All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கதை திரி

Status
Not open for further replies.

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser 2:

ஓர்நாள் மாலை இளாவின் கைபேசிக்கு அழைத்திருந்தாள் வேணி. இரவு எட்டு மணி அளவில் அவள் அழைத்திருக்க,அவன் இன்னும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பாது ஆர்வமாய் வேலைப் பார்த்திருந்தான். அலைப்பேசியில் வேணியின் அழைப்பு என்றதும் அதை ஏற்று காதில் வைக்க,இளாவிற்கு கேட்டது வேணியின் அழுகைக்குரல்.

மறுப்பக்கத்தில் கேட்ட அவளின் அழுகைக்குரலில் பதட்டமடைந்த இளா,"என்னாச்சு அம்ஸ்... எதுக்கு அழுற??" எனக் கேட்க,

"நீ உடனே மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் வா" என அவள் அழுதுக்கொண்டே உரைக்க,

தன் இருக்கையை விட்டே எழுந்து விட்டானவன்,"போலீஸ் ஸ்டேஷன்கா??இந்த நேரத்துல அங்க எதுக்கு போன நீ??அங்கே என்ன பிரச்சனை??தனியாவா போய்ருகே நீ??லூசா நீ??" எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக,

அங்கே இன்ஸ்பெக்டர் அவளை அழைத்ததாய் கான்ஸ்டபிள் கூற,

"நேர்ல வா...நான் எல்லாத்தையும் சொல்றேன்" என கைபேசியை வைத்து விட்டாளவள்.

கான்ஸ்டபிளின் வார்த்தை இளாவிற்கும் அவளின் கைபேசி வழியாய் கேட்க,மீண்டும் மீண்டும் அவளின் எண்ணிற்கு அவன் முயற்சி செய்ய,அவனின் அழைப்பை ஏற்கவில்லை அவள்.
----

எவர் முன்னும் அழும் சுபாவம் இல்லாத வேணி,தன் அழுகையை கட்டுக்குள் கொண்டுவர பெரும்பாடுபடுவதைப் பார்த்தவன்,"நான் தானே இருக்கேன் கன்ட்ரோல் செய்யாம அழுதிடு அம்ஸ். நெஞ்சடைக்கப் போகுது" என இளாக் கூற,

"நீ எனக்கு யாரோ தான் போடா" என நா தழுதழுக்கச் சொன்னவள் அந்த இடத்தைவிட்டு நகரப் போக, இவன் அவளைத் தடுத்து நிறுத்த விழைந்த நேரம்,வாணி மஹா மற்றும் ஆஷிக் அவ்விடத்திற்கு வந்தனர்.

----

"என்ன ப்ளான் மதி... எங்கே போறோம்" - மஹா

"அது சப்ரைஸ் மஹா... போனப்பிறகு நீயே தெரிஞ்சிப்ப" - மதி

வண்டியில் அமர்ந்துக் கொண்டவளை அவன் முதலில் அழைத்துச் சென்றது ஹோசூரில் புதிதாய் கட்டப்பட்டிருந்த சாய் பாபா கோவிலிற்கு.

கோவிலைக் கண்டவளின் விழி வியப்பில் விரிய,
"ஹே மதி... வாட் எ மிராக்கில்... எதை நினைச்சுடா என்னை இங்க கூட்டிட்டு வந்த??" என கேட்டுக்கொண்டே மஹா வண்டியிலிருந்து இறங்க,

"நீ என்ன நினைச்ச? அதை சொல்லு" - மதி

"சென்னை பஸ் இந்த வழியா தாண்டா போகும். எவ்ரி வீக்கெண்ட் இந்த வழயா போகும்போதெல்லாம இந்த கோயிலுக்கு ஒரு நேரம் வரணும்னு நினைச்சிருக்கேன்... இப்ப அங்கேயே என்னை கொண்டு வந்து நிறுத்திருக்கியே.. எப்படிடா உனக்கு தெரிஞ்சுது??" - மஹா

----

அவன் கூறியதைச் சொல்லி பாபாவிடம் பேசிக் கொண்டவளின் மனம், "இதேப் போல நானும் மதியும் ஒன்னா சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே லைபை என்ஜாய் செஞ்சி வாழனும்" என அவளையறியாமல் அவளின் மனம் சாய் பாபாவிடம் பேசிக்கொண்டிருக்க, தன் எண்ணம் போக்கும் போக்கை எண்ணி திடுக்கிட்டு விழித்தவள், திரும்பி மதி அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்க, அவன் கண் மூடி பெரும் வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தான் கடவுளிடம்.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:
மனம் நெகிழும் நொடிகளில்
நெகிழ்ச்சியின் காரணி
உன் நட்பு..
உள்ளம் உருகிடும் வேளையில்
உருகலின் காரணி

உன் காதல்...

கடும்வெயிலிலும் சிலுசிலுவென இளங்காத்து உடலை வருடும் பெங்களூர் மாநகரம் அது.

ஜீன் 2012

அழகுக் கண்ணாடிக் கட்டிடமாய் பல வணிகக் கடைகள் நிரம்பிய குளுகுளு மாலான ஃபோரம் மாலுக்குள் நுழைந்தனர் அந்த மூன்று பெண்கள்.

அங்கே இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனிடம் இப்பெண்கள் கை அசைத்து

"ஹாய் ஆஷிக்" என உரைத்து
அவனருகில் சென்றனர்.

"ஹாய் கே.பி"

"ஹலோ மஹா"

"ஹாய் அம்மு"

என மூவரையும் வரவேற்றானவன்.

"வாங்க கேர்ள்ஸ். நானும் இந்த கேபி தனியா தான் வருதுப் போலனு நம்பிட்டேன்" என ஆஷிக் உரைக்க

"அவ என்னிக்கி தனியா வெளிய போயிருக்கா?? சும்மா வாய் பேச்சு தான் அவளுக்கு...மேடம் சரியான பயந்தாங்கொள்ளி..." என அம்சவேணி கேபியை வார

"அவன் இப்ப உன்ன கேட்டானா??" என அடிக்குரலில் சீறினாள் கேபி.

"சரிடி வாணி, யூ கேரி ஆன்... நாங்க எங்க ப்ரண்ட பார்க்க போறோம்"
என மஹா கேபி யிடம் உரைக்க ஆஷிகிடம் தலையசைத்து நகர்ந்தனர் மஹாலட்சுமியும் அம்சவேணியும்.

"எந்த ப்ரண்ட பார்க்க போறாங்க அவங்க" -ஆஷிக்

"மஹா மதியை பார்க்க போறா... அம்மு இளாவ பார்க்க போறா" - வாணி

"ஹோ அவங்க ஆளுங்களைப் பார்க்கப் போறாங்கனு சொல்லு" - ஆஷிக்

"டேய் ப்ரண்ட்ஷிப்பை கொச்சைபடுத்தாத...அவங்க ப்ரண்ட்ஸ் தான்" - வாணி

"இப்படி தான் அவங்க உன்னை ஏமாத்திட்டு இருக்காங்க..நீயும் நம்பிட்டு இருக்க" - ஆஷிக்

"ம்ப்ச்... அதை விடு... நீ என்னமோ முக்கியமான விஷயம்...நேர்ல தான் சொல்வேனு சொன்ன... என்னதது" _ வாணி

"ஹம்ம்ம் கல்யாணத்தை பத்தி பேச தான் வர சொன்னேன்"

"வாவ் உன் கல்யாணமா ஆஷிக்... சொல்லவே இல்லை... கங்கிராட்ஸ் டா"

"ம்ப்ச் கடுப்பேத்தாத வாணி"

கடுப்பாய் அவளை பார்த்து உரைத்தான் ஆஷிக்.

அவனின் கோபத்திலும் கடுப்பிலும் தான் வாணி என்றழைப்பானென தெரியுமாதலால், அவன் மேற்கொண்டு பேச அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

ஃபோரம் மாலின் பின் வாசலிலுள்ள காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர் மதியும் மஹாவும்.

"ஐ லவ் யு மஹா" கடும் மன போராட்டத்திற்கு பிறகு இன்று கூறிவிட்டான் மதி தன் காதலை.

"பர்த்டே அன்னிக்கே சொல்லனும் நினைச்சேன்... ஆனா அவ்ளோ ஹேப்பியா இருந்த உன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லாம தான் சொல்லலை மஹா" - மதி

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மஹா. ஆயுசுக்கும் உன்னை நல்லா வச்சு பாத்துப்பேன் குட்டிம்மா. டேக் யுவர் ஓன் டைம்... நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்"
அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

அதே மாலில் மேல் தளத்திலுள்ள ஃபுட் கோட்டில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.

"நேத்து ஏன்டா அப்படி மெசேஜ் பண்ண??.. மூளை கீள கொழம்பி போச்சா உனக்கு.... என்னடா வாழ்க்கை இதுனு இருக்குனு சொல்ற... என் நிலைமை யாருக்குமே வரக்கூடாதுனு வேற சொல்ற... நம்மல நினைச்சு நாமலே பரிதாபப்படுறது நம்ம படைத்த கடவுளுக்கு செய்ற துரோகம்..." வேணி அவனை வறுத்தெடுக்க,இளா அவளை வெறித்து நோக்க,

"என்ன பாக்குற?? இது நீ அடிக்கடி சொல்லுற டயலாக் தான்... எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சி நீயே கறஞ்சி போக மாட்ட.. இப்ப என்ன வந்துச்சு உனக்கு".

இவ்வாறாக இளாவிடம் வேணி கோபத்தில் சீறிக்கொண்டிருக்க,

"என்னை நினைச்சு இல்ல... உன்னை நினைச்சு தான் கறஞ்சு போறேன் அம்ஸ்" இளா உரைக்க

அவன் கூற வருவதன் அர்த்தம் விளங்காது அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.

யார் இந்த பாசப் பறவைகள்...

இவர்களின் பிரச்சனை என்ன???

அவர்களின் தோழமைகள் எவ்வாறு அதை தீர்த்து வைத்தார்கள்???..

மதியின் காதலுக்கு மஹாவின் பதிலென்ன??

வாங்க பயணிக்கலாம் கதைக்குள் இக்கேள்விகளின் விடையறிய...

Feb 2011

எங்கெங்கோ தங்கள் குடும்பக் கூட்டிற்குள் வாழ்ந்து இளமை துள்ளலுடன் கல்லூரி வாழ்வை முடித்துப் பட்டம் பெற்றிருந்த இளம் பொறியாளர்கள் பணி நிமித்தமாய் வந்திருந்தனர் பெங்களூர் நகரத்திலிருக்கும் மென்பொருள் நிறுவனத்திற்கு.

ஆஃப் கேம்பஸ் மூலம் இந்நிறுவனத்திற்கு தேர்வாகியிருந்த மக்களுக்கு இன்று தான் தங்கள் வாழ்வின் முக்கிய நாள்.

