All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Women Health

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ் ,

பெண்களாகிய நமக்கு எத்தனையோ பிரச்சினைகள்... மனரீதியாக, உடல்ரீதியாக... அதை நீக்குவதற்கான வழிமுறைகளை இங்கே விவாதிக்கலாம்...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி நோய் உண்டாக்கி விடுகின்றன..

நாமும் அவசரத்திற்கு தகுந்த காரணத்தை ஆராயாமலும், அதற்கு உண்டான நல்ல மருத்துவரை நாடாமால் நாமே மருந்துக்கடைக்குப் போய் நமது பிரச்சினைகளைக் கூறி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் நோய் சில சமயம் குணமாவதைப் போலத் தெரிந்தாலும் மீண்டும் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினால் நமது உடம்பை நோய் தாக்குகிறது. ஒவ்வொருவரும் நேரத்திற்கும் அதுவும் அவரவருக்கு ஏற்ற உணவு வகைகளை உண்டுவந்தால் நோய் எளிதில் நம்மைத் தாக்க முடியாது.

ஒரு வாரத்திற்கு உணவு முறைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளேன். நோய் வாய்ப்பட்டவர்களும், சாதாரணமானவர்களும் இந்த முறையைக் கடைப்பிடித்து சாப்பிட்டு வந்தால் இதன் உண்மையை உணரலாம்.

திங்கட்கிழமை

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு உடம்பு நன்றாக இருக்கும். இதனால் உடல் சூடு தணியும். மலம் இளக்கமாக போகும். தேகம் சம நிலை அடையும்.

பின்னர் ஏழு மணிக்கு அருகம்புல் சாறு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். மூன்று மணிக்கு சுக்கு, கொத்தமல்லி கலந்து காபி குடிக்கலாம். பதினோறு மணிக்கு பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் அல்லது பேரிச்சம்பழம் ஐம்பது கிராம் அல்லது திராட்சை நூறு கிராம் அல்லது வாழைப்பழம் இரண்டு சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், ஒரு கப் ஏதாவது கீரை, இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், இரண்டு டம்ளர் மோர், இரண்டு பேரிச்சம் பழம் மட்டும்.

மாலை நான்கு மணிக்கு கொண்டைக் கடலை அல்லது மொச்சை வேகவைத்தது ஒரு கப், அத்துடன் ஒரு டம்ளர் சுக்கு காபி. இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி. ஒன்று அல்லது இரண்டு வாழை அல்லது பேரிச்சம் பழம், சிறிதளவு தேங்காய்த் துண்டு.

செவ்வாய்க்கிழமை

வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எலுமிச்சம் பழம், இஞ்சி, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். ஒன்பது மணிக்கு கேழ்வரகுப் புட்டு, வாழைப் பழம் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், பதினோறு மணிக்கு கேரட்சாறு ஒரு டம்ளர் மட்டும். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், வாழைத் தண்டு, முருங்கைக் கீரை ஒரு கப், மிளகு ரசம் மற்றும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.

மாலை நான்கு மணிக்கு எள், ஏலக்காய், வெல்லம் கலந்த எள் உருண்டை இரண்டு மற்றும் ஒரு கப் காய்கறி சூப். இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப்சாதம், வெந்தயக் குழம்பு அல்லது சீரகக் குழம்பு, இரவு படுக்கப் போகும் முன்பு பப்பாளி அல்லது மாம்பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம்.

புதன் கிழமை

வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு ஒரு டம்ளர் வேப்பிலை சாறு, மிளகு, சீரகம் கலந்து சாறு குடிக்கலாம். ஒன்பது மணிக்கு பைன் ஆப்பிள் சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், மிளகு ரசம், அகத்திக் கீரை, சுண்டைக்காய் கூட்டு, மாலை நான்கு மணிக்கு ஒரு டம்ளர் பாகற்காய் சூப் குடிக்கலாம். இரவு ஏழு மணிக்கு எலுமிச்சம் சாதம் ஒன்று அல்லது இரண்டு கப், பீட்ரூட் பொறியல், பேரிச்சம் பழம் இரண்டு சாப்பிடலாம்.

வியாழக்கிழமை

வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு வெண் சணி சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு வெண் பொங்கல் ஒரு கப், மிளகு, கறி வேப்பிலை துவையல். பதினோறு மணிக்கு ஏதாவது ஒரு பழம். மதியம் ஒருமணிக்கு ஒரு கப் கோதுமை சாதம், காய்கறி சாம்பார். பேரிச்சம் பழம் இரண்டு அல்லது ஏதாவது ஒரு பழம். மாலை நாலரை மணிக்கு வேக வைத்த சுண்டல் ஒரு கப் மற்றும் சுக்கு காப்பி, இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், பப்பாளித்துண்டு ஒரு கப் மற்றும் ஒரு டம்ளர் பால் மட்டும்.

