந்து அவனது நண்பர்கள் ‘சர்பரைஸாக’ சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களோ!
அவர்கள் எப்படி அறிவார்கள்?
அவனது மனதையும் அறிவார்களா?
அபர்ணாவை இவர்கள் பார்க்கவில்லையே.. பின் எதற்கு இவளை நான் சந்திக்க விரும்பினேன் என்று அறிவார்களோ?
அவனது மனதில் இத்தனை கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும்.. இமைகளை கூட அசைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எதற்கு இவளை சந்திக்க விரும்பினான்.. என்றுக் கேட்டால்.. அவனிடம் பதிலில்லை. அபர்ணாவை ஒத்த சாயல் கொண்டதால்.. இவளிடம் அபர்ணாவை தேடுகிறானா.. என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை. அவனுக்கு வேண்டியது.. சிறு சந்திப்பு மட்டுமே.. அந்த சந்திப்பு எதில் கொண்டு போய் முடியும் என்று அவனுக்கு தெரியாது.
அவனுக்கு வேண்டியது என்ன!
அபர்ணாவை ஒத்த சாயலை கொண்டவளிடம் சிறு ஆறுதலா! சிறு கருத்து பரிமாற்றமா! காதலா! நிறைவேறாத விருப்பதையா!
எதை எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் தற்பொழுது அவன் இருக்கும் இடத்திற்கு அவளே வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அவனது மனதில் தானாக தோன்றிய படபடப்பையும் அவனால் அடக்க முடியவில்லை.
அதற்குள் அருகில் வந்துவிட்டவளை எழுந்து நின்று விதார்த் ஒரு கட்டியணைப்புடன் வரவேற்கவும், யஷ்வந்தின் புருவம் யோசனையில் சுருங்கியது.
மற்றவர்களும் எழுந்து நின்று.. அவளிடம் கரத்தை குலுக்கி வாழ்த்தினர்.
யஷ்வந்தின் உள்மனது ஏதோ சரியில்லை என்றுக் கூறியது.
புன்னகையுடன் யஷ்வந்தின் புறம் திரும்பிய விதார்த் “யஷ்வந்த்! இவ ஷம்ருதா! என்னோட வுட் பீ!” என்று அறிமுகம் செய்தான்.
யஷ்வந்தின் புருவம் மேலும் சுருங்கியது.
அவனும் புன்னகையுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவிப்பான் என்று ஷம்ருதா காத்திருக்க.. யஷ்வந்தோ “டேக் யுவர் சீட்!” என்று இன்டர்வீயூக்கு வந்தவர்களை அமர கூறுவது போல் கூறினான்.
அதைக் கேட்டு ஷம்ருதாவின் முகம் சுருங்கியது.
மற்றவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை போல!
அவர்கள் விதார்த்திடம் ஜோடி பொருத்தத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ரஞ்சித் ஷம்ருதாவிடம் “இவன் சரியான ஆளு! உங்களைப் பற்றி ரிவால்வ் செய்ய.. பந்தா காட்டினான் தெரியுமா! புது படம் ரீலிஸ் ஆகிறதுக்கு முன்னாடி.. முதல்ல போஸ்டர் ரீலிஸ் செய்வாங்க.. அடுத்தது கிளிம்ப்ஸ்.. அடுத்து லீரிக்ஸ் வீடியோ.. அடுத்து ஆடியோ லன்ச்.. அப்பறமா படம் ரீலிஸ் மாதிரி செய்தான். முதல்ல வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்னான். அப்பறம் மீட் செய்தோம் என்று சொன்னான். அப்பறம் மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சுனு சொன்னான். அப்பறம் பேரை சொன்னான். இன்னைக்கு தான் ஆளையே காட்டியிருக்கிறான்.” என்றான்.
உடனே ஷம்ருதா “ஹெ.. சும்மா விதார்த்தை ஓட்டாதீங்க.. அவன் வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்ன போதும் சரி.. பிக்ஸ் ஆகிடுச்சுனு சொன்ன போதும் சரி.. நீங்க யாரும் நம்பலை தானே!” என்றாள்.
விமல் “பின்னே இவனை மாதிரி ஒரு ஆளு வீட்டுல பார்த்த பொண்ணை மேரேஜ் செய்துக்க போகிறான் என்றுச் சொன்னா எப்படி நம்புவது!” என்றுச் சிரித்தான்.