ஆம் அவர்கள் பணியின் முதல் நாள் இது.
இந்நாள் தான் தங்கள் வாழ்க்கை போக்கை மாற்றியமைக்க போகும் நாள்....

தங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும், வாழ்க்கை கற்பிக்கவிருக்கும் பாடங்களுக்கும் வித்தாக போகும் நாளிதுவென அறிந்திருக்கவில்லை அவர்கள்...

சென்னையில் நடந்த நேர்முக தேர்வில் தேர்வான இளம் பொறியாளர்களுக்கு பெங்களூரை பணியிடமாய் அளித்து அங்கு பணி செய்யுமாறு ஆஃபர் லட்டர்(பணி நியமனக் கடிதம்) வழங்கியது அந்நிறுவனம்....

அந்நிறுவனத்தின் நுழைவாயில் கேட் அருகே தனது தாய் தந்தையருடன் காரில் வந்திறங்கினாள் மதுரவாணி.

சென்னையை இருப்பிடமாய் கொண்ட அவர்களின் குடும்பத்திற்கு நெல்லை தான் பூர்விகம்.இவ்விரு ஊரை தாண்டி வேறெங்குமே சென்றிடாத, பக்கத்து தெருவிலிருக்கும் கடைக்கு கூட தனியே சென்று பழக்கமில்லாத பெண்ணவள். ஆனால் படிப்பில் படு சுட்டி நம் வாணி. அதனாலேயே கடும் கட்டுப்பாடான குடும்பமாயினும் அவளின் திறமைக்கு மதிப்பளித்து இவ்வேலை செய்ய அவளுக்கு அனுமதியளித்து அவளை சேர்க்கவென அவளுடன் வந்திருந்தனர் அவளின் பெற்றோர்.

ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இவர்கள் வந்துவிட்டதால்,கேட் அருகே ஓரத்தில் காரை நிறுத்தி அருகே நின்றிருந்தனர் வாணியின் பெற்றோர்.

வாணி அங்கிருந்த செக்யூரிட்டியிடம் விசாரிக்கவென சென்று அங்கே நின்றிருக்க,அச்சமயம் அங்கே வந்தான் ஆஷிக்.

ஆஷிக்கிற்கு சொந்த ஊர் சென்னை. அவனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனைத்துமே சென்னை தான். இதுவரை வாழ்வில் சென்னையைத் தாண்டி வேறெங்கும் சென்றிடாதவன் அவன்.

இந்த பெங்களூர் பணியில் சேர தன் தந்தையுடன் வந்திருந்தானவன்.

கார் அருகில் நின்றிருந்த வாணியின் தந்தையை பார்த்துக் கொண்டே வந்த ஆஷிக் , "ஹப்பா பார்க்க எவ்ளோ டெரரா இருக்காரு இவரு.... இவருக்கெல்லாம் பொண்ணு இருந்திதுனா ரொம்ப பாவம் அந்த பொண்ணு. இவருக்கு பயந்தே அந்த பொண்ணுக்கிட்ட எந்த பையனும் பேச மாட்டான். நம்மளும் இவர் பொண்ணு இங்க வேலை செஞ்சிட்டு இருந்துதுனா பேச்சு வச்சிக்க கூடாதுபா... தேவையில்லாம ஏதும் ஊர் வம்பு கிரியேட் செஞ்சிடக் கூடாது" என மனதுக்குள் அவரைப் பற்றி எண்ணிக்கொண்டே அந்நிறுவனத்தை பார்த்தான்.

அங்கே வாணி நின்றிருக்க,
"யாருடா இந்த குட்டிப்பொண்ணு..
ஐ.டில கூடவா சைல்ட் லேபர் வச்சி வேலை வாங்குறாங்க" என்றெண்ணியவாறே அவளிடம் சென்றான்.

"எக்ஸ்க்யூஸ்மீ குட்டிப்பொண்ணு" - ஆஷிக்

"ஹான்... யாரு குட்டிப்பொண்ணு" என வாணி மனதில் நினைத்துக்கொண்டே அவனை முறைத்துப் பார்க்க,

"இங்கே நான் புதுசா வேலைக்கு சேர வந்திருக்கேன்... நீங்க இங்க என்ன பண்றீங்க குட்டிப்பொண்ணு... நீங்க ஸ்கூல் தானே படிக்கிறீங்க" - ஆஷிக்

ஆஷிக் இவ்வாறு கூறக் காரணம் வாணியின் தோற்றம்... அவள் ஐந்தடிக்கும் சிறிது குறைவாக ஒல்லியாக இருப்பாள். காண்பவர்கள் அவளை பள்ளி படிக்கும் பெண்ணெனவே எண்ணுவர். இவனும் அவ்வாறாக எண்ணிவிட்டான் அவளை.

"நான் ஒன்னும் குட்டிப்பொண்ணு இல்ல... நானும் உங்களை மாதிரி இங்க வேலைக்கு சேரத்தான் வந்திருக்கேன்" என்று வாணிக் கூற

அதே நேரம் "மதும்மா,இங்க வா"
என்றழைத்தார் வாணியின் தந்தை செல்வம்.

அவ்வார்த்தையில் அந்த பக்கம் அவள் பார்க்க... அதே சமயம் இவனும் பார்க்க அந்த டெரர் மனிதனின் பெண்ணிவள் என்பதை உணர்ந்தவன்,"ஆஹா, நல்லது பண்றேனு தானா எலி வலைக்குள்ள போய் விழுந்துட்டியே ஆஷிக்கு.... யாருக்கிட்ட பேசக்கூடாதுனு நினைச்சியோ அவரோட பொண்ணுக்கிட்டயே பேசி வச்சிருக்கியே" என மைண்ட் வாய்ஸில் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த சில பல நிமிடங்களுக்குள்....

"தம்பி,இங்க வாங்க" என்றழைத்தார் வாணியின் தந்தை...

"அய்யய்யோ, அந்த குட்டிப்பொண்ணு நம்மளை பத்தி எதாவது போட்டுக்குடுத்துடுச்சா??" என்றெண்ணியவாறே அவரிடம் சென்றவன்,

அவர் வாய் திறப்பதற்குள் "அங்கிள் இனி மது எனக்கு கூடப் பிறக்காத தங்கச்சி அங்கிள்... அவளுக்கு ஆபிஸ்க்குள்ள... இல்ல இல்ல இந்த ஊருக்குள்ளேயே கூட என்ன பிரச்சனைனாலும் நான் பார்த்துக்கிறேன் அங்கிள்... நீங்க கவலைப்படாதீங்க" என்று தானாகவே சரண்டராக.... வாணி வாய்க்குள்ளேயே தன் சிரிப்பை அடக்க....


அவனை முறைத்துப் பார்த்தவர் "என் பொண்ணுக்கு அவளை பாத்துக்க அவளுக்கு தெரியும்... இருந்தாலும் நம்ம ஊருலருந்து வேலைக்குனு வேற ஊருக்கு பொண்ணுங்க வந்திருக்காங்க... என் பொண்ணுனு இல்ல நம்மூரு பிள்ளைங்களுக்கு எந்த பொண்ணுங்களுக்கு என்ன பிரச்சனைனாலும் பார்த்துக்கோங்க தம்பி" என்றுரைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்.

ஆஷிக்கின் தந்தையுடன் வாணியின் தந்தை செல்வம் சிறிது நேரம் பேசியதால் வந்த தெளிவு இது.

இந்நிகழ்வு நடைப்பெற்றிருந்த நேரம், அந்நிறுவனத்தின் வாசல் அன்றைக்குப் பணிக்கு சேர வந்திருந்த மக்களால் நிரம்பி வழிந்தது. அதில் நம் அம்சவேணியும் மஹாலட்சுமியும் அடக்கம்.

ஆஷிக் அந்த பக்கம் சென்றதும், வாணியிடம் திரும்பிய அவளின் தந்தை,

"மதும்மா, எந்த பசங்களையும் என்னிக்கும் நம்ப முடியாதுமா... நம்பவும் கூடாதுமா... அதனால எப்பவும் போல ப்ரண்ட்ஸ்னுலாம் வச்சிக்காம உன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருக்கணும்... புரிஞ்சிதாடா" எனக் கூற

"தெரியும்பா... என்னிக்குமே உங்க மனசு கஷ்டபடுற மாதிரி நடந்துக்க மாட்டேன்பா" என்றுரைத்தாள் வாணி.

அப்பொழுது வாணியுமே அறிந்திருக்கவில்லை வரும் நாட்களில் தானே தன் தந்தையை வருந்த வைக்கப் போகிறோமென.

அனைவரும் உள்ளே நுழைய தாய் தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு தானும் அந்நிறுவனத்தின் உள் நுழைந்தாள் வாணி.

ஐ.டி சம்ரதாயப்படி வேலை சேர்ந்த முதல் இரு நாட்களுக்கு இண்டக்க்ஷன் டிரைனிங் வைத்திருந்தனர் இவர்களுக்கு.

அனைவரையும் ஆல்ஃபபெடிக்கல் வரிசையில் அமரச் செய்தனர்.

மதுரவாணியின் வலப்புறம் நெடு உயரமான அழகு மங்கையான மஹாலட்சுமி அமர்ந்தருக்க, இடப்புறம் மைதா மாவு பளீர் நிறத்தில் அழகு சிலையென தமிழ் தெரியாத வட தேசத்து பெண் அமர்ந்திருக்க,
வாணியின் மனதில் எங்கோ மூளையில் இவள் ஒதுக்கி வைத்திருந்த தான் அழகில்லை என்கின்ற தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

"அழகில்லை என்றால் என்ன?? அறிவு இருக்கிறதே!!அது போதுமே இங்கே வேலை செய்ய..... என்னைக்குமே தாழ்வு பான்மை உன் தன்னம்பிக்கையை சிதைச்சிடும் மது.. அதை உனக்குள்ள என்னிக்கும் கொண்டு வராத.... யூ ஆர் த பெஸ்ட்" என என்றைக்கும் தன்னை அவள் தேற்றிக் கொள்ளச் சொல்லும் மந்திரத்தை மனதுக்குள் உருபோட்டுக் கொண்டு நிமிர்வாய் அமர்ந்தாள் வாணி.

இரண்டு நாட்கள் 500 பேருக்கு நடைபெற்ற புகுமுக பயிற்சி்(induction training) முடிவடைந்த நிலையில் 30 நபர்கள் ஒரு குழுவென குழுக்களாய் பிரித்து,அனைத்து குழுக்களையும் டெக்னாலஜிக்கு ஏற்ப வெவ்வேறு அலுவலகத்திற்கு அனுப்பினர் வேலைக்கான மூன்று மாத பயிற்சிக்காக.