வெள்ளிக்கிழமை

வழக்கம்போல காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை ஏழு மணிக்கு துளசிடீ, ஒன்பது மணிக்கு வெந்தயம் கலந்த இட்லி- நான்கு. மல்லி சட்னி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறிகள் இரண்டு கப், ஒரு கப் அவல் (தேங்காயு டன்), மாலை நாலரை மணிக்கு சுண்டல் ஒரு கப் அல்லது முளைகட்டின தானியம் ஒரு கப், ஒரு டம்ளர் கோதுமைப்பால், இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தி, காய்கறி வேகவைத்தது ஒரு கப், ஏதாவது பழம்.

சனிக்கிழமை

தண்ணீர். காலை ஏழு மணிக்கு இஞ்சி, நல்ல வெல்லம், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய நீர் ஒரு டம்ளர். ஒன்பதுமணிக்கு பழத்துண்டுகள் கலந் தவை இரண்டு கப், மதியம் ஒரு மணிக்கு ஒரு கப் சாதம் அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மோருடன் வெங்கா யம் ஊறவைத்தது ஒரு டம்ளர், அவரைக்காய், வாழைப் பொறியல் அல்லது கூட்டு, மாலை நான்கு மணிக்கு சாத்துக்குடி தேன் கலந்த சாறு ஒரு டம்ளர். இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், துளசி குடிநீர் ஒரு டம்ளர் அல்லது பட்டினி இருக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை

வழக்கம்போல தண்ணீர். காலை ஏழு மணி - அருகம்புல், வேப்பிலை, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு கேரட் சாறு ஒரு டம்ளர், காலை பதினோறு மணிக்கு கார அவல் ஒரு கப், இனிப்புப் பழங்கள் இரண்டு கப், காய்கறி சாலட் ஒரு கப், தேங்காய், பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடலாம். மாலை நான்கு மணிக்கு ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப், ஏதாவது ஒரு பழம். இவ்வாறு அறுசுவை உணவுகளை உண்டுவந்தால் வாதம், பித்தம், கபம் சமநிலையிருந்து நோய்வராமல் நோய் எதிர்ப்புச்சக்தி தானாகவே கிடைக்கும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மீன் வகைகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். கோழிக்கறி, இறால் மீன், கருவாடு வகைகள் உடம்பிற்கு சூட்டை ஏற்படுத்தி நோய் வர வழிவகுக்கும். அதை தவிர்ப் பது உடம்பிற்கு நல்லது.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள்

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை..
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.

3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்க இவற்றை செய்யலாம்....

• சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

• இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

• பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

• குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி....

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்...

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்


பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


வெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்துவத் தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இது மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது. மட்டுமின்றி வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில், மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

இது உணவில் பல்வேறு முறைப்படி சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருளுக்கு மணத்தை ஊட்டுவது மட்டுமின்றி, சத்துக்களையும் தருகிறது. கறி, கூட்டு, தோசை, இட்லிகளிலும், சாம்பார்பொடி, ரசப்பொடி, மல்லி, மஞ்சள் இவைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு குழம்புகளில் சேர்க்கப்படுகிறது. பேக்கரி, பிஸ்கட், ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயம் பயன்படுகிறது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் "ஏ" போன்றவைகளும் அடங்கியுள்ளன.

பொருளாதாரப் பயன்கள்:

வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது.

மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது.

வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.

சீயக்காய் தூளில் வெந்தயம் சேர்க்கப்படுகிறது.

வெந்தயத்தின் தன்மைகள்:

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

சித்த யுனானி முறைகளில் வெந்தயம்:

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்:

சீதபேதி குணமாக:-

20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும்.

சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும்.

வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று வலி, பொருமல் நீங்க:-

மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.

இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.

வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.

ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.

இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கணைச்சூடு நீங்க:-

வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.

20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.

மாதவிடாய் வயிற்று வலி நீங்க:-

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.

வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

உடல் பலம் ஏற்பட:-

200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.

தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படும்.

முகப்பரு நீங்க:-

ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மறையும்.

பேன், பொடுகு நீங்க:-

தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.

பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வர தோல் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் இந்த களி.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!




பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்

கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .

பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்





சிறிய குழந்தைகளின் காய்ச்சலை குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் அல்லது ஸ்பாஞ் குளியல் அளியுங்கள். இது உடலின் உஷ்ணத்தை சீர்படுத்தும். சிறிய குழந்தைகள் என்றால் தினமும் 2 அல்லது 3 முறை ஸ்பாஞ் குளியலில் ஈடுபடுத்துங்கள். சாதாரண நீரில் ஒரு துணியை நனைத்து, அதனை பிழிந்து கொள்ளுங்கள். பின் அக்குள், பாதம், கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஒற்றி எடுங்கள். இது உடலின் வெப்பநிலையை குறைக்கும். மற்றொரு வழியும் கூட உள்ளது; குளிர்ந்த ஈர துணியை குழந்தையின் நெற்றியில் வைத்து, அதனை சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.

குறிப்பு: மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உட்புற உடலின் உஷ்ணத்தை அதிகரித்து விடும்.

எலுமிச்சை:
4 எலுமிச்சையின் சாறு மற்றும் தோள்களுடன் 1 தேக்கரண்டி இஞ்சி துண்டுகளை ஒரு வாணலியில் போடவும். அதனை மூடும் அளவிற்கு போதுமான நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனை மூடி போட்டு மூடி விட்டு ஒரு 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் நீரை வடிகட்டவும். சரிசமமான அளவில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதனை நீர்மமாக்கவும். சுவைக்காக சற்று தேனையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இந்த சூடான லெமனேட் பானத்தை உங்கள் குழந்தைக்கு தினமும் சில முறை கொடுக்கவும்.


குறிப்பு: 1 வருடத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு தேனுக்கு பதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.



தேன் :
1 வயது அல்லது மேலே உள்ள குழந்தைகள் பொதுவான சளி அல்லது இருமலால் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சையாக இருப்பது தேன். 2 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கொள்ளவும். இதை குழந்தைகள் குணமடையும் வரை சில மணிக்கு ஒரு முறை கொடுத்து வரவும். வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் நீங்கி, நெஞ்சு வலி குறையும்.

குறிப்பு: 1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டும். அதற்கு காரணம் தேனில் உள்ள பாக்டீரியா குழந்தை பருவத்துக்குரிய கிளாஸ்டிரீயம் நச்சேற்றத்தை உருவாக்கலாம்.

ஆரஞ்சு:
ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி, சளியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இருமல், தொண்டைப் புண் மற்றும் ஒழுகும் மூக்கு போன்ற அறிகுறிகளைப் போக்க, இது நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும். 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 1 முதல் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சிறிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் அளவிலான தண்ணீரை கலந்து, சீரான இடைவெளிகளுள் கொடுக்கவும். பெரிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை அப்படியே உண்ணச் சொல்லலாம். இது வைட்டமின் சி உட்கொள்ளுதலை அதிகரிக்கும்.

இஞ்சி:
6 கப் தண்ணீர், ½ கப் மெல்லியதாக நறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் 2 லவங்கப்பட்டையை ஒரு வாணலியில் போடவும். குறைந்த தீயில் அதனை 20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். பின் வடிகட்டவும். அதனுடன் பச்சை தேன் அல்லது சர்க்கரையை கலக்கவும். இதனை உங்கள் குழந்தைக்கு தினமும் பல தடவை கொடுக்கவும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதனுடன் சரிசமமான அளவு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

தாய்ப்பால்
:
குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்கள் நோய்வாய் பட்டிருக்கும் போது, தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும். தொற்றுக்களை எதிர்த்து போராடி, சீக்கிரமாகவே குணமடைய இது தனித்துவமான சமநிலை அளவில் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கும். சளி அல்லது இருமலை உண்டாக்கும் தொற்றை விரட்ட, அதுவும் 6 மாதத்திற்கு குறைவான குழந்தை என்றால், அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer)

கருப்பை வாய் புற்றுநோயானது கருப்பையை பிறப்புப் பாதையுடன் (யோனி) இணைக்கும் கருப்பையின் அடிப்பகுதியான கருப்பை வாயில் தொடங்குகிறது. கருப்பை வாயின் மேல்பகுதி எண்டோசெர்விக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது சுரக்கும் தன்மையுடைய செல்களைக் கொண்டுள்ளது.கருப்பை வாயின் கீழ்பகுதி எக்டோசெர்விக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது செதிள் செல்களைக் கொண்டுள்ளது.

உருமாற்ற மண்டலம் எனும் பகுதியில் தான் இந்த இரண்டு செல்களும் (சுரக்கும் செல்கள் மற்றும் செதிள் செல்கள்) ஒன்றுக்கொன்று சந்திக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோய், பெரும்பாலும் உருமாற்ற மண்டலத்தில் உள்ள செல்களில் தான் உருவாகிறது.