விதார்த் “ஹெ.. என் அப்பாவும் இவ அப்பாவும் பிரெண்ட்ஸ்! நாங்க எப்போதாவது எதாவது பார்ட்டியில பார்த்துப்போம் அவ்வளவு தான் ஷம்ருதா கூட பழக்கம்! அவங்க தான் பேசி.. இந்த சம்பந்ததை முடிச்சாங்க.. எங்களுக்கு ஒகே! அவ்வளவு தான்!” என்றவன், பின் தொடர்ந்து “அப்பறம்.. இவ லேசுப்பட்ட ஆளில்லை. இவ இன்டர்நேஷனல் ஸ்விம்மிங் சேம்பியன்! சிங்கப்பூர்ல நடந்த போட்டியில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கா!” என்றதும்.. அனைவரும் கைத்தட்டி வாழ்த்தினர்.
“தேங்க்யூ! தேங்க்யூ! தேங்க்யூ!” என்று தலையை ஆட்டி வாழ்த்தை ஏற்றவள்.. அப்பொழுதே இவர்களின் எந்த பேச்சிலும் கலந்து கொள்ளாது.. யஷ்வந்த் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் பார்த்தாள்.
அதைப் பார்த்த ஷம்ருதாவிற்கு கடுப்பானாது.
விமல் “சரி பேசியதை கன்டினியூ செய்யலாமா! இந்த வேகேஷன் ப்ளஸ் யஷ்வந்த் பர்த்டே செலபேரேஷனுக்கு எங்கே போகலாம்?” என்றுக் கேட்டான்.
அதற்கு ரஞ்சித் “இன்றைய ஸ்பெஷல் மூமென்ட்டுக்கு காரணமான நம்ம விதார்த் பியான்ஸியை டிசைட் செய்ய சொல்லலாமா?” என்றுச் கேட்டான்.
மற்றவர்கள் எஸ் என்று ஆமோதித்தவாறு கை தட்டினார்கள்.
அப்பொழுது யஷ்வந்த் அழுத்தமான குரலில் “வெகேஷன் வராதவங்க கிட்ட எதுக்கு ஒப்பீனியன் கேட்கணும். நீங்க டிசைட் செய்யுங்க!” என்றுக் கூறினான்.
ஏனோ யஷ்வந்திற்கு உள்ளே எரிவது போன்று இருந்தது.
அவன் ஷம்ருதாவை சந்தித்த பின்.. அவளைப் பொருத்தவரை அவனது நிலை என்ன என்றுத் தெரிந்த பின்.. இன்னொருவருக்கு சொந்தமாக போகிறாள்.. என்று தெரிந்திருந்தால்.. ஒன்றும் தோன்றியிருக்காது. ஆனால் திடுமென இன்னொருவனுக்கு சொந்தமானவள் என்று நிற்கவும்.. யஷ்வந்திற்கு ஏனோ அவனது விசயத்தை அவனது அனுமதியின்றி.. மற்றவர்கள் தீர்மானம் செய்து விட்டது போன்று இருந்தது. கூடவே நினைத்தது நடக்க வேண்டும்.. என்ற குணம் கொண்டவனுக்கு.. அபர்ணாவுடனான அவனது வாழ்வு என்றும் நிறைவேறாத விசயமாக ஆகிவிட்டதால் வந்த இறுக்கம் கொண்டிருந்தான். தற்பொழுது.. இதுவும் அவன் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக போய்விடுமோ.. என்று மேலும் கல் என இறுகி நின்றான். எனவே வார்த்தைகளும் கடினமாக வந்தது.
மற்றவர்கள் நண்பனுக்கு மனைவியாக போகிறவளை யஷ்வந்த் சீண்டி விளையாடுகிறான் என்று நினைத்தார்கள்.
ஆனால் முதலிலேயே யஷ்வந்த் தன்னை அவமரியாதை செய்துவிட்டது போன்ற எண்ணத்தில் இருந்த ஷம்ருதாவிற்கு.. யஷ்வந்த் அவளை ஒதுக்கி பேசியது மேலும் கடுப்பை ஏற்றியது.