இதில் வாணியின் பயிற்சி அலுவலகம் பெங்களூர் இந்திரா நகரில் இருக்க, இந்த இரண்டு நாட்களில் வாணி எவரிடமும் பரிச்சயமாகாத நிலையில்
அவளை அப்புது அலுவலகத்திற்கு அழைத்து சென்று,
அதனருகிலேயே அவளுக்கேற்ற பி.ஜி(Paying Guest) யை பார்த்து தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தனர் அவளின் பெற்றோர்.

ஒரு நாள் பயிற்சி இவ்வலுவலகத்தில் இவள் முடித்து வந்ததும்,அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு அன்றிரவு சென்னைக் கிளம்பி விடலாம் என முடிவு செய்தனர் வாணியின் பெற்றோர்.
முதல் நாள் பயிற்சி வகுப்பிற்குள் நுழைய,அங்கு அவளுக்கு பரிச்சயமானவளாய் இருந்தது மஹா மட்டுமே. அவளருகில் அமர்ந்துக் கொண்டாள் வாணி. சிநேகப் புன்னகையை பரிமாறிக் கொண்டனர் இருவரும்.

மஹாவினருகில் அமர்ந்திருந்தாள் அம்சவேணி. புகுமுக பயிற்சியிலேயே மஹாவும் வேணியும் பரிச்சயமாகி சிநேகிதிகளாகியிருக்க தாங்கள் ஒன்றாய் தங்குவதற்கு பி.ஜி தேடிக் கொண்டிருந்தனர் இருவரும்.

அப்பொழுது வாணி தன் பி.ஜியில் தன்னறையிலேயே இரு இருக்கைகள் காலியாய் இருப்பதாகவும் , அதில் அவர்களை தங்கிக் கொள்ளுமாறும் பணித்தாளவள்.

அந்நேரம் கேட்டது அவனின் குரல்..

"ஹே கேபி!! நீயும் நம்ம ஜாவா பேட்ச் தானா??? அங்கிள் ஆண்டி ஊருக்கு போய்டாங்களா??" என முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் இருக்கையின் அருகில் வந்து நின்று பேச ஆரம்பித்தான் ஆஷிக்.

அதென்ன கேபி என மனதில் எண்ணிக்கொண்டே "ம்ம்ம்... இன்னிக்கு நைட் கிளம்புறாங்க".

இவனின் கேபி என்ற விளிப்பும்,அங்கிள் ஆன்டி என்கின்ற உரிமையான பேச்சும் வகுப்பிலிருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மேல் பதிய வைக்க,சங்கடமாய் பதிலுரைத்தாள் வாணி.

"ஹோ அப்படியா... அப்ப நான் அங்கிள் கிளம்பும் போது வந்து செண்ட் ஆப் பண்றேன்... எங்க தங்கியிருக்க நீ" _ ஆஷிக்

"அய்யய்யோ... ப்ரண்டே வேண்டாம்னு சொல்ற அப்பாகிட்ட முதல் நாளே ப்ரண்டா வந்து வழியனுப்ப போறானாமா?? இவன் நம்ம வேலைக்கே உலை வச்சிடுவான் போலயே... எப்படியா இவனை சமாளிக்கிறது" என பதிலுரைக்காது இவள் திருதிருவென முழிக்க,

அவளின் அமைதியை வைத்து தன் மீது நம்பிக்கை இல்லாது இருப்பிடம் உரைக்க இவள் யோசிப்பதாய் எண்ணியவனுக்கு கோபம் உச்சத்திற்கு ஏற,

"சரி வாணி... நான் வரல... நீ இப்படி நம்பிக்கை இல்லாம என் கிட்ட ஒன்னும் பேச வேண்டாம்" என
உறுமலாய் உரைத்து அவனிடத்திற்கு சென்று அமர்ந்துக்கொண்டானவன்.

"அச்சோ தப்பா புரிஞ்சிக்கிட்டு ஹர்ட் ஆயிட்டான் போலயே" என்றிவள் மனம் காயப்படப் பதறித் திரும்பி அவனை அழைக்க எத்தனிக்கையில் தான் அவள் மூளை கூறியது "நீ அவன் பேரை இன்னும் கேட்கவேயில்லையென"
அய்யோ பேரே தெரியாம எப்படி அவனைக் கூப்பிடுறது என்றவள் யோசித்திருந்த நேரம் அவளின் வகுப்பு பயிற்சியாளர் வகுப்புக்குள் நுழைந்து பேசத் தொடங்கினார்.

ஒரு வழியாய் அன்றைய நாள் வகுப்பு நிறைவுபெற மனம் கொள்ளா துக்கத்துடன் விழி நிறைத்த நீருடன் வந்து சேர்ந்தாள் அவளின் ரூமிற்கு.

-- உருகல் தொடரும்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கண்ணனின் ஆசியுடன் இக்கதையை எவ்வித தங்கு தடையுமின்றி எழுதி முடிக்க அருளுமாறு என் கடவுள்களிடம் வேண்டி என் முதல் கதையின் முதல் அத்தியாயத்தை இன்று பதிப்பித்திருக்கிறேன்.

கதையின் தலைப்பு : உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்

மக்கள் என்னுடைய இந்த கன்னி முயற்சிக்கு ஆதரவளித்து தங்களின் கருத்துக்களை நிறை குறைகளை கீழுள்ள திரியில் பகி ர்ந்துக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2
என்னை நானே உயர்வாய் எண்ண
அடித்தளமானது உன் நட்பு...
என்னை நானே நேசிக்க

அடித்தளமானது உன் காதல்...

பெங்களூரில் முதல் நாள் பயிற்சிக்காக அங்கே வகுப்பு தொடங்கிய அதே நேரம்,
சென்னையில் அழகுக் கண்ணாடி மாளிகையான அந்த மென்பொருள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான அந்த கட்டிடத்தின் பயிற்சி அறையில் தன் பேட்ச் மக்களுடன் அமர்ந்து அன்றைய வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தான் இளங்கோவன்.
அச்சமயம் ஒளிர்ந்து அதிர்ந்தது அவனின் கைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாய்.

"ஐம் ஃபீலிங் வெரி லோன்லி ஹியர்"

தன் தோழி அம்சவேணி அனுப்பிய இக்குறுஞ்செய்தியில் இவன் மனம் வருந்திட,

"இன்னிக்கு தானே முதல் நாள் அப்படி தான் இருக்கும். போக போக அதுவே பழகிடும்" எனப் பல டங் அவுட் ஸ்மைலிக்களுடன் தேறுதல் கூறினான்.

அதைக் கண்டதும்,"ஹா ஹா ஹா.உண்மை தான்" என அவள் பதிலுரைத்திருந்த நேரம்,
ஒலித்தது அவளின் கைப்பேசி இளாவின் அழைப்பில்.
பயிற்சியின் வகுப்பில் இடைவேளை விட்டிருந்த நேரம் அவளுக்கும் இடைவேளை என்றறிந்ததினால் அழைத்திருந்தான் அவளை.

"என்னங்க மேடம்,தனியாவே நாங்க ஊரு உலகத்தை சுத்திட்டு வருவோம்னு சவால் விட்டுப் போன எங்கச் சூறாவளி அம்சவேணிக்கு இப்ப என்னாச்சு??" என்று கேலியாய் இளா வேணியைக் கேட்க,

"இல்லடா இங்க வந்து இன்னும் யாரும் ப்ரண்ட்ஸ் ஆகலை. அதான் அப்படி இருக்கு. உன்கிட்ட பேசினப்புறம் நார்மல் ஆயிட்டேன். இப்ப நோ ப்ராப்ளம் இளா. நீ உன் க்ளாஸ் கவனி" என படு சீரியஸாகவே வேணி பதிலளிக்க,

"என்னடா சிங்கம் கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி பேசுது. இந்நேரம் நான் சொன்ன வார்த்தைக்கு சிலுப்பிக்கிட்டு என்னை சிதைச்சிருக்கனுமே" என வார்த்தையில் வியப்பு மேலிட விளையாட்டாய் அவன் வினவ,

"என்னடா ஓவரா பேசுற.ஆமா நான் சூறாவளி தான். என்னால ஊரு உலகத்தை தனியா சுத்தி வர முடியும்.எனக்கு யாரோட இரக்கமும் அனுதாபமும் தேவையில்லை...
புரிஞ்சுதா???போய் உன் வேலையை பாரு" சிலுப்பிவிடப்பட்டச் சிங்கமாய் மொழிந்தாள் வேணி.

"இது இது தான் என் அம்ஸ். அவளுக்கு இப்படி சோக மூஞ்சிலாம் செட் ஆகாது. இப்ப ஃபார்ம்க்கு வந்துட்டடா." என அவளை அவளாய் மாற்றிய பூரிப்பில் இளா உரைக்க,

"சரி டா,பை" என இதழில் புன்னகை இழையோட அலைப்பேசியைத் துண்டித்து வேணி திரும்பிப் பார்க்க தூரமாய் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள் வாணி.

"சாரி,உங்களை ஹர்ட் பண்ணனும்னு நான் அப்ப பேசாம இருக்கல. அம்மா அப்பா இன்னிக்கு ஊருக்கு போறாங்க,அந்த நினப்புலயே இருந்துட்டேன்... அதான் சொல்ல டைம் எடுத்தேன்... அதுக்குள்ள கோவிச்சிட்டுப் போய்டீங்க... சாரி" என வருத்தமாய் வாணி மன்னிப்புக் கேட்க,

"அட விடு இதுக்குப் போய் சாரி லாம் கேட்டுக்கிட்டு... இன்னிக்கு தான் அங்கிள் ஆன்டி ஊருக்குப் போறாங்களா?? அப்ப சரி சாய்ந்திரம் உன் கூடவே வரேன் க்ளாஸ் முடிஞ்சதும் அங்கிள் ஆண்டி செண்ட் ஆஃப் செய்த மாதிரியும் இருக்கும்" - ஆஷிக்

"அடக்கடவுளே,அப்பாக்கிட்ட எனக்கு உதை வாங்கிக் கொடுக்காம இவன் போக மாட்டான் போலயே... கோபமாவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டிருக்கனும்" என மனதிலேயே அவனை வறுத்தவள்,
ஞாபகம் வந்தவளாய்"உங்க பேர் என்ன?? சாரி க்ளாஸ்ல இன்ட்ரோ(அறிமுகம்) கொடுக்கும் போது கவனிக்கலை"

"ஹ்ம்ம் இன்னும் என் பேர் தெரியாமத் தான் சுத்திட்டு இருக்கியா நீ!!பரவாயில்லை இப்பவாவது கேட்கனும்னு தோணுச்சே. இருந்தாலும் நானா சொல்ற ஐடியா இல்ல. முதல் நாள்ங்கிறனால எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை நம்ம இன்ட்ரோ தான் எல்லா டிரைனர்ஸூம் கேட்பாங்க. அப்ப கேட்டுத் தெரிஞ்சுக்கோ" என்றுரைத்து விட்டு ஆஷிக் நகர,

இவன் என்ன லூசா என்கின்ற பாவனையில் வாணி அவனைப் பார்த்து நிற்க,அம்சவேணி வாணியினருகில் வந்து சேர சரியாகயிருந்தது.
மீண்டும் அன்றைய வகுப்புகள் தொடர,அதில் மூழ்கிப் போயினர் அனைவரும்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்பான அன்றைய வகுப்பின் இரண்டாம் பாதியில் வாணியின் மனம் சற்றாய் சஞ்சலிக்கத் தொடங்கியது.