கருப்பை வாய் புற்றுநோயின் மிகப் பொதுவான வகை ஸ்க்வேமஸ் செல் புற்றுநோய் (10 இல் 9) ஆகும். இது எக்டோசெர்விக்ஸில் உள்ள செதிள் செல்களிலிருந்து தொடங்குகிறது, பெரும்பாலும் உருமாற்ற மண்டலத்தில் தான் உருவாகிறது.

மீதமுள்ள 10% கருப்பை வாய் புற்றுநோய்கள் அடினோ புற்றுநோயாகும். இது எண்டோசெர்விக்ஸில் உள்ள சுரப்பி செல்களிலிருந்து அபிவிருத்தியடைகிறது.கருப்பை வாய் புற்றுநோயில் அடினோஸ்க்வேமஸ் புற்றுநோய் என்பது அரிய வகையாகும்.ஆரம்பத்தில் செல்கள் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஏற்படுத்தும், இந்த மாற்றங்களை PAP சோதனை மூலம் கண்டறியலாம்.

அனைத்து கருப்பை வாய் புற்றுநோய்களும் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) உடன் தொட்ரபுடையது. இருப்பினும், HPV வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதில்லை. ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற இடங்களில் கருப்பை வாய் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகளில் 84% இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) ஆகும். பாலியல் செயல்பாடுகளின் மூலமாகவே HPV பரவுகிறது, 75% பெரியவர்களுக்கு HPV வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கையில் ஒரு சிறிய சதவீத மக்களுக்கு மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழக்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிற காரணிகளாலும் புற்றுநோய் ஏற்படலாம்.

கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் சில பின்வருமாறு:
  • ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் கூட்டாளிகள் – ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டாளிகளுடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் HPV மற்றும் பிற பால்வினை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • ஆரம்ப பாலியல் செயல்பாடு – இளம் வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கூட HPV மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து ஏற்படலாம்.
  • பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் – உங்களுக்கு HPV மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் இருந்தால் பிற உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • புகைப்பிடித்தல் – புகைப்பிடித்தல் செதிள் செல் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

மற்ற புற்றுநோய்கள் போன்றே கருப்பை வாய் புற்றுநோய்க்கும் ஆரம்ப அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. முன்னேறிய கட்டத்தில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்:

  • உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் கசிதல், அல்லது மாதவிடாய் சுழற்சிக்கு இடையில் இரத்தப்போக்கு, அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு இரத்தப்போக்கு.
  • பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் போன்ற துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் வெளியேறுதல்
  • விவரிக்கமுடியாத இடுப்பு வலி அல்லது பாலுறவின்போது வலி ஏற்படுதல்.
நோய் கண்டறிதல்

கருப்பை வாய் புற்றுநோய்க்கான சோதனையை பெண்கள் தங்களது 21 வயதிலிருந்தே தொடங்க வேண்டுமென்று பெரும்பாலான மருத்துவ வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. பயன்படுத்தப்படும் சோதனைகளில் சில பின்வருமாறு:

