All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்னை....

அன்புக்கு பாடம் சொல்லி
அறிவுக்கு இலக்கணமான
அம்மா....
நீ...
பாசத்தில் வளர்த்த பிள்ளை
பண்பாய் நிற்கிறது!
நீ...
நேசமாய் வளர்த்த பிள்ளை
நெருக்கமாய் நிற்கிறது!
நீ...
வீரமாய் வளர்த்த பிள்ளை
விவேகமாய் நிற்கிறது!
நீ...
கருத்தாய் வளர்த்த பிள்ளை
பொறுப்பாய் நிற்கிறது!
நீ...
பாந்தமாய் வளர்த்த பிள்ளை
பாங்காய் நிற்கிறது!
பாசத்தில் பண்பாய்....
நேசத்தில் நெருக்கமாய்....
வீரத்தில் விவேகமாய்....
கருத்தில் பொறுப்பாய்...
பாந்தத்தில் பாங்காய்...
நிற்கும் பிள்ளை
வீட்டை காப்பதுடன்
நாட்டையும் காக்காதோ.....?

நீிர் இன்றி ஆடாது இவ்வுலகம்!
அன்னையே....
நீ இன்றி ஆடாது பூவுலகம்!

வாழ்க உன் தொண்டு!
வளர்க பல்லாண்டு!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனமே.....

உன் அமைதியில் தெளிவில்லை!
உன் ஆன்மாவில் நிம்மதியில்லை!
உன் இன்பத்தில் இனிமையில்லை!
உன் ஈகையில் ஈர்ப்பில்லை!
உன் உவகையில் உயிர்ப்பில்லை!
உன் ஊணில் உறக்கமில்லை!
உன் எண்ணத்தில் ஏற்றமில்லை!
உன் ஏக்கத்தில் ஏகாந்தமில்லை!
உன் ஐயத்தில் ஐக்கியமில்லை!
உன் ஒப்புமையில் ஒருங்கிணைப்பில்லை!
உன் ஓட்டத்தில் ஓய்வுமில்லை
உன் ஔடதத்தில் அமைதியில்லை!
ஏன்? என்ற கேள்விக்கு பதிலுமில்லை!
மவுனமாய் மறுகுகின்ற மனமே
மயக்கம் தீர மருந்திருந்தால்

மரிக்கும் முன் தருவாயா?
 

amuthavallinagarajan

Well-known member
மனமே.....

உன் அமைதியில் தெளிவில்லை!
உன் ஆன்மாவில் நிம்மதியில்லை!
உன் இன்பத்தில் இனிமையில்லை!
உன் ஈகையில் ஈர்ப்பில்லை!
உன் உவகையில் உயிர்ப்பில்லை!
உன் ஊணில் உறக்கமில்லை!
உன் எண்ணத்தில் ஏற்றமில்லை!
உன் ஏக்கத்தில் ஏகாந்தமில்லை!
உன் ஐயத்தில் ஐக்கியமில்லை!
உன் ஒப்புமையில் ஒருங்கிணைப்பில்லை!
உன் ஓட்டத்தில் ஓய்வுமில்லை
உன் ஔடதத்தில் அமைதியில்லை!
ஏன்? என்ற கேள்விக்கு பதிலுமில்லை!
மவுனமாய் மறுகுகின்ற மனமே
மயக்கம் தீர மருந்திருந்தால்

மரிக்கும் முன் தருவாயா?
அருமைமமைமைமை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தணியுமோ உன் தாகம்…?

மதி கெட்ட மானுடரே…..
மதி மயக்கம் தீராதோ...?
விதி விட்ட வினையாலே
வீதி முடக்கம் தீராதோ...?

மண்ணில் பிறந்தால்
மரணம் நிச்சயம்……!
கரணம் தப்பினால் மரணம்…!
சத்திய வாக்கில்
அனித்தியம் இல்லை…!
அன்று….
நிச்சயிக்கப்பட்டது திருமணம்
வாழ்வில் திருப்பம்…..
உறவை வளர்த்தோம்!
இன்று…
நிச்சயிக்கப்பட்டது மரணம்
வாழ்வில் திருப்பம்…
உறவை இழந்தோம்!
முதுமையில் மரணம் மனதை விதைக்கலாம்!
பிணியால் மரணம் மனதைச் சிதைக்கலாம்!
வறுமையால் மரணம் மனதை கலைக்கலாம்!
மனிதனால் மரணம் மனதை மறைக்கலாம்!
ஓ… என் தாய் திரு நாடே….
மறத் தமிழா….? மறத் தமிழா…? என்று…
தமிழைத்தான் மறந்து விட்டாய்…
தமிழனையும் மறைப்பாயோ……?
தமிழ் மண்ணைத்தான் சிதைத்து விட்டாய்……
தமிழ் கண்ணையும் அழிப்பாயோ….?
அறத்தால் நின்றாலும்
சிரத்தால் சிந்தியது
சீர்கேட்டை மாற்ற வந்த
சின்னவரின் இரத்தமன்றோ…?
பாலாறும் ஓடவில்லை…
காவிரியும் பாயவில்லை….
தேனாற்றின் கரையெல்லாம்
வெள்ளோட்டம் பார்ப்பதற்கு
எம் இரத்தத்தை கேட்பாயோ
எம் தாயே… பூதேவி……!
சிந்திய வியர்வைகள்
வேள்வித் தீயாய் எரிந்தாலும்….
அடங்காதா உன் தாகம்
இரத்தம் சிந்த சிந்தத்தான்