"இதுவரை தனியாய் வீட்டின் வாசல் படியைக் கூட தாண்டாதத் தான் எவ்வாறு இப்புதிய ஊரில் வாழப் போகிறேன்?? பெற்றோரைப் பிரிந்து எங்கும் ஒரு நாள் கூடத் தங்கிடாதத் தான் எவ்வாறு மூன்று மாதங்கள் தனியாய் இவ்வூரில் நாட்களைக் கடத்தப்போகிறேன்?? இவ்வெண்ணம் மனதில் உதிக்கும் போதே கண்ணில் நீர் துளிர்க்கிறதே!! பாரமாய் மனதை ஏதோ அழுத்துகிறதே!! பெருங்துக்கம் தொண்டையை அடைக்கிறதே!!" இவ்வாறாக இன்றிரவு தன்னை விட்டு சென்னைக்கு கிளம்பிச் செல்லப் போகும் தாய் தந்தையை எண்ணி அவளின் மனதில் பெரும் பீதி சூழ மனங்கொள்ளாத் துயரத்தில் கண்ணில் அடக்கப்பட்ட நீருடும் அம்சவேணி,மகாலட்சுமி மற்றும் ஆஷிக் புடைச் சூழ தன் பிஜியை வந்தடைந்தாள் வாணி.

அங்கே கிளம்புவதற்கு தயார் நிலையில் காரில் அமர்ந்திருந்தனர் வாணியின் பெற்றோர்.

மஹாவும் வேணியும் வாணியின் அறையிலேயே தங்குவதாய் கூறித் தங்களை வாணியின் பெற்றோரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, ஆஷிக்கும் வாணியின் பெற்றோரிடம் மரியாதை நிமித்தமாய் பேசிக் கொண்டிருக்க,வாணி சிறு பிள்ளையாய் கண்ணை மறைத்த நீருடன் அடக்கப்பட்ட அழுகையால் துடித்த உதடுகளும் சிறு தேம்பலுமாய் தன் அழுகையை பிறருக்குக் காட்டாமல் மறைக்கப் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.

"மதும்மா,அப்பா கிளம்புறேன் என்றுரைத்து அவளுக்கு அறிவுரைகள் கூறி" மதுரவாணியின் தந்தை சற்றவளை அணைத்த நொடி கண்ணிமை விட்டு நீர் அவள் கன்னங்களில் வழிந்தோட,அதே நிலையில் தான் இருந்தார் வாணி தந்தை செல்வமும்.

"என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மாப்பிள்ளையிடம் கூறும் தகப்பனைப் போல் வாணியின் கைகளை வேணி மற்றும் மஹாக் கைகளில் ஒப்படைத்து, அவளுக்கு வெளியுலகம் சுத்தமா தெரியாதுமா. கைக்குள்ளேயே வளர்ந்தப் பொண்ணு பத்திரமா பாத்துங்கோங்க..ஒருத்தருக்கொருத்தர் உதவிச் செஞ்சிக்கோங்க" என்று செல்வம் உரைக்க,

"நாங்க பத்திரமாய் பாத்துப்போம் அங்கிள். நீங்க பயப்படாம் தைரியமா போய்டு வாங்க" என பெரிய ஆறுதல் மொழியுரைத்தனர் வாணியின் தந்தையிடத்தில்

அச்சமயம்,"இனி வாணி என் பெஸ்ட் ப்ரண்ட்.நீங்க கவலைப்படாம போங்க. நாங்க அவளை நல்லாப் பார்த்துப்போம்" என ஆஷிக் உரைக்க,

"அய்யோ நீ இப்படி பேசுறது தான்டா என் அப்பாக்கு கவலையாகப் போகுது. இவன் அப்பாகிட்ட இன்னிக்கு வாங்கிக் கட்டிக்காம போக மாட்டான் போலயே. வாயை மூடிட்டு இருடா குரங்கு" என மனதிற்குள் கௌண்டர் கொடுத்துக் கொண்டிருநதாள் வாணி.

இவற்றையெல்லாம் கவலை தோய்ந்த முகத்துடன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார் வாணியின் அம்மா நீலாமதி.

ஒருவாராய் பிரியா விடைக்கொடுத்து வாணியைப் பெற்றோர் தங்களின் சென்னைப் பயணத்தைத் துவங்க, அன்றிரவு போர்த்திய போர்வையின் அடியில் அழுது வீங்கிய கண்களுடன் உறங்கிப் போனாள் வாணி.

மறுநாள் வாணி வழமைப் போல் ஐந்து மணிக்கே எழுந்தவள்,தன் துணிகளைத் துவைத்துக் குளித்து முடித்து ஏழு மணி வாக்கில் மஹாவையும் வேணியையும் எழுப்பத் தொடங்கினாள்.

அந்நேரம் வேணியின் கைப்பேசி சத்தம் கொடுக்க அதை தூக்கக் கலக்கத்தில் வேணி எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க,"அலாரம் வச்சிருந்திருக்காங்கப் போல... அப்ப அவங்களே எழுந்திருப்பாங்க" என நினைத்துக் கொண்டே பால்கனியில் தன் துணிகளை காயப் போடச் சென்றாளவள்.

வாணி தனக்கு ஃபிட்டாக இருக்கும் சல்வாரை அணிந்து துப்பட்டாவை இரு பக்கமும் பின் செய்து நீளமான முடியை லேசாக எண்ணெய் தடவி நன்றாகப் பின்னி மிதமாய் பவுடர் பூசி நெற்றியில் மீடியம் சைஸ் பொட்டும் அதன் மேல் சந்தனம் வைத்து என கிளம்பித் தன் மெத்தையில் அமர்ந்திருந்தாள்.

குளித்து முடித்து வெளி வந்த மஹா கிளம்பத் தயாராக ,வேணி குளிக்கச் சென்றாள்.

மஹா மற்றும் வேணி அலங்காரம் செய்வதையே மெத்தையிலமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி.

நெடு உயரமான மஹா,அவளுக்கேற்ற ஜீன்ஸ் அதன் மேல் ஷாட் குர்தி அணிந்திருந்தவள்,ஃபெதர் கட் செய்திருந்த தன் முதுகு வரை நீண்ட கூந்தலை காதின் இரு பக்கமும் சிறு முடிகள் எடுத்து சிறிய கேட்ச் க்ளிப்பில் அடக்கியவள் பின்னால் மீதம் இருந்த கூந்தலை நேர்த்தியாய் ஃப்ரீ ஹேரில் விட்டாள்.பின் ஐ லைனர்,கண் மை,காம்பாக்ட் பவுடர்,லிப் க்ளாஸ் என மிதமாய் அலங்காரம் செய்யலானாள். நெற்றியில் ஒரு புள்ளி அளவு பொட்டு வைத்தவள் திருப்தியாய் தன்னை ஒரு முறை கண்ணாடியில் முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

மஹா தன்னை அலங்கரிக்க எடுத்துக் கொண்ட அரை மணி நேரத்தில் குளித்து முடித்து நேர்த்தியாய் இஸ்த்திரி போட்டு மடித்து வைத்திருந்த லெக்கின் டாப்ஸ் அணிந்த வேணி, கண்ணாடிக்கூடப் பார்க்காது முதுகு வரை நீண்ட கூந்தலை குதிரை வால் போல் தூக்கி மொத்த முடியையும் பேண்டிற்குள் அடக்கியவள்,லேசாய் பவுடர் அடித்து சிறு பொட்டு வைத்துக் கொண்டாளவள். இவற்றையெல்லாம் முடித்தப் பிறகே கண்ணாடியை பார்த்தாளவள்.
கல்லூரி ஹாஸ்ட்டலில் காலையில் அவசர அவசரமாய் இவ்வாறு கண்ணாடி பார்க்காமல் தயாராவது வேணியின் பழக்கம். அதுவே இங்கேயும் தொடர்ந்தது. ஆனால் உடுத்தும் உடை இஸ்த்திரி போடாமல் உடுத்த மாட்டாளவள்.

"வேணி நான் உன்னை அம்முனு கூப்பிடவா??" இவ்வாறு கிளம்பிக் கொண்டிருந்தச் சமயம் மஹா வேணியிடம் கேட்டாள்.
ஆச்சரியத்தில் விழி விரித்த வேணி,"ஹே எங்கப்பா என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க.. ப்ரண்ட்ஸ் தான் வேணினு கூப்பிடுவாங்க... நீங்க அப்படி கூப்பிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்"

"வாணி வேணி ரைமிங்கா இருக்குல கன்பூஸ் ஆயிடும். அதான் இப்படி யோசிச்சேன். அப்புறம் இந்த வாங்க போங்கலாம் வேண்டாம். வா போ னே பேசலாம்." என வாணி வேணி இருவருக்கும் பொதுவாய் உரைத்து சகஜமாய் பழக வழிவகைச் செய்தாள் மஹா.

"ஹே அப்ப நானும் அம்முனே கூப்பிடுகிறேன்" என வாணி உரைத்தாள்.

ஒருவாறாகக் கிளம்பித் தன் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார்கள் அவர்கள்.

இவ்வாறாக நாட்கள் செல்ல...

பெற்றோரை நினைக்கும் போதெல்லாம் அழுகையுமாய், படிப்பு வேலை என்று வந்ததும் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற துடிப்புமாய் வாணி படிப்பில் மட்டுமே தன் முழு கவனத்தையும் வைத்திருந்தாள்.

அம்சவேணியும் மகாலட்சுமியும் ஏற்கனவே கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்தக் காரணத்தினால் இப்பெங்களூர் பயிற்சி வகுப்பையும் கல்லூரியில் நடக்கும் வகுப்பினைப் போல் கிண்டலும் கேலியுமாய் கவனித்துக் கொண்டு கல்லூரி புறாக்களாகவே சந்தோஷ முகத்துடன் நாட்களை இன்பமாய் நகர்த்திக் கொண்டிருந்தனர்.

விடியற்காலையில் விழிப்பு பின் படிப்பு இரவு வரை அலுவலகத்தில் பயிற்சியென அதில் மட்டுமே கவனத்தை செலுத்தித் தன் கூட்டைவிட்டு வெளிவராது அனைவரிடமும் ஒதுங்கியே பழகினாள் வாணி.