  • பேப் ஸ்மியர் – அசாதாரண மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கருப்பை வாயில் உள்ள செல்கள் உரசி தேய்க்கப்படும் மற்றும் துலக்கப்படும். இந்த சோதனை மூலம் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை கண்டறியலாம்.
  • HPV DNA சோதனை – HPV ஸ்பெக்ட்ரம் உள்ளதா என்பதை சோதிக்க கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படும்.
மேலே கூறப்பட்ட சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக இருந்தால், நோயை உறுதிசெய்ய மற்றும் புற்றுநோயின் நிலையை அறிய விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். கண்டறியும் சோதனைகள் பின்வருமாறு:
  • கோல்போஸ்கோப்பி – இது ஒரு சிறப்பான உருப்பெருக்கி கருவியாகும். அசாதாரண செல்களை சோதிக்கப் பயன்படுகிறது.
  • பன்ச் பயாப்ஸி – ஒரு கூர்மையான கருவி கருப்பை வாய் திசுவின் மாதிரியை எடுக்கப் பயன்படுகிறது.
  • கருப்பவாயுள் சுரண்டல் – கருப்பை வாயிலிருந்து திசு மாதிரியை சுரண்ட ஸ்பூன் போன்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
  • எலெக்ட்ரிக்கல் வயர்-லூப் – திசு மாதிரியை எடுக்க ஒரு மெல்லிய குறைந்த மின்னழுத்த மின்சார கம்பி பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது உள்ளூர் மயக்கமருந்து வழங்கப்படும்.
  • கோன் பயாப்ஸி – கருப்பை செல்களின் ஆழமான அடுக்குகளை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது பொதுவான மயக்கமருந்து வழங்கப்படும்.
நோய் கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட பின்னர், சிகிச்சை அட்டவணையை திட்டமிட நோயின் நிலையை அறிவதற்கான சோதனை நடத்தப்படும். புற்றுநோய் நிலையை அறிய, மருத்துவர் பின்வருபவற்றை கேட்கலாம்:
  • படமாக்கல் – எக்ஸ்-ரே, CT ஸ்கேன், எம்.ஆர்.ஐ, மற்றும் பாசிட்ரான் உமிழ்வு ஸ்கேன் (PET ஸ்கேன்) ஆகியவை செய்யப்படுகின்றன
  • விஷுவல் பரிசோதனை – சிறந்த நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி நீர்ப்பை மற்றும் கருப்பையின் உள்பகுதி பார்வையிடப்படுகிறது.
கருப்பை வாய் புற்றுநோயின் நிலைகள் பின்வருமாறு:
  • நிலை I – புற்றுநோய் கருப்பை வாயில் மட்டும் உள்ளது.
  • நிலை II – கருப்பை வாய் மற்றும் யோனியின் மேல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளன.
  • நிலை III – புற்றுநோய் யோனியின் கீழ் பகுதி அல்லது இடுப்புக்கூட்டின் உட்சுவர்களில் பரவிவிட்டது.
  • நிலை IV – புற்றுநோயானது சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற அருகில் உள்ள உறுப்புகளுக்கு இடமாறிவிட்டது அல்லது நுரையீரல், கல்லீரல் அல்லது எலும்பு போன்ற பிற பாகங்களில் பரவிவிட்டது.
சிகிச்சை மற்றும் தடுப்பு
சிகிச்சை
கண்டறியப்பட்ட புற்றுநோய் நிலையின் அடிப்படையிலே சிகிச்சை திட்டம் மற்றும் முன்கணிப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலே கண்டறியப்பட்ட புற்றுநோயை எளிய கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை மற்றும் கருப்பை வாயை மட்டும் அகற்றல்) அல்லது முழுமையான கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை, கருப்பை வாய், பிறப்புறுப்பின் பகுதி மற்றும் நிணநீர் முனைகள் ஆகியவற்றை அகற்றல்) மூலம் கட்டுப்படுத்தலாம். அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் மீதமுள்ள புற்றுநோய் செல்களை கொள்வதற்கு கீமோதெரபியுடன் இணைந்து கதிர்வீச்சு சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். நோய் முற்றிய நிலையில் கீமோதெரபி மருந்துகள் அதிக அளவில் தேவைப்படலாம்.

தடுப்பு
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்:
  • HPV-க்கு எதிரான தடுப்பூசி – தடுப்பூசி மூலம் HPV நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம், 9 முதல் 26 வயதுடைய பெண்களுக்கு இந்த தடுப்பூசியை போடலாம். நபர் பாலியல் செயல்பாடுகளில் நாட்டம் அதிகரிப்பதற்கு முன்பு இந்த தடுப்பூசியை போட்டால் தடுப்பூசி நன்கு வேலை செய்யும்.
  • வழக்கமான பேப் பரிசோதனைகள் – வழக்கமான பேப் பரிசோதனைகளை 21 வயதில் தொடங்கி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் சோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதில் உதவும் புற்றுநோய் செல்கள் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை கண்டறிய முடியும்.
  • பாதுகாப்பான பாலுறவு – ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு வைத்துகொள்வதை தவிர்க்க வேண்டும், உடலுறவின்போது பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும் மற்றும் உடலுறவு வைத்துகொள்ளும் வயதை தாமதப்படுத்த வேண்டும்.
  • புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
சிக்கல்கள்
கருப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் சிக்கல்கள் நிறைய உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:
  • புற்றுநோய் உடலில் பரவுதல், உடலின் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல்.
  • சூதகநிற்புக்குமுன் பெண்களின் மாதவிடாய் நிற்கக்கூடும்.
  • உடலுறவின் போது வலி ஏற்படுதல் மற்றும் புறப்புறுப்பு வறட்சி.
  • இடைவிடாது முதுகு வலி.
  • சிறுநீர் அல்லது மலம் கசிதல்.
  • கால் வலி.
  • பசியின்மை மற்றும் எடை இழப்பு.
  • குமட்டல் மற்றும் வாந்தி.
  • முடி கொட்டுதல்.
  • வாய் புண்கள்.
  • தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்தல்.
  • சிராய்ப்புப் புண் அல்லது இரத்தப்போக்கு அதிகரித்தல்.
அடுத்த நிலைகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்:
  • பிறப்புறுப்பிலிருந்து எதிர்பாராத அல்லது விவரிக்க முடியாத இரத்தப்போக்கு
  • காரணமற்ற எடை இழப்பு
  • தொடர்ந்து முதுகு வலி
  • உடலுறவின் போது வலி
உங்கள் நோய் மற்றும் சிகிச்சை திட்டத்தைப் புரிந்துகொள்ள மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். நோய் பற்றிய செய்திகள் மற்றும் சிகிச்சை சிக்கல்களை சமாளிக்க குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவு குழுக்களின் ஆதரவை நாடவும்.
அபாய நிலைகள்
பின்வரும் அறிகுறிகள் இருப்பின் அவற்றை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும்:
  • பிறப்புறுப்பில் அசாதாரண இரத்தப்போக்கு.
  • பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசக்கூடிய நீர்த்த, இரத்தம் போன்ற திரவம் கசிதல்.
  • காரணமற்ற சிறுநீரக பிரச்சனை.
  • சிறுநீர் கழிக்கும்போது வலி.
  • தொடர்ந்து லேசான முதுகுவலி மற்றும் கால்களில் வீக்கம்.
  • வயிற்றுப்போக்கு அல்லது மலக்குடல் இரத்தப்போக்கு.
  • காரணமற்ற எடை இழப்பு, சோர்வு மற்றும் பசியின்மை.