“இனி விதார்த் நானில்லாமல் எங்கேயும் போக மாட்டான். ஆனா விதார்த் உங்களோட பெஸ்ட் பிரெண்ட்.. உங்க கூட வெகேஷனுக்கு கண்டிப்பா வருவான். இப்போ நான் பேசியதின் அர்த்தம் புரியுதா!” என்றுக் கேட்டாள்.
விதார்த் முகம் பிரகாசம் ஆக.. “ஹெ ஷம்ருதா! நிஜமா சொல்றீயா! எங்க கூட வரீயா! வீட்டுல ஒத்துக்குவாங்களா?” என்று ஆசையும் மகிழச்சியுமாக கேட்டான்.
அதற்கு ஷம்ருதா “உன் கூட தானே வரப் போறேன். இதுல அவங்க எதுக்கு நோ சொல்ல போறாங்க..” என்று வாயில் கையை வைத்துச் சிரித்து கண்ணடிக்கவும், புரிந்த விட்ட நண்பர்கள் “ஹெ!” கத்தினார்கள்.
ஷம்ருதா சிரித்தவாறு “அவரோட பிரெண்ட்ஸ் குரூப் நீங்களெல்லாம் கூட வரீங்க என்கிற போது.. என் பெரெண்ட்ஸ் ஒகே தான் சொல்வாங்க..” என்றாள்.
அப்பொழுது யஷ்வந்த் “உங்களுக்கு கொடுத்த டைம் ஓவர்! பிளஸை நானே டிசைன் செய்கிறேன். நாம வெகேஷனுக்கு மாலத்தீவு போகிறோம். என்னோட ஷீப்ல தான் போகப் போகிறோம் டாட்” என்று முடித்து வைத்தான்.
மற்றவர்கள் “வாவ் சூப்பர்! செம பிளன்! ஹவர் யஷ்வந்த் இஸ் பேக்!” என்று மேசையில் தட்டி தங்களது சந்தோஷத்தை தெரிவித்தார்கள்.
பின் ஒருத்தரை ஒருத்தர் காலை வாரியவாறும் புதிதாக அவர்களது குழுவில் இணைந்திருக்கும்.. ஷம்ருதாவை பற்றி விசாரித்தவாறு சாப்பிட்டு முடித்தார்கள்.
இந்த பேச்சில் யஷ்வந்த் கலந்து கொள்ளவில்லை என்றாலும்.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும்.. அவனது சிறு சொகுசு கப்பல்.. அரபி கடலில் பயணம் செய்ய அரசிடம் அனுமதி வாங்கியதும்.. இரு நாட்களில் கிளம்பலாம். அனைவரையும் தயாராக இருக்கமாறு யஷ்வந்த் கூறினான். பின் அனைவரும் கலைந்தார்கள்.
கார் பார்க்கிங்கில் லாக் கீயை அழுத்தியவாறு.. யஷ்வந்த் சென்றுக் கொண்டிருந்த பொழுது “எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற குரலில் திரும்பிப் பார்த்தான்.
அங்கு ஷம்ருதா நின்றிருந்தாள்.
யஷ்வந்த் திரும்பி பார்த்ததும்.. அவனை நோக்கி வந்தவள் எடுத்த எடுப்பில் “என்னை உங்களுக்கு தெரியுமா!” என்றுக் கேட்டாள்.
யஷ்வந்த் அமைதியாக புருவத்தை சுருக்கவும், “முதலிலேயே நாம் மீட் செய்திருக்கோமா?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.
ஷம்ருதா தொடர்ந்து “இப்படி சைலன்டா இருந்தால் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதீங்க! உங்களுக்கு நான் இங்கே வந்தது பிடிக்கலைனு கிளியரா தெரியுது.” என்றாள்.
அப்பொழுதும் யஷ்வந்த் அமைதியாக இருக்கவும்.. ஷம்ருதா “உங்களுக்கு பிடிக்காத ஏதோ விசயத்தை.. நான் செய்துட்டேன் போல..” என்கையில் யஷ்வந்த் குறுக்கிட்டான்.
“எஸ்”
உடனே ஷம்ருதா மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு “அப்படியா! அப்படி நான் என்ன செய்தேன்?” என்று கேட்ட மறுகணம் யஷ்வந்திடம் இருந்து பதில் வந்தது.
“விதார்த்துடன் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்க கூடாது. என் கூட உன் லைஃப் இணைந்திருக்கணும்.”