காலைச் சூரியன் முகத்தில் அடிக்கும் போது விழித்து பயிற்சி வகுப்பின் போதுக் கொடுத்த வீட்டுப் பாடத்தை அலுவலகம் கிளம்பும் நேரம் அவசர அவசரமாய் வாணியைப் பார்த்து காப்பி அடித்துப்பின் இரவு வரை பயிற்சி வகுப்பில் அரட்டையடித்துக் கொண்டே பயிற்சி பாடங்கள் செய்தென தங்கள் நாட்களை கல்லூரி நாட்கள் போலவே இன்பமாய் கழித்தனர் அம்சவேணியும் மகாலட்சுமியும்.

அம்சவேணியின் பூர்வீகம் பிறப்பு வளர்ப்பு அனைத்தும் சேலம் தான்.மகாவின் பூர்வீகம் பிறப்பு வளர்ப்பு அனைத்தும் சென்னை.
அம்முவுக்கும் மஹாவுக்கும் உடன் பிறந்தவர்கள் என்றால் ஓர் அக்கா மட்டுமே. இருவரின் அக்காக்களும் சென்னையில் ஓர் மென்பொருள் நிறுவனத்தில் வேலைச் செய்துக்கொண்டிருந்ததால், இத்துறை அவர்களுக்கு சிறிது பரிச்சயமானதாய் இருந்தது.

அம்சவேணியின் தந்தை கிராமத்துத் தலைவர் மற்றும் அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்.மஹாவின் தந்தை மத்திய அரசாங்கப் பணியில் இருப்பவர்.எனவே இருவரும் உயர் மத்திய குடும்பத்தை சேர்ந்தவர்களாயிருந்ததால் செல்வத்துக்கு பஞ்சமில்லை இரு குடும்பத்தினருக்கும்.

பதினோராம் வகுப்பிலிருந்தே ஹாஸ்ட்டலில் தங்கிப்படித்தவர்கள் வேணியும் மஹாவும். ஆகவே பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பது பழகிய ஒன்றாய் இருந்தது அவர்களுக்கு.எனினும் புது இடமாகையால் நட்புக்கள் அமையும் வரை அவர்களையுமே சில நேரம் வீட்டை நினைத்து ஏங்க வைத்தது.

கல்லூரி காலங்களில் பெரும் நட்பு படை உண்டு இருவருக்கும். வேணிக்கு பத்து பெண்கள் சேர்ந்தப் படை தோழிக்களாயிருக்க,மஹாவிற்கு மூன்று தோழர்கள் நான்கு தோழிகளென பெரும் நட்புக் குழு கல்லூரியில் இருந்தது.
இவ்வாறு வேணிக்கும் மஹாவுக்கும் இருந்த ஒற்றுமைகளால் அவர்கள் சிறிது நாட்களிலேயே தோழிகளாய் மாறிப்போயினர்.

மதுரவாணியின் குடும்பமும் செல்வந்தர்களே. அவர்கள் பரம்பரையாய் வணிகத்தில் பொருளை ஈட்டும் குடும்பத்தவர்கள். ஆகையால் பத்தாவது பன்னிரெண்டாவது மேல் படிக்கவில்லை அவளின் தந்தைத் தலைமுறையில். அவளின் தலைமுறையிலுள்ளோர்களோ டிப்ளமோ படித்து அதற்கேற்றத் தொழில் ஈடுபட்டனர். வாணிக்கு உடன்பிறந்தவர்கள் எவருமிலர். ஆக வாணித் தான் அக்குடும்பத்தில் முதல் பட்டதாரி மற்றும் வெளி அலுவலகத்தில் பணியிலமர்ந்த முதல் மென்பொருளாளினி.

மூன்று மாத பயிற்சிக்குப் பின் எவ்வாறேனும் சென்னையில் ப்ராஜக்ட் பணி வாங்கிக்கொண்டு சென்னைக்கு மாற்றலாகிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் திண்ணமாய் வாணி இருந்ததுமே ஓர் முக்கிய காரணம் இவர்களிடமிருந்து ஒதுங்கிப் பழகியதற்கு.
மற்றொரு காரணம் தாழ்வு மனப்பான்மை. அழகாய் இருப்பவர்கள் மட்டுமே ஐ.டியில் வேலை செய்வார்கள் என்றோர் பேச்சு அப்போது உண்டு. ஆகையால் தன்னுடைய படிப்புத் திறமையின் மேல் வாணிக்கிருந்த நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள், அவளின் உருவெளித்தோற்றத்தின் மேல் அவளுக்கில்லை. எங்கேனும் அதற்காய் தாம் கேலிச் செய்யப்பட்டு விடுவோமோ என்கின்ற எண்ணம் அவள் மனதின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு எவரிடமும் அவளை நெருங்கிப்பழக அனுமதிக்கவில்லை.
வேணியும் மஹாவும் வாணியிடம் பழகும் விதத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை சிறிது குறைந்திருந்தாலும், அலுவலகத்தில் அவ்வெண்ணம் அவளிடம் தலைத்தோங்கியே இருந்தது.

பெங்களூரில் பயிற்சி நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, ஓர் நாள் இரவு வாணிக்குத் தூக்கத்தில் தொண்டை வறண்டுப் போக,தண்ணீர் அருந்துவதற்காக அவள் விழிக்க,அங்ஙனம் கேட்டதோர் விசும்பல் சத்தம் வாணிக்கு. யாரென்றுத் தன் அறையின் இருட்டில் சுற்றும் முற்றும் பார்க்க, அம்சவேணியின் போர்வையின் உள்ளே கைப்பேசியின் ஒளிர்ந்துக் கொண்டிருக்க யாருடனோப் பேசிக் கொண்டே விசும்பிக் கொண்டிருந்தாளவள்.

வேணியின் சொந்த விஷயத்தில் தலையிட விரும்பாத வாணி,அன்று அவளிடம் ஏதும் கேட்காது உறங்கி விட்டாள்.
வேணி மஹா நெருங்கிய தோழிகளாகி விட்டதால் அவள் அழுததைப் பற்றி மறுநாள் மஹாவிடம் வாணி உரைக்க, வேணி அவளின் கல்லூரித் தோழன் இளா வுடன் தினமும் இரவு தூங்கும் நேரம் பேசுவாளென்றும்,ஹோம் சிக் வரும்போதெல்லாம் இப்படி தான் அவனிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பாளென்றும் அவள் தன்னை மறந்து தூக்கம் வரை அவனும் இவளிடம் பேசுவானென்றும் உரைத்தவள்,காலையில் தினமும் ஓர் அழைப்பு வந்து அவளை எழுப்பி விடுமே அது கூட அவன் தான். தினமும் காலை கைப்பேசியில் அலாரம் போல் அழைத்து அவளை எழுப்பி விடுவானென்றுக் கூற இப்படியும் நண்பனானென வியப்பில் வாய் பிளந்தவள்.. இது நட்பு மட்டும் தானா?? என்கின்ற கேள்வியுடன் திருதிருத்து நின்றாள் வாணி, பின்னாளில் தனக்கும் ஓர் நண்பன் இவ்வாறு வாய்க்கப் போகிறான் என அறியாது.

"இளா காலேஜ் ப்ரண்ட்னா, இப்ப என்ன வேலை செஞ்சிட்டு இருக்காங்க??" என்று வாணி வினவ,

"ஹ்ம்ம் தினமும் நம்ம வேணியை காலைல எழுப்புற வேலைய செஞ்சிட்டு இருக்கான்"எனக் கூறி மஹா வாய் விட்டுச் சிரிக்க,
பின் வாணியின் திருதிரு முழியைப் பார்த்து,இளாவும் நாம் வேலை செய்யும் அதே மென்பொருள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் பயிற்சியிலிருக்கிறானென்று கிண்டலைக் கைவிட்டு உண்மையை உரைத்தாள் மஹா.

இவ்வாறாக முதல் இரண்டு மாதம் பயிற்சி முடிவடைந்த நிலையில், முதல் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட அதில் வாணி மற்றும் மஹா C கிரேடு வாங்கிருக்க,அம்சவேணி B கிரேடு வாங்கியிருந்தாள். அம்மு மட்டுமல்ல இரவு நேர பயிற்சி நேரங்களில் ஆனந்தமாய் ஆட்டம் போட்டுக்கொண்டே பயிற்சியைக் கற்ற பல பேஜ்ட் மேட்ஸ் முதல் மதிப்பெண் பெற்று A கிரேடு பெற்றிருக்க,முதலில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாணி, நண்பர்களுடம் இன்பமாய் கிண்டலடித்து ஆரவாரமாய் விளையாடிக் கொண்டு வாழ்வை சுகமாய் ரசித்துக் கொண்டுப் படித்தாலும் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும். இப்படி கட்டுப்பாட்டுடன் படிப்பில் மட்டும் முழுக்கவனமாய் மகிழ்ச்சியில்லாது வாழ்வை ரசிக்காது இறுக்கமான மனதுடன் படித்தால் தான் தன் லட்சியத்தை அடைய முடியும் என்றில்லை என்கின்ற வாழ்வின் முக்கியமான பாடத்தைப் படித்தாளன்று வாணி.

குறிக்கோளை அடைய வேண்டும். அதற்கான முழு கவனமும் அந்த லட்சியத்திலேயே இருக்க வேண்டும். ஆனால் இறுக்கமாய் அல்லாது திறந்த மனதுடன் தனக்கு பிடித்தவாறு வாழ்வை ரசித்துக் கொண்டே,மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவித்துக் கொண்டே காரியத்தில் கண்ணாய் இருந்தால் போதும் வாழ்வின் இலக்கை இன்பமாய் அடையலாம் என்ற வாழ்வின் பெரும் தியரியை கற்றுக் கொண்டாளன்று.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இனி வரும் நாட்களில் பயிற்சியில் குழுக்களாய் செயல்பட வேண்டிவருமென உரைத்து, 5 மக்கள் ஓர் குழு அக்குழுவிற்கு ஓர் தலைவன்/தலைவி என குழுக்களை பிரிக்களானார் அவ்வகுப்பு பயிற்சியாளர்.
இப்பயிற்சி முறை தான் ஐடி கல்சர்(culture) என்றுக் கூறப்படும் கல்சரை அவர்களே அறியாமல் அவர்களுக்குள் புகுத்துவிக்கும் பயிற்சியாய் அமைந்தது.

ஆம் இரண்டு மாதம் வரை கல்லூரியைப் போல் ஆண்கள் ஒருப் பக்கம் பெண்கள் ஒருப் பக்கமென அமர்த்தப்பட்டிருக்க,ஆண்கள் பெண்களென கலவையாய் குழுக்களைப் பிரித்து... இனி குழுக்களாய் தான் அமர வேண்டுமெனக் கூறிவிட்டனர்.
ஒன்றாய் அமர்ந்திருந்த வாணி மஹா மற்றும் வேணியைப் பிரித்து விட்டிருந்தனர் இக்குழுக்களுக்கிடையில்.