 
கருப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer)

கருப்பை வாய் புற்றுநோயானது கருப்பையை பிறப்புப் பாதையுடன் (யோனி) இணைக்கும் கருப்பையின் அடிப்பகுதியான கருப்பை வாயில் தொடங்குகிறது. கருப்பை வாயின் மேல்பகுதி எண்டோசெர்விக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது சுரக்கும் தன்மையுடைய செல்களைக் கொண்டுள்ளது.கருப்பை வாயின் கீழ்பகுதி எக்டோசெர்விக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது செதிள் செல்களைக் கொண்டுள்ளது.

உருமாற்ற மண்டலம் எனும் பகுதியில் தான் இந்த இரண்டு செல்களும் (சுரக்கும் செல்கள் மற்றும் செதிள் செல்கள்) ஒன்றுக்கொன்று சந்திக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோய், பெரும்பாலும் உருமாற்ற மண்டலத்தில் உள்ள செல்களில் தான் உருவாகிறது.

கருப்பை வாய் புற்றுநோயின் மிகப் பொதுவான வகை ஸ்க்வேமஸ் செல் புற்றுநோய் (10 இல் 9) ஆகும். இது எக்டோசெர்விக்ஸில் உள்ள செதிள் செல்களிலிருந்து தொடங்குகிறது, பெரும்பாலும் உருமாற்ற மண்டலத்தில் தான் உருவாகிறது.

மீதமுள்ள 10% கருப்பை வாய் புற்றுநோய்கள் அடினோ புற்றுநோயாகும். இது எண்டோசெர்விக்ஸில் உள்ள சுரப்பி செல்களிலிருந்து அபிவிருத்தியடைகிறது.கருப்பை வாய் புற்றுநோயில் அடினோஸ்க்வேமஸ் புற்றுநோய் என்பது அரிய வகையாகும்.ஆரம்பத்தில் செல்கள் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஏற்படுத்தும், இந்த மாற்றங்களை PAP சோதனை மூலம் கண்டறியலாம்.

அனைத்து கருப்பை வாய் புற்றுநோய்களும் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) உடன் தொட்ரபுடையது. இருப்பினும், HPV வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதில்லை. ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற இடங்களில் கருப்பை வாய் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகளில் 84% இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) ஆகும். பாலியல் செயல்பாடுகளின் மூலமாகவே HPV பரவுகிறது, 75% பெரியவர்களுக்கு HPV வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கையில் ஒரு சிறிய சதவீத மக்களுக்கு மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழக்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிற காரணிகளாலும் புற்றுநோய் ஏற்படலாம்.

கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் சில பின்வருமாறு:
  • ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் கூட்டாளிகள் – ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டாளிகளுடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் HPV மற்றும் பிற பால்வினை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • ஆரம்ப பாலியல் செயல்பாடு – இளம் வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கூட HPV மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து ஏற்படலாம்.
  • பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் – உங்களுக்கு HPV மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் இருந்தால் பிற உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • புகைப்பிடித்தல் – புகைப்பிடித்தல் செதிள் செல் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

மற்ற புற்றுநோய்கள் போன்றே கருப்பை வாய் புற்றுநோய்க்கும் ஆரம்ப அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. முன்னேறிய கட்டத்தில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்:

  • உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் கசிதல், அல்லது மாதவிடாய் சுழற்சிக்கு இடையில் இரத்தப்போக்கு, அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு இரத்தப்போக்கு.
  • பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் போன்ற துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் வெளியேறுதல்
  • விவரிக்கமுடியாத இடுப்பு வலி அல்லது பாலுறவின்போது வலி ஏற்படுதல்.
நோய் கண்டறிதல்

கருப்பை வாய் புற்றுநோய்க்கான சோதனையை பெண்கள் தங்களது 21 வயதிலிருந்தே தொடங்க வேண்டுமென்று பெரும்பாலான மருத்துவ வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. பயன்படுத்தப்படும் சோதனைகளில் சில பின்வருமாறு:

  • பேப் ஸ்மியர் – அசாதாரண மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கருப்பை வாயில் உள்ள செல்கள் உரசி தேய்க்கப்படும் மற்றும் துலக்கப்படும். இந்த சோதனை மூலம் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை கண்டறியலாம்.
  • HPV DNA சோதனை – HPV ஸ்பெக்ட்ரம் உள்ளதா என்பதை சோதிக்க கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படும்.
மேலே கூறப்பட்ட சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக இருந்தால், நோயை உறுதிசெய்ய மற்றும் புற்றுநோயின் நிலையை அறிய விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். கண்டறியும் சோதனைகள் பின்வருமாறு:
  • கோல்போஸ்கோப்பி – இது ஒரு சிறப்பான உருப்பெருக்கி கருவியாகும். அசாதாரண செல்களை சோதிக்கப் பயன்படுகிறது.
  • பன்ச் பயாப்ஸி – ஒரு கூர்மையான கருவி கருப்பை வாய் திசுவின் மாதிரியை எடுக்கப் பயன்படுகிறது.
  • கருப்பவாயுள் சுரண்டல் – கருப்பை வாயிலிருந்து திசு மாதிரியை சுரண்ட ஸ்பூன் போன்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
  • எலெக்ட்ரிக்கல் வயர்-லூப் – திசு மாதிரியை எடுக்க ஒரு மெல்லிய குறைந்த மின்னழுத்த மின்சார கம்பி பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது உள்ளூர் மயக்கமருந்து வழங்கப்படும்.
  • கோன் பயாப்ஸி – கருப்பை செல்களின் ஆழமான அடுக்குகளை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது பொதுவான மயக்கமருந்து வழங்கப்படும்.
நோய் கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட பின்னர், சிகிச்சை அட்டவணையை திட்டமிட நோயின் நிலையை அறிவதற்கான சோதனை நடத்தப்படும். புற்றுநோய் நிலையை அறிய, மருத்துவர் பின்வருபவற்றை கேட்கலாம்:
  • படமாக்கல் – எக்ஸ்-ரே, CT ஸ்கேன், எம்.ஆர்.ஐ, மற்றும் பாசிட்ரான் உமிழ்வு ஸ்கேன் (PET ஸ்கேன்) ஆகியவை செய்யப்படுகின்றன
  • விஷுவல் பரிசோதனை – சிறந்த நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி நீர்ப்பை மற்றும் கருப்பையின் உள்பகுதி பார்வையிடப்படுகிறது.
கருப்பை வாய் புற்றுநோயின் நிலைகள் பின்வருமாறு:
  • நிலை I – புற்றுநோய் கருப்பை வாயில் மட்டும் உள்ளது.
  • நிலை II – கருப்பை வாய் மற்றும் யோனியின் மேல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளன.
  • நிலை III – புற்றுநோய் யோனியின் கீழ் பகுதி அல்லது இடுப்புக்கூட்டின் உட்சுவர்களில் பரவிவிட்டது.
  • நிலை IV – புற்றுநோயானது சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற அருகில் உள்ள உறுப்புகளுக்கு இடமாறிவிட்டது அல்லது நுரையீரல், கல்லீரல் அல்லது எலும்பு போன்ற பிற பாகங்களில் பரவிவிட்டது.
சிகிச்சை மற்றும் தடுப்பு
சிகிச்சை
கண்டறியப்பட்ட புற்றுநோய் நிலையின் அடிப்படையிலே சிகிச்சை திட்டம் மற்றும் முன்கணிப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலே கண்டறியப்பட்ட புற்றுநோயை எளிய கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை மற்றும் கருப்பை வாயை மட்டும் அகற்றல்) அல்லது முழுமையான கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை, கருப்பை வாய், பிறப்புறுப்பின் பகுதி மற்றும் நிணநீர் முனைகள் ஆகியவற்றை அகற்றல்) மூலம் கட்டுப்படுத்தலாம். அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் மீதமுள்ள புற்றுநோய் செல்களை கொள்வதற்கு கீமோதெரபியுடன் இணைந்து கதிர்வீச்சு சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். நோய் முற்றிய நிலையில் கீமோதெரபி மருந்துகள் அதிக அளவில் தேவைப்படலாம்.