தணியுமோ உன் தாகம்…?
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெளிவு!

வெள்ளம் குழை மோத
பள்ளம் தரை மீற
வண்ணம் தெளிவானால்
எல்லாம் அழகாகும்!

உள்ளம் அலை மோத
கள்ளம் கரை மீற
எண்ணம் தெளிவானால்

எல்லாம் அழகாகும்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க்கையில் காதல்....


பத்தில் காதல்...
பருவத்தை சிதைக்க
பகுத்தறிவைச் சாய்த்திடுமே!

இருபதில் காதல்....
இம்சையாய் வதைக்க
இச்சையில் கழிந்திடுமே!

முப்பதில் காதல்.....
முத்தமிழ் படிக்க
மூவுலகும் மறந்திடுமே!

நாற்பதில் காதல்....
நானிலம் சிறக்க
நம்பிக்கை விதைத்திடுமே!

ஐம்பதில் காதல்....
ஐக்கியம் கிடைக்க
ஐஸ்வர்யம் தந்திடுமே!

அறுபதில் காதல்....
அனுதினம் ருசிக்க
அகிலமும் ரசித்திடுமே!

எழுபதில் காதல்...
ஏகாந்தம் படைக்க
ஏக்கமாய் மாறிடுமே!

எண்பதில் காதல்...
எண்திசை போற்ற
ஏழிசை மீட்டிடுமே!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அலை....

கடலின் அலையில்
துள்ளும் உள்ளம்!
வாழ்க்கை அலையில்
துவளும் உள்ளம்!
எண்ண அலையில்
துளிரும் உள்ளம்!
அலை பாயா நேரம்
உயிர் துடிக்காதோ...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரழகு.....

வாழ்க்கை என்பது
காதலில் அழகு...
வாழ்க்கை என்பது
அன்பினில் மிக அழகு....
வாழ்க்கை என்பது
பண்பினில் மிக மிக அழகு...
வாழ்க்கை என்பது
கொடுப்பதில்...
விட்டுக் கொடுப்பதில் பேரழகு!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொய்யுலகம்....

சிரித்தாலும் பேசும்
அழுதாலும் பேசும்
பொய்யுலகம்....!

வாழ்ந்தாலும் தூற்றும்
தாழ்ந்தாலும் தூற்றும்
பொய்யுலகம்...!

ஏன் என்று கேட்டால்...?
ஏத்தமாய் பார்க்கும்
பொய்யுலகம்...!

மெய்யுலகம் என்றால்
என்னவென்றே அறியாத பொய்யுலகம்...!

ஒத்தையாய் நின்றவன்
ஓங்காரமாய் ஒலிக்கின்றான்...
தத்தையாய் பெண்ணவள்
தத்தளித்து தவிக்கின்றாள்...!
கத்தையாய் பணமிருந்தும்
கழிவிரக்கம் இல்லாமல்
கொடுமையாய் பழித்திருக்கும்
கொடும்பாவம் செய்வதற்கு
மனிதராய் பிறக்காமல்
மரணித்து விடலாமே...!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூ...........

பூக்கும் பூக்கள்
படிக்கும் பாக்கள்
மனதில் என்றும் மலர்ச்சியே...!

தாமரைப்பூ பூத்தால்
தடாகம் சிரிக்கும்!

அல்லிப்பூ பூத்தால்
ஆதவன் சிரிக்கும்!

மல்லிப்பூ பூத்தால்
மங்களம் சிரிக்கும்!

ரோஜாப்பூ பூத்தால்
காதல் சிரிக்கும்!

முல்லைப்பூ பூத்தால்
முற்றங்கள் சிரிக்கும்!

கன்னிப்பூ பூத்தால்
கற்பனை சிரிக்கும்!

நட்புப்பூ பூத்தால்
நானிலம் சிரிக்கும்....
நவரசம் பிறக்கும்....
நலம் பாடும் பாட்டில்
நகைச்சுவை மீறீ
நிம்மதி வந்தால்.....
நித்திய மல்லியாய்....
வாழ் நாள் சிரிக்க...
வாழ்க்கையும் இனிக்கும்!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள், நன்றி.
 
Last edited:
Top