மஹா,ஆஷிக் மற்றும் வாணி ஒரு குழுவாய் பிரிக்கப்பட சற்று ஆசுவாசமடைந்தாள் வாணி.
வேணி மட்டும் தனித்து பிரிக்கப்பட்டு வேறுக்குழுவில் இணைக்கப்பட்டிருந்தாள்.

இருபாலரும் படிக்கும் பள்ளியில் படித்திருந்தாலும்,கட்டுப்பாடான வளர்ப்பில் நெருங்கிய நண்பர்களோ தோழிகளோ இல்லாது வாழ்ந்த வாணிக்கு இவ்வாறு ஆண் பெண் அருகருகில் அமர்ந்து வேலைப் பார்ப்பது அவளை வளர்க்கப்பட்ட முறையில் வாணிக்கு பெரும் சங்கடத்திற்குள்ளாழ்தியது.ஆண் பெண் நட்புகளுடன் இயல்பாய் வளர்க்கப்பட்ட வளர்ந்த மஹா மற்றும் வேணிக்கு இம்மாற்றம் ஏதும் பெரியதாய் பாதிக்கவில்லை.

ஆகையால் இயல்பாய் ஆண்களிடம் பேசினாலும் எந்நிலையிலும் தன்னிலை இழக்காது தூர வைத்து பழகும் விதத்தைக் கற்பித்து அவளின் அச்சங்கடத்தை தங்களின் அறிவுரை மூலம் அன்றைக்கு களைந்தனர் அத்தோழிகள்.
தியரியாய் அவர்களின் அறிவுரையை ஏற்ற வாணி, செயல்முறையாய் இவ்விஷயத்தை கையாளும் போது அப்புது பழக்கங்களை கையாளத் தெரியாமல் திண்டாடித்தான் போனாளவள்.

உருகல் தொடரும்..
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

இக்கதையின் இரண்டாம் அத்தியாயத்தை பதிப்பித்து உள்ளேன்.

மக்கள் என்னுடைய இந்த கன்னி முயற்சிக்கு ஆதரவளித்து தங்களின் கருத்துக்களை நிறை குறைகளை கீழுள்ள திரியில் பகிர்ந்துக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:
என் சுயத்தை
வெளிக்கொணர்ந்தது
உன் நட்பு...
என் அபிமானத்தை
வெளிக்கொணர்ந்தது

உன் காதல்...

குழுக்களாய் பிரித்து அளிக்கப்பட்டப் பயிற்சியின் கடைசி நிலை பயிற்சியான ஒரு குழு ஒரு ப்ராஜக்ட் செய்ய வேண்டுமென்ற தேர்வுநிலையில் ராஜேஷ்,ஆஷிக்,மஹா,வேணி ஒரு குழுக்களாய் ப்ராஜக்ட் செய்வதில் ஈடுபட்டனர். அக்குழுவின் தலைவனாய் ராஜேஷ் இருந்தான்.

"என்ன தலைவலிக்குதா கே.பி??" கேட்டான் ராஜேஷ்.

இந்த ஆஷிக்கின் உபயத்தால் அவளின் பேட்ஜ் மக்கள் அனைவரும் அவளை கே.பி என்றே விளிக்கவாரம்பித்திருந்தனர்.

"இல்ல நேத்து நைட் படம் பார்த்துட்டு சரியா தூங்கலை. அதான் கண்ணு எரியுது.வேற ஒன்னுமில்ல" என்று தன் வலப்புறத்திலுள்ள கணிணியில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த ராஜேஷிடம் உரைத்தாள் வாணி.

"அதென்ன படம்னு கேளு ராஜேஷ்" என்றவனுக்கு எடுத்துக் கொடுத்தாள் இடப்புற கணிணியில் அமர்ந்திருந்த மஹாலட்சுமி.

இருவரின் நடுவில் தன் கணிணியில் கண் பதித்திருந்த வாணி மஹாவின் இப்பதிலில் அவளை முறைக்க,

"ஆஹா!!!அப்ப என்னமோ இருக்கு போலவே?? என்ன படம் பார்த்தீங்க நேத்து நைட்" எனக் கோரசாய் கேலியாய் கேட்டனர் ராஜேஷும் அவனருகில் இருக்கையிலிருந்த ஆஷிக்கும்.

"ஃபேமிலி படம் தான் பார்த்தோம். விவாஹ் இந்தி படம் ஜீ சேனல்ல போட்டான். அதை தான் பார்த்தோம்" விரைப்பாய் வாணி உரைக்க,

"பார்த்தோம் இல்லடி. பார்த்தேனு சொல்லு. டைம் ஆயிடுச்சு தூங்கலாம்னு நானும் வேணியும் கூப்பிடுகிறோம்,படம் முடிஞ்சா தான் வருவேனு சொல்லிட்டா. வேற வழியில்லாம நாங்களும் இவளுக்கு கம்பெனிக் கொடுக்க முழு படத்தையும் பார்த்துட்டு தூங்கினோம்" என்று பாவமாய் மஹா உரைக்க,

"விவாஹ் ஃபேமிலி படமா உனக்கு??" என முறைப்பாய் ராஜேஷ் கேட்க,வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டே மஹா வாணியைப் பார்க்க,

"உன்னை... ரூம்க்கு வா.. கவனிச்சிக்கிறேன்" என மஹாவிடம் அடிக்குரலில் சீறினாள் வாணி.

"அது எவ்ளோ அழகான காதல் படம். அதை என்னமோ விசு பட ரேஞ்சிக்கு ஃபேமிலி படம்னு சொல்லிட்ட??" என ராஜேஷ் குறைப்பட்டுக் கொள்ள,

"சரி அது அழகான காதல் கலந்த குடும்பப் படம். ஒத்துக்கிறேன்!!

ஆனா அதுக்காக விசு படத்தை நீ குறைச்சு பேசுறதெல்லாம் ஒத்துக்க முடியாது" என வாணி ராஜேஷிடம் சீறினாள் இப்போது.

தங்கள் குழு செய்யும் ப்ராஜக்ட் தான் முதல் மதிப்பெண் பெற வேண்டுமென்ற பெரும் குறிக்கோளுடன் இரவு வரை தங்களின் நேரத்தை நீட்டித்து வேலை செய்தாலும், இவ்வாறாக சந்தோஷமாய் கேலிக் கிண்டலுடன் பேசி அரட்டை அடித்து வேலை செய்யும் அலுப்புத் தெரியாத வண்ணம் குதூகலமான மனதுடனே செய்தனர். அவ்வாறு செய்ய வைத்தனர் அக்குழுவின் தலைவன் ராஜேஷூம் ஆஷிக்கும்.

இவ்வாறு வேலை செய்வது வெகுவாய் கவர்ந்தது வாணியை. மனதில் அழுத்தமில்லாமல் குறிக்கோளை அடைய உதவிச் செய்யும் இவ்விரண்டு பேரும் வாணியின் உற்ற தோழர்களாய் மாறிப் போனார்கள். அதன் விளைவே இத்தகைய பேச்சிலும் அவளை இயல்பாய் பதிலுரைக்கச் செய்தது.

ராஜேஷ் அவர்களின் பேட்ஜ் மேட். இப்பொழுது வாணிக் குழுவின் தலைவன். இவனின் தலைமையில் இயங்கியது வாணியின் குழு.

கலகல சுபாவம் கொண்டவன். எவரையும் தன் கேலியான பேச்சால் நிமிடத்தில் சிரிக்கச் செய்பவன். எவர் அவனிடம் பழகினாலும் அவனை தனக்கு நெருக்கமானவனாய் எண்ண வைத்து விடுவான். மிகுந்த கோபக்காரன். சுயநலவாதியும் கூட. அவனுடைய சுயநலத்தால் தனக்கு அவன் கற்பிக்கப் போகும் வாழ்க்கை பாடம் அப்போது அறிந்திருக்கவில்லை வாணி.

ஆஷிக் அனைவரிடமும் ஓர் எல்லை வைத்து பழகுபவன். தன் உதவி தேவை எனும் போது உதவுவான் அதன் பின் அவர்கள் யாரோ எவரோ என்பது போல் நடந்துக் கொள்வான்.

தேவையில்லாது ஓர் வார்த்தை அவன் வாயிலிருந்து வராது.

ஏனோ ஆரம்பித்திலிருந்தே வாணியிடம் மட்டும் தான் தன் இயல்பையும் மீறி பேசினான் ஆஷிக்.

மூன்று மாதத்திற்குப் பின் பணியிடம் சென்னை வாங்கிவிட்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தினால் தன் தோழிகளால் தன் சகப்பணியாளர்களால் கிடைத்த சிறு சிறு சந்தோஷ நிகழ்வையும் தன்னை பூரிக்கச் செய்த தருணங்களையும் மனதில் சேமித்துக் கொண்டாள் வாணி.

வேணிக்கும் மஹாவிற்கும் இவை ஏதும் புதிதாய் தோன்றவில்லை. இயல்பாய் கடந்து வந்தார்கள் அந்த பயிற்சியினையும் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற நட்புகளையும்.

அம்சவேணியுடனும் மஹாவுடனும் நெருங்கிப் பழகவாரம்பித்திருந்தாள் வாணி.

தன் ப்ராஜக்டின் தலைவன் என்கின்ற முறையில் பேசவாரம்பித்தது ராஜேஷிடம். அவனிடம் பேச வருபவர்களை நிமிடத்தில் சிரிக்க வைத்துவிடும் அவனின் சுபாவம் மிகவும் பிடித்து விட்டது வாணிக்கு. தன் உற்றத் தோழனாய் உணர்ந்தாள் அவனை. அவனும் அவ்வாறே அவளை உணரச்செய்தான் அவனின் பேச்சினால். ஆனால் இவை எல்லாம் கானல் நீரென உணரவில்லை அவள். மனதில் பெரும் இடம் கொடுத்து புண்பட்டு போனாள் பின்னாளில்.

மூன்று மாத பயிற்சி முடிவடைய ஒரு வாரம் இருந்த நிலையில் அப்பயிற்சி நிறுவனம் அவர்களுக்கு விருந்து(Party) தருவதாயுரைத்தது. அந்நாள் மறக்க முடியாத நாளாய் மாறியது மக்கள் அனைவருக்கும்.

அனைவருக்குமே இத்தகைய விருந்து புதிதே. எனினும் மூன்று மாதத்தில் எல்லோரும் பரிச்சயமாகிய நிலையில் மகிழ்வாய் அமைந்தது அந்த பார்ட்டி.

ஆனால் வாணிக்கு இந்த பார்ட்டி மறக்க முடியாத நாளாய் அமைந்ததற்கு காரணம் வேறு.

--

லீலா பேலஸ் என்ற 3 ஸ்டார் ஹோட்டலில் ஸ்னோ பௌலிங் கேம் மற்றும் டிஜே டான்ஸ் பின்பு சவுத் இன்டீஸ் ஹோட்டலில் இரவு உணவு என ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்னோ பௌலிங்கில் ஆரவாரமாய் பங்கேற்று அனைவருமே விளையாட,டிஜே டான்ஸில் சில பெண்களும் அனைத்து ஆண்களும் பங்கேற்று நடனமாட பின்பு இரவு உணவு உண்டு கிளம்பும் நேரம் பதினொன்றைத் தொட்டது.