தடுப்பு
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்:
  • HPV-க்கு எதிரான தடுப்பூசி – தடுப்பூசி மூலம் HPV நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம், 9 முதல் 26 வயதுடைய பெண்களுக்கு இந்த தடுப்பூசியை போடலாம். நபர் பாலியல் செயல்பாடுகளில் நாட்டம் அதிகரிப்பதற்கு முன்பு இந்த தடுப்பூசியை போட்டால் தடுப்பூசி நன்கு வேலை செய்யும்.
  • வழக்கமான பேப் பரிசோதனைகள் – வழக்கமான பேப் பரிசோதனைகளை 21 வயதில் தொடங்கி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் சோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதில் உதவும் புற்றுநோய் செல்கள் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை கண்டறிய முடியும்.
  • பாதுகாப்பான பாலுறவு – ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு வைத்துகொள்வதை தவிர்க்க வேண்டும், உடலுறவின்போது பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும் மற்றும் உடலுறவு வைத்துகொள்ளும் வயதை தாமதப்படுத்த வேண்டும்.
  • புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
சிக்கல்கள்
கருப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் சிக்கல்கள் நிறைய உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:
  • புற்றுநோய் உடலில் பரவுதல், உடலின் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல்.
  • சூதகநிற்புக்குமுன் பெண்களின் மாதவிடாய் நிற்கக்கூடும்.
  • உடலுறவின் போது வலி ஏற்படுதல் மற்றும் புறப்புறுப்பு வறட்சி.
  • இடைவிடாது முதுகு வலி.
  • சிறுநீர் அல்லது மலம் கசிதல்.
  • கால் வலி.
  • பசியின்மை மற்றும் எடை இழப்பு.
  • குமட்டல் மற்றும் வாந்தி.
  • முடி கொட்டுதல்.
  • வாய் புண்கள்.
  • தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்தல்.
  • சிராய்ப்புப் புண் அல்லது இரத்தப்போக்கு அதிகரித்தல்.
அடுத்த நிலைகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்:
  • பிறப்புறுப்பிலிருந்து எதிர்பாராத அல்லது விவரிக்க முடியாத இரத்தப்போக்கு
  • காரணமற்ற எடை இழப்பு
  • தொடர்ந்து முதுகு வலி
  • உடலுறவின் போது வலி
உங்கள் நோய் மற்றும் சிகிச்சை திட்டத்தைப் புரிந்துகொள்ள மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். நோய் பற்றிய செய்திகள் மற்றும் சிகிச்சை சிக்கல்களை சமாளிக்க குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவு குழுக்களின் ஆதரவை நாடவும்.
அபாய நிலைகள்
பின்வரும் அறிகுறிகள் இருப்பின் அவற்றை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும்:
  • பிறப்புறுப்பில் அசாதாரண இரத்தப்போக்கு.
  • பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசக்கூடிய நீர்த்த, இரத்தம் போன்ற திரவம் கசிதல்.
  • காரணமற்ற சிறுநீரக பிரச்சனை.
  • சிறுநீர் கழிக்கும்போது வலி.
  • தொடர்ந்து லேசான முதுகுவலி மற்றும் கால்களில் வீக்கம்.
  • வயிற்றுப்போக்கு அல்லது மலக்குடல் இரத்தப்போக்கு.
  • காரணமற்ற எடை இழப்பு, சோர்வு மற்றும் பசியின்மை.

Very useful information. Thanks
 

Sudhamathi

New member
மாதவிடாய் வயிற்று வலிக்கு,

1 ஸ்பூன் கருஞ்சீரகம் , 1 ஸ்பூன் வெந்தயம் ,1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
மூன்றையும் வறுத்து இதனுடன் 1 ஸ்பூன் பனை வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .இதை அந்த நாளில் 2 வேளை 2 நாட்கள் அரை ஸ்பூன் சாப்பிட்டால் வலி இருக்காது .
1 ஸ்பூன் கருஞ்சீரகம் , 1 ஸ்பூன் வெந்தயம் ,1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
மூன்றையும் வறுத்து இதனுடன் 1 ஸ்பூன் பனை வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .இதை அந்த நாளில் 2 வேளை 2 நாட்கள் அரை ஸ்பூன் சாப்பிட்டால் வலி இருக்காது .
 
Top