மற்ற பெண்கள் அனைவரும் ஒரு குழு ஆண்களுடன் தங்கள் பிஜிக்கு செல்ல,வாணி வேணி மஹா மூவரும் ராஜேஷ் ஆஷிக் மற்றும் சில ஆண்களுடன் தங்களின் பிஜிக்கு பயணப்பட்டனர்.

ஹோட்டலிலிருந்து ஒரு கிலோமீட்டரில் பிஜி இருப்பதாய் எண்ணி இவர்கள் தொடங்கிய நடைப்பயணம் இரண்டு மணி நேரம் தொடர்ந்தது இவர்களின் தவறான தூரக்கணிப்பினால்.

இரவு வேளையில் நிலவொளியில்

மனதில் சிறு அச்சமும் துணிச்செயல் செய்வதாய் ஓர் எண்ணமுமாய் மூன்று பெண்கள் ஐந்து ஆண்கள் கிண்டலும் கேலியுமாய் ஓர் நடைப்பயணம்.

மிகவும் ரசித்தாள் வாணி. தன் மனதின் நினைவு பெட்டகத்தில் இணைத்துக் கொண்டாள் இந்நிகழ்வை. புகைப்படமெடுக்க மிகுந்த ஆர்வமுள்ள மஹா அந்நாளின் சுவாரசியமான நிகழ்வுகளை புகைபடமாக்கவும் தவறவில்லை.

லீலா பேலஸில் உற்சாகமாய் ஸ்னோபௌலிங் விளையாடிய மஹா,இரவுணவிற்காக உணவகம் சென்றப்பின் அமைதியாகிப் போனாளவள். அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதாய் தோன்றியது அவளின் தோழிகளுக்கு.

அவர்கள் அவளிடம் ஏன் அமைதியாய் இருக்கிறாளெனக் கேட்டும் கூறவில்லை அவள்.

அன்றிரவு மிகுந்த சோர்வில் வாணியும் வேணியும் படுத்தவுடன் உறங்கிவிட,மஹா மதியைப் பற்றிய நினைவில் உறங்காது விழித்திருந்தாள்.

அன்றிரவு அவ்வுணவகத்தில் அவள் உண்ட பாசுந்தி அவனின் நினைவை தூண்டுவிட, அவளின் மனம் அவனின் நினைவுகளில் பயணித்தது.



நான்கு வருடங்களுக்கு முன்பு...



கல்லூரியில் சேர்ந்த அந்நாளில் தான் மதியழகன் மஹாவை முதன்முதலாய் பார்த்தது.



மதியழகன்,காண்பதற்கு ஹைக்ளாஸ் பையனாகத் தெரிந்தாலும் பாரபட்சமின்றி எவ்வித வேறுபாடுமின்றி எளிமையாய் பழகும் குணாளன் அவன்.



அவனின் தாய் தந்தை அரசாங்க ஊழியர்கள். பெரும் செல்வ நிலையில் வளர்க்கப்பட்டவனாய் இருந்தாலும் அனைவரிடமும் இனிமையாய் பழகும் குணமுடையவன். பெரியவர்களை மதிக்கும் பண்புடையவன்.



சிறு வயதிலிருந்தே இரு பாலரும் பயிலும் சிபிஎஸ்இ யில் பயின்றவனாதலால் சரளமாய் மேலை நாட்டு ஆங்கிலத்தில் உரையாற்றுவான்.ஆண் பெண் பாகுபாடின்றி நட்புகள் உண்டு.



கல்லூரியில் இருவரும் ஒரே வகுப்பில் பயில மஹாவிற்கு தன் வகுப்பில் பயில்பவன் என்ற நிலையில் மட்டுமே பரிச்சயமானவன் அவன்.



கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதமாகிய நிலையில் அனைவரிடமும் நட்பு பாராட்டி சரிசமயாய் பேசித் தோழனாயானவனால் ஏனோ மஹாவிடம் மட்டும் நேர்க்கொண்டு பேச இயலவில்லை.

அவளிடம் பேசும் போதெல்லாம் வார்த்தைக்கு திண்டாடிப் போனானவன். ஏதோ ஓர் தயக்கம் அவனை சூழ்ந்துக் கொள்வதைப்போல் உணர்ந்தானவன்.



இதைப் பற்றி மேற்கொண்டு யோசிக்க மனமில்லாமல் விட்டுச் சென்றானவன்.



இவ்வாறாக இரண்டு செமஸ்டர் முடிவடைந்திருந்த நிலையில் மதியிடமே மஹா உதவிக்கேட்கும் சூழ்நிலை அமைந்தது.



மஹாவும் மதியும் ஒரே கல்லூரிப் பேருந்தில் தான் பயணிப்பர்.



மஹா அவள் நிறுத்தத்தில் இறங்கிய பின்பே இவனின் நிறுத்தம் வரும்.



அவ்வாறு ஓர் நாள் அவளின் நிறுத்தத்தில் அவள் இறங்கியதும் அவளின் பின்னே ஓர் ஆடவன் அவளைத் தொடர்ந்து செல்வதைக் கண்டான் மதி.



தொடர்ந்து ஒரு வாரமாக அவ்வாடவன் இவளை தொடர்ந்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் மதி. மஹாவும் அவன் தன்னை தொடர்வது தெரிந்தும் கண்டும் காணாததுப் போல் நடந்துக்கொண்டாள்.



மறுநாள் அவளிடமே ஏதேனும் பிரச்சனையாயென வினவலாமென அவன் எண்ணியிருக்க,

அன்று அவளிடம் பேச அவனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக...

அன்று மாலை அவள் இறங்கியதும்

அந்நிறுத்தத்தில் அவ்வாடவனுடன் அவள் நின்றுப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது மதிக்கு.



பேருந்து நகர்ந்து விட...

கல்லூரிப்பேருந்தின் ஜன்னலின் வழியாய் இவற்றைப் பார்த்துக் கொண்டேப் போனானவன்.

அவளின் முகப் பாவனைகள் வைத்து அவளின் உணர்வுகளை கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்.



ஆனால் அவனின் மனம் ஏதோ தவறாய் நிகழப்போவதாய் உரைத்தது அவனுக்கு.



பேருந்தை நிறுத்தச் சொல்லி அவனும் இறங்கி அவளின் நிறுத்தத்திற்கு நடந்துச்சென்றான்.



இன்னும் அவள் அவ்வாடவனிடம் பேசிக் கொண்டுதானிருந்தாள்.

ஆனால் இப்பொழுது அவளின் முகம் கோபக்கனலாய் சிவந்திருந்தது.



மதி அவளருகில் சென்று மஹா என்றதும் தூக்கி வாரிப்போட திரும்பியவள் மதியைக் கண்டதும் ஆசுவாசமாய் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.



"ஹே ரிலேக்ஸ் நான் தான்... ஏதாவது பிரச்சனையா மஹா??" மதி அவ்வாடவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே கேட்க,



மஹா அவ்வாடவனைப் பார்த்து"நான் யாரயாவது லவ் பண்றனானு கேட்டல... இதோ இவர் தான் என் அத்தை பையன்... இவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு எங்க வீட்டுல எப்பவோ டிசைட் செஞ்சிட்டாங்க... இதை தான் உனக்கு அப்போதுலருந்து சொல்லிட்டு இருக்கேன்... இனியும் என்னை டிஸ்டர்ப் செய்யாம போறியா நீ" என கிட்டதட்ட கோபத்தில் உறுமிக் கொண்டிருந்தாள்.



இதைக் கேட்ட மதிக்கு நன்றாகப் புரிந்துப்போனது இவன் அவளைப் பின் தொடர்ந்து காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறானென.



அவனிடமிருந்து தப்பிக்கவே இவள் இவ்வாறு உரைக்கிறாளெனப் புரிந்தது மதிக்கு.



மஹா மதியைக் காதலிப்பதாய் கூறியதும் அவ்வாடவனின் முகம் மிகுந்த வேதனையைக் காண்பிக்க,

"இங்க பாருங்க பாஸ். உங்க ஃபீலிங்க்ஸ் எனக்கு புரியுது. உங்களுக்காக பிறந்தவங்க உங்களைத் தேடிக் கண்டிப்பா வருவாங்க. மஹா உங்களுக்கானவ இல்லை. அவளோட வாழ்க்கை உங்களோட இணைக்கப்பட விதியில்லை. எனக்குத் தெரிஞ்சி இப்ப கொஞ்ச நாளா தான் நீங்க மஹாவ காதலிக்க ஆரம்பிச்சிருப்பீங்க. ஆரம்பத்திலேயே துளிர்கிற காதலை கிள்ளி எறிஞ்சிடலாம். வலி ரொம்ப இருக்காது. அது ரொம்ப வருஷமாகி மரமாகிப் போச்சுனா ரொம்ப வலிக்கும். அதனால கடவுள் இப்பவே உங்களுக்கு புரிய வச்சருக்காருனு நினைச்சு நன்றிச் சொல்லி மஹாவை மனசை விட்டு தூக்கி எறிஞ்சிடுங்க."

என மதி தன் அறிவரையை வழங்கினான்.



"பிடிக்காத பொண்ணை கட்டாயப்படுத்திக் காதலிக்க வைக்குற அளவுக்கு நான் கெட்டவன் இல்லை பாஸ். இந்த ஆறு மாசமாத் தான் மஹாவ எனக்கு தெரியும். அதுவும் இந்த பஸ் ஸ்டாண்ட்ல பார்க்கிறதோட சரி. அவங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க அமைதியா வந்தோமா போனோமானு தான் இருப்பாங்க... அந்த அமைதியான அழகு பிடிச்சுப் போய் தான் அவங்க கிட்ட வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்குறேனு சொன்னேன். அவங்க ஒத்துக்கலை.. மஹா காதலிக்கிறதாப் பொய் சொல்றாங்கனு நினைச்சேன்..." என்றுரைத்தான் அந்த ஆடவன்.



"அப்புறம் ஏன் பாஸ் ஒரு வாரமாய் அவளை ஃபாலோ பண்ணீங்க?" கூர்மையாய் அவனை நோக்கி மதி கேட்க,



"ஒரு வாரமா பேச தயங்கி கொஞ்ச தூரம் போய் ரிட்டன் வந்துட்டேன் பாஸ்... இன்னிக்குத் தான் தைரியம் வந்து பேசினேன் அதுவும் இப்படி வந்து முடிஞ்சிடுச்சு"



இதைக் கேட்டு சிரித்தவன்,"ஐயம் மதி,யுவர் குட் நேம் சார்??"



"பிரபு" என்றவன் உரைத்த நொடி அவனிடம் கை நீட்டிய மதி

"நைஸ் டு மீட் யு பிரபு. உங்களுக்கு சீக்கிரமே மஹாவை விட நல்ல பொண்ணா கிடச்சு உங்க கல்யாணம் நடக்க மை பெஸ்ட் விஷ்ஷஸ் பிரபு"



என சிரித்தப்படி பிரபுவின் கைக்குலுக்க, பிரபு வாய் விட்டுச் சிரித்து அவனின் வாழ்த்தை இன்பமாய் பெற்றுக் கொண்டு விடைப்பெற்று சென்றான்.



மஹா,"என்னடா நடக்குது இங்க??" என்ற மன நிலையில் வாய் திறந்து திகைப்பில் மதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவள்,அவன் இறுதியாகக் கூறிய மஹாவை விட நல்லப் பெண் என்ற கூற்றில் மதியை முறைத்துக் கொண்டிருந்தாளவள்.



மஹாவைப் பார்த்து சிரித்தவண்ணம் "ப்ராப்ளம் சால்வ்டு..இப்ப ஹேப்பியா??" என மதி வினவ



"ம்ம்ம்" என மண்டை ஆட்டினாள் மஹா.



"இவ்ளோ தூரம் வந்துட்டேன்..உன் வீட்டுக்கெல்லாம் என்னைக் கூப்பிட மாட்டியா??" என மதி கேட்க



"ஓ சாரி... கண்டிப்பா வாங்க.. வாங்க அப்படியே பேசிக்கிட்டே நடந்துப்போகலாம்" என மஹா உரைத்த நொடி இருவரும் அவளின் வீட்டை நோக்கி நடக்கலாயினர்.



"சாரி உங்களை கேட்காமலே அப்படி ஒரு பொய் சொல்லிட்டேன்" என குற்றவுணர்வில் தலை குனிந்தவள்,



"அதை நீங்க அட்வாண்டெஜா எடுத்துக்காம இப்படி கூலா ஹேண்டில் செஞ்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என நன்றி உரைத்தாள்.



"தட்ஸ் ஓகே. யு ஆர் வெல்கம்"

என்றுரைத்த மதி



"உன் அப்பா அம்மானா உனக்கு ரொம்ப பயமா??" என்று வினவினான்.



"இல்லையே... ஏன் அப்படி கேட்குறீங்க??" - மஹா



"பின்னே ஏன் வேற யாரயோ லவ் பண்றேனு சொல்லி பிரபுவை ரிஜெக்ட் செய்யனும்... ஐ டோண்ட் திங்க் இட்ஸ் அ குட் ஐடியா.. அவர் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்குறேனு தானே சொல்லிருக்காரு. வீட்டுக்கு வாங்கனு சொல்லிட்டு, உங்க அப்பா அம்மா கிட்ட இவரை பிடிக்கலைனு சொல்லிருக்கிலாமே அண்ட் மோரோவர் யு குட் ஹேவ் ஹேடில்டு திஸ் இன் அ பெட்டர் வே"

என அவனுரைக்க,



"மோஸ்ட்லி இந்த மாதிரி பிரச்சனைய வீட்டில சொல்ல மாட்டேன். வீட்டுல இப்படி கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலையோட பார்க்க கொஞ்சம் அழகாகவும் ஒருத்தர் வந்து பொண்ணுக் கேட்ட என்னைய தான் கன்வின்ஸ் பண்ணப் பார்ப்பாங்க. அதுவுமில்லாம இது வரைக்கும் எனக்கு வந்த லவ் ப்ரோபோசல்ஸ் அப்படிதான் நான் ரிஜெக்ட் செஞ்சிருக்கேன். ஆனா இவரு நான் பொய் சொல்றேனு கண்டுப்பிடிச்சிட்டாரு. அதான் நீங்க வந்ததும் சொன்ன பொய்ய மேனேஜ் செய்ய அப்படி சொல்லிட்டேன் சாரி."



என்று மஹா கண்ணைச் சுருக்கி பாவமாய் உரைக்க,



அவள் கூறிய கொஞ்சம் அழகென்ற வார்த்தையில் இவனின் மனதில் சிறு பொறாமை தீ எரிவதை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் அவ்வாறு மனம் விந்தையாய் செயல்படுகிறது என யோசித்த வண்ணம் அவளுடன் நடந்துச் சென்றான்.



அவனின் அமைதியைக் கண்டு தானும் அமைதியாய் நடக்கலானாள் மஹா.



அவளின் வீட்டை அடைந்ததும்,

அவனை வீட்டின் முகப்பறையில் அமரச் செய்தவள் சமயலறைச் சென்று தாயை அழைத்து வந்து மதியை அறிமுகம் செய்து வைத்தாள்.



"ஹலோ ஆன்டி" எனப் பழக்கதோஷத்தில் கை நீட்ட



"வணக்கம்" என கையை குவித்துக் கொண்டாரவர்.



மஹாவின் வீட்டை பொறுத்த வரை ஆண் நண்பர்களுடன் பழக தடையில்லை அவளின் பெற்றோரிடத்தில். ஆனால் எவரிடம் பழகினாலும் அவர்களிடம் உரைத்துவிட வேண்டும். அதுவே அவர்களின் எண்ணம்.



ஆக மதியைப் பார்த்தும் மஹாக்கு புதிதாய் கல்லூரியில் கிடைத்த நண்பனென எண்ணிக் கொண்டார் அவளின் அன்னை.



"ஆன்டி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கு தான் வீட்டுக்கு வந்தேன்" என்று மதிக் கூற



இவனுக்காக குடிக்க ஜூஸ் எடுக்கச் சென்ற மதி "நம்ம அம்மாகிட்ட இவன் என்னத்தடா பேசப்போறான்" என்ற மைண்ட்வாய்ஸூடன் முகப்பறைக்கு வந்தாள்.



பஸ் ஸ்டாண்டில் நடந்த மொத்த நிகழ்வையும் ஒரு வரி விடாமல் அவளின் தாயிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தானவன்.



"அடப்பாவி இப்படி போட்டுக் கொடுத்துட்டியே" என பயங்கர கடுப்பில் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.



"டேய் நீ சொல்லலனாலும் நான் நடந்ததை சொல்லிருப்பேன்டா... ஆனா விட வேண்டியதை விட்டுடு சொல்ல வேண்டியதை சொல்லிருப்பேன்... இப்படி ஒரு வரி விடாம ஒப்பிச்சிருக்க மாட்டேன்."



அவன் ஒப்புவித்ததை கேட்டதும் "என்னது" என அவளின் தாய் மஹாவை முறைக்க





"இப்படி என்னை மாட்டி விட்டுடியே கடன்காரா" என மனதில் அவனை ஏகமாய் வாழ்த்தி திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க



"ஏன் மஹா என் கிட்ட சொல்லல" என அவளின் அம்மா கேட்க,



"உங்களை தேவை இல்லாம டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான்ம்மா" என அவள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு உரைத்தாள்.





"ப்ரோபோஸ் செய்ற எல்லார்கிட்டவும் இப்படிதான் சொல்லிட்டு திரியுறா ஆன்டி. அதனால யாராச்சும் உங்க கிட்ட அவளை பத்தி தப்பா போட்டு கொடுத்தாலும் நம்பாதீங்க அண்ட் ஆல்சோ அவளை கொஞ்சம் மிரட்டி வைங்க... இப்படி ப்ரச்சனைலாம் வீட்டுல வந்து சொல்லனும்னு மிரட்டுங்க."



அவனின் இவ்வார்த்தையில் "மிரட்டனுமா?? நான் என்ன பூனைக்குட்டியாட மிரட்டினதும் மிரண்டு ஓடுறதுக்கு" என மைண்ட் வாய்ஸில் கவ்ண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் மஹா.



"இவன் நல்லவனா இருக்க போய் பரவால… இதே கெட்டவனா வம்பு பண்றவனா இருந்து தனியா மாட்டிகிட்டா இவளுக்கு பிரச்சனை தானே… அதனால இந்த மாதிரி விஷயத்துல பெரியவங்க வழி நடத்துதல் ரொம்பவும் முக்கியம் ஆன்டி"



"எங்க வீட்லலாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை வந்தா படிக்கிறானு கூடப் பார்க்காம கல்யாணம் பண்ணி வைக்கத் தான் பார்ப்பாங்க. நான் தான் பெரியவங்களை கன்வின்ஸ் செஞ்சி வச்சிருக்கேன். பொண்ணு படிச்சு வேலைக்கு போயி சொந்த கால்ல நிக்குற கான்பிடன்ஸ் வந்த பிறகு மேரேஜ் செய்து வைங்கனு.



சோ அதே தான் என் ரெக்வெஸ்டா இங்கயும் வைக்கிறேன் ஆன்டி. எதுவும் தப்பா சொல்லிருந்தா சாரி ஆன்டி."



மதி தன் நீண்ட பெரும் சொற்பொழிவை முடிக்க,



"அடேங்கப்பா இவ்ளோ நல்லவனாடா நீ" என மஹா முழித்துக் கொண்டிருக்க,



மஹாவின் அம்மா அவனின் தலை கோதி ரொம்ப அருமையா உன்னை வளர்த்திருக்காங்கப்பா...



நான் அவளை கண்டிப்பா கண்டிச்சு வைக்கிறேனெனக் கூறி மஹாவை முறைத்தவர்,அவனை நன்றாக உண்ணவைத்து விட்டே விடைக்கொடுத்து அனுப்பி வைத்தார்.



"மஹா என்னது இது மத்தவங்க சொல்ற அளவுக்கா நடந்துப்ப??"



அவளருகில் சென்று அவள் கன்னம் வருடி,"நீ என்னிக்கும் தப்பு செய்ய மாட்டானு தெரியும்டா அம்மாக்கு. நீயா பிரச்சனைய முடிச்சிடலாம்னு நினைச்சிருக்க... தப்பில்லை. இனி தனியா செய்யாத... எதுனாலும் அம்மாகிட்ட சொல்லிட்டு செய்... அம்மாக்கு ப்ராமிஸ் செய்" என மஹாவிடம் உறுதி மொழி வாங்கி கொண்டப்பின் தான் நிம்மதியானாரவர்.



அவனை பற்றிய இந்நினைவினிலேயே உறங்கிப்போனாள் மஹா.



அனைவரும் தேர்ச்சி பெற்று மூன்று மாத பயிற்சியினை முடித்திருத்த நிலையில், தங்களின் பணி நியமன ஆணைக்காக வேறோர் கிளை அலுவலகத்திற்கு இவர்களின் பேட்ஜ் மக்களை வரச் சொன்னார் இவர்களின் ஹெச்ஆர் தேவ்.(மனிதவள அலுவலர்)

ஹெச் ஆரிடம் ரிப்போர்ட் செய்வதற்கான அந்த நாளில்...


-- உருகல் தொடரும்
 
Status
Not open for further replies.